-
நிழல் படம் எண் : 063
இந்த களத்தின்இந்த நிழல் படம் FloweR அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F063.jpg&hash=2b4f06392f1099be8aec7e8590512f0832373892)
-
நீ இல்லாதபோது நிம்மதி என்பேன்
நீ இல்லாதபோதுதான் நிம்மதியின்றி தவிக்கின்றேன்
நீ பேசாதபோது சந்தோசம் என்பேன்
நீ பேசாதபோதுதான் சந்தோசமின்றி தவிக்கின்றேன்
நீ கொஞ்ச மறுத்தால் சரி என்பேன்
கொஞ்சம் கெஞ்சிதான் கேட்கின்றேன் என்னுள்ளே
எனை கொஞ்சமாட்டாயா என்று....
உன்னால் நடிகனாய் ஆனேனே
உனக்கு பிடித்தவனாய் வாழ்வதற்கு.....
சுருங்கி விரியும் இதயம் உள்ளே
சுகமாய் நீயும் இருப்பதாலே
விரிந்து இருக்கும் வையம் எல்லாம்
விழியின் பார்வையாக விளங்கினாயே!!
கருப்பு வெள்ளை கண்ணின் உள்ளே
கண்ணே நீயும் இருப்பதாலே
கவலை பொங்கும் நேரத்திலும்
கண்ணீர் வடிக்க மறுக்கின்றேனே!!
என் விரல்களின் இடைவெளிகளில்
உன் விரல்கள் இருப்பதாலே
பெரிதாய் வளர்ந்த போதிலும்
நகம் வெட்ட நடுங்கினேனே!!
ருசியாய் பல இலையில் இருப்பினும்
பசியாய் நீயும் இருப்பதாலே
சுக்கு மிளகு திப்பிலி எல்லாம்
தித்திப்பாய் தான் தெரிகிறதே !!
அழகே இல்லா எனக்குள்ளே
அழகாய் நீயும் இருப்பதாலே
அழகே உன்னை காணும் போது
அழுக்கு ஆசைகள் என்னை கசக்கி போடுதே !!
பாய் தலையணை இருந்த போதிலும்
இரவின் நிலவு போல் நீ என்னுள் இருப்பதாலே
விடிய விடிய புரண்ட போதிலும்
தூக்கம் மட்டும் மறந்தேனே !!
அர்த்தம் இல்லா என் வாழ்வில்
அர்த்தமாய் நீ இருப்பதாலே
என் அருகே என்றும் இருப்பாயே
அன்பால் என்னை வெல்வாயே!!
உன்னுடன் வாழ ஆசைப்பட்டேன் தினம் தினம்
உன்னையே நினைத்து உருகுகிறது என் மனம்
நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு கணமும்
என் இதயத்தில் ரணம் ரணம்
-
நல்ல உடல் அமைப்பு கொண்ட
அவர்கள் செய்வது வெறும் ஏளனமே .
உன் வலி உணராத
அவர்கள் அல்லவா ஊனம் ...
சிந்தனை செய்யாத மூளையை
வைத்து கண்களால் சிந்தித்து
காதல் கொண்டு பின்பு தோல்வி காணும்
அந்த மனிதன் ஊனம் ...
சோம்பல் கொண்டு படுத்துறங்கி
அடுத்தவனை அடித்து பிடுங்கி
உடலை வளர்க்கும்
அவனிடம் உள்ளது ஊனம் ...
ஒரு உயிரின் மதிப்பு தெரியாமல்
கொலையும் கொள்ளையும் செய்து
கொடூரமும் மூர்க்கமும் வளர்க்கும்
அவனிடம் உள்ளது ஊனம் ...
நேர்மை என்பதை மறந்து
தன காரியம் சிறக்க குறுக்கு
வழியில் முன்னேறும்
அவனிடம் உள்ளது ஊனம் ...
உண்மை காதலை உணராதவர்கள்
நண்பனின் வேதனையை உணராதவர்கள்
குடும்பத்தின் தேவையை உணராதவர்கள்
இவர்கள் எல்லாம் கூட உண்மையில் ஊனம் தான் ...
நீ பிரம்மனின் கோளாறினால்
படைக்க பட்ட குழந்தை.
நீ இழந்தது கால்களை தான்
நம்பிக்கையை இல்லை ...
நீ சாதனை புரிவாய் .
சரித்திரம் படைப்பாய் .
காலத்தை வெல்லுவாய் .
ஊனமானது உடல் மட்டும் தான் ...
நீ களவு கொள்ளமாட்டாய் .
வன்முறையில் ஈடுபடமாட்டாய் .
நல்ல சிந்தனையை வளர்க்க தெரிந்த
சிறகொடிந்த பறவை நீ, கலங்காதே ...
உன் வேதனையை சாதனையாக்கு .
பல வெற்றிகள் உன் வாசல் கதவை தட்டும்போது
உண்மை காதல் கொண்டு உன் வாழ்க்கைத்துணை
உன்னை தேடிவருவாள் ...
உன் வாழ்க்கை பயணத்தை நம்பிக்கையோடு
தொடங்கி நேர்வழியில் நட
உன் அன்புக்கு அடிபணிந்து காலத்துக்கும்
உன் வாழ்வின் பயணம் நெடுக உன்னை பின்தொடர்வால் ...
ஊனம் உடலில் இருந்தால்
சாதனை !!
ஊனம் மனதில் இருந்தால்
வேதனை !!.
-
ஊனம் ஒரு குறை அல்ல
ஊனம் என்பது உடல் அளவில் தான்
மனது ஊனம் இலையேல்
வாழ்க்கையில் இறுதி வரை
எதிர் நீச்சல் போடலாம் ....
ஊனம் உள்ளவரை
கேள்வி செய்யும் மனிதனே !
உண்மையான ஊனம் ,
அவனால் எதும் சாதிக்க
முடியும்....
அவன் வலிகளை
தாங்கி கொண்டு சாதனை
செய்ய முயற்சி செய்யும் போது
அவனை தோள் தட்டிகொடுத்து
தைரியம் சொல்லும் போது
அவனுள் தன்னம்பிகை கூடும் ..
அவனுடைய வாழ்க்கைக்கு
பயன் உள்ளதாய் அமையும்
அப்படி செய்யும் பெண்மணியை
தன்னை பெற்ற தாய்க்கு
நிகராய் எண்ணுவான் .....
அவள் நண்பியாய் அவன்
வாழ்நாளும் முழுவதும்
தொடர முடியாது
இது காலத்தின் நீதி.....
அதே பெண்மணி அவன் வாழ்க்கை
துணைவியாய் இருந்தால்
அவன் வாழ்நாள் முழுவதும்
வெளிச்சத்தை அடைய முடியும் !
-
துள்ளித் திரியும் பருவத்தில்
எண்ணிலடங்கா வண்ண வண்ண கனவுகளுடன்
உன் காலடி தடத்தில் என் காலடி பதித்து
நடை தெரிந்தும் நடை பயின்ற நினைவுகள்
எனது கரத்தை உன் கையில் பற்றி
மணமேடையில் வளம் வரும் மன கனவு
மற்ற காதலர்களின் கண் பட்டதோ
இல்லை ஊரார் சொலடி பட்டதோ
இல்லை பெற்றோர் சாபம் தான் பலித்ததோ
இல்லை இது தான் விதியோ
கால்கள் இழந்தால் காதலும் இறந்துவிடும்
என்று எண்ணியவர்களின் முன்னே
வாழ்ந்து காட்ட உன் துணையாக நான் ...
முயற்சி இல்லையேல் வழி இல்லை
வலி இல்லையேல் வாழ்கை இல்லை
உனது கால்களாக நான் இருக்க
எனது எண்ணங்களாக நீ இருக்க
வெற்றி பாதையில் நாம் இருப்போம்
உண்மையான அன்புக்கும் காதலுக்கும்
உதாரணமாய் ....
-
காதல்....
இரண்டு இதயங்களில் துடிக்கும் ஒரே துடிப்பு...
நீ இல்லை எனில் நான் இல்லை என்று சொல்வதை விட
உணகுலே நான் என்று சொலுவது அழகு!!!
காதல்...
இரு மனங்களின் பொருத்தம்...
அவன் கண்கள் பார்க்க எனக்கு தாயகம்
எனநினில் நான் சோழ வருவதை மறந்து விடுவேனோ என்ற நடுக்கம்!!!
எனக்கு தெரியும் உயிரே.....
நிலவு காலை பொழுதில் வந்தாலும்...
நீ எபோழுதும் என் துடிபாய் இருபாய் என்று!!!!
-
நான் உன் பின்னால் இருக்கிறேன்
என்னை பத்திரமாக வாழ்க்கைப்பாதையில்
இட்டுச்செல் என நீயும் ,பின் தொடர்ந்து
நீ வருகிறாயென அறிந்து வழி நடத்த அன்புடன் நானும்
காலமெல்லாம் கைவிடமாட்டேன் என்று
உறுதி பூண்ட தினம் நம் மணநாள் அன்று
அம்மி மிதித்து ,அருந்ததி பார்த்து மணவறையை
மும்முறை நாம் வலம் வந்த கணத்தில் வெட்கமும்
,பயமுமாய் இமைகள் படபடக்க என் கைகளை
இறுக்கமாய் பிடித்திட்ட உன் கரங்கள்
சொல்லாமல் சொல்லிற்று என் மேலான உன் நம்பிக்கையை ..
நினைக்கவில்லை இப்படி ஓர் இன்னலை கனவிலும்
கண்டறியா சோதனை வேதனையை தந்துவிடுமென்று ..
உலகமரியா பேதையாய் இருந்தவள் நீ .
இல்லமே பெரிதென்று என்னுலகம் நீங்களே என்றாய் ..
நம்பியவளின் நம்பிக்கையை சிதறடித அந்த நாள் ........
எனை தாங்கும் தூண்களாய் நீயாக வேண்டும்
என்ற என் எண்ணம் ஈடேரிற்று என் கால்கள்
துவண்டு நான் சரிந்து போகையில் ..
எனை அணைத்திட்ட உன் கரங்களில் தாயை உணர்ந்தேன் .
என்னை சேயாக்கி ,தாயாகி ,யாதுமாகி நின்றாய் ...
சேமிப்பு கரைந்திட்ட நொடியில் உன் சிரிப்பில்
எனை கரையவைத்தாய் உன்னத பிறவியடி நீ ..
கொண்டவனின் நிலை கண்டு ஓடாமல் தனை கண்ட
அவனின் நலம் காத்திட்டாய் ...உணர்விழந்த என் கால்களுக்கு
உணர்வு மீட்கும் போராட்டமும் அரங்கேறிற்றுமீள காத்திருக்கும்
உன்னை கண்டு என் நெஞ்சு விம்முகிறதடி ஏக்கத்தில்
இன்று நினைக்கின்றேன் உனக்கான என்னுடைய இன்றைய காத்திருப்பு
அன்று உனக்கும் ஏக்கத்தையே தந்திருக்குமென ...
காத்திருப்பது சுகமே எனினும் தனிமை கொடுமையன்றோ
உன் வரவுக்காய் காத்திருக்கும் தாயை தேடும் பிள்ளையானேன்
இன்று உன் கைபிடித்து வருகையில் உணர்கிறேன் உன் குழந்தையாக
இனி நீ இட்டுச்செல்லும் வழிகளை மட்டுமே என் இதயம் தொடரும் என் அன்பே ....