நிழல் படம் எண் : 064
இந்த களத்தின்இந்த நிழல் படம் HumaNoid அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F064.jpg&hash=40929f170ff2abfb659032fbf5217812195f82de)
இயற்க்கை இறைவனின் வரப்பிரசாதம்
இறைவனின் முதல் குழந்தை
இறைவன் படைப்பின் அதிசயம்
அதில் எத்தனை அழகிய படைப்புகள் ...
காலையில் கதிரவன் கண்திறக்க
இரவு மெல்ல இமை மூட
பசுமையான காலை பனி
பாதையை மறைக்கும் மூடுபனி ...
சிறு சாரல் போல பனிபொழிய
மேனிஎங்கும் குளிரில் நடுங்க
என்னவனோடு கைகோர்த்து
கிளம்பிவிட்டேன் இயற்கையை ரசிக்க ...
குளிர்காணும் மரவேர்கள் ஆஹா ,
சிறுபுல்லின் மேல் பனித்துளி ஆஹா,
காலையில் மலரும் மலர்களின் வாசம் ஆஹா ,
என் மனமும் மணக்கிறது ...
காலையில் கிரிச்சிட்டு பறக்கும்
பறவைகளின் சங்கீதம் ஆஹா ,
வான் வெளியில் பிறந்த தூயகாற்று
சுவாசித்து பார்க்க ஆஹா அருமை ...
மோகம் கொண்டு அழைப்பு விடும்
வெண்மேகங்கள் ஆஹா ,
பூமிக்கு இறைவன் போடும்
வாசம் இல்லாத சாம்பராணி புகை ...
அழகிய அந்த பனிவிழும் காலை நேரம்
உன் கைப்பற்றி நான் இயற்கையை ரசிக்க
என்னை அறியாமல் தொலைத்தேனடா
முழுமையாய் என் இதயத்தை ...
என்னவனே காலை பூக்களோடு பேசிப்பார் ,
பனித்துளி கொண்ட இலையை தொட்டுப்பார் ,
பறவைகளின் கீதம் கேட்டுப்பார் ,
உலகம் உன் வசம் ஆகும் ...
இயற்கையை !
காதலித்துப்பார் !
ஒரு தலையாகவாவது !
ஒரு தடவையாவது !