FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 05, 2015, 09:00:39 PM
-
கருவேப்பிலையின் மகத்துவம்
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11828683_1480486435582160_603086825852857602_n.jpg?oh=ef003dff90ae94a6edacbf9cb3421614&oe=5644096B&__gda__=1446388706_16b89bdcabf82e731a658e9043f82c5c)
உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
ஆனால், இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
சத்துக்கள்
நீர்ச்சத்து – 0.66 %
புரதம் – 6.1 %
கொழுப்பு – 0.1 %
மாவுச்சத்து – 0.16 %
நார்ப்பொருள் – 6.4 %
தாது உப்புக்கள் 4.2 %
100 கிராம் இலையில்
கால்சியம் – 810 மிலி கிராம்
பாஸ்பரஸ் – 600 மிலி கிராம்
இரும்புச்சத்து – 3.1 மிலி கிராம்
நிகோடினிக் அமிலம் – 2.3 மிலி கிராம், மேலும் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
மருத்துவ பயன்கள்
கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்க்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.
கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.
பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
இதன் இலை, பட்டை, வேர் இவைகளை கசாயம் செய்து கொடுத்தால் பித்தம், வாந்தி நீங்கும்.
நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையை இத்துடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட, மந்த பேதி, மலதோஷம், மலக்கட்டு போன்ற நோய்கள் குணமாகும்.