FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: குழலி on July 17, 2011, 10:31:53 AM

Title: உனக்காய்
Post by: குழலி on July 17, 2011, 10:31:53 AM
தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!
Title: Re: உனக்காய்
Post by: குழலி on July 17, 2011, 10:32:15 AM
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.

“கடல் நிறைந்து அலைகளாய் உன்னிடம்
வழிகிறது என் காதல்” என்கிறாய்.
“வான் நிறைந்து மழைச்சாரலாய் உன்னிடம்
பொழிகிறது என் காதல்” என்கிறேன்.

உள்ளங்கையில் கொஞ்சம் கடல் அள்ளி
“இந்தா என் காதல்” என்கிறாய்.
நானும் கொஞ்சம் மழை பிடித்து
“இந்தா என் காதல்” என்கிறேன்.

வேகமாய் வந்த
அலையொன்று எனது காதலையும்
மழைச்சாரல் உனது காதலையும்
அள்ளிச்சென்றன.
உள்ளங்கை விரித்து உதடு சுழித்து
“நம் காதலைக் காணோம்” என சிணுங்கினாய்.

அலை சென்றதும், மழை நின்றதும்
காணாமல் போன காதலை
கண்டுபிடிக்க வேண்டுமென ‘இச்’சரிக்கிறாய்.
மீண்டும் துவங்குகிறது நமக்குள்…
பேரலையும் மாமழையும்!
Title: Re: உனக்காய்
Post by: Global Angel on July 17, 2011, 02:30:47 PM
iniya kavithai nalla eruku kulali ;)
Title: Re: உனக்காய்
Post by: Manish on July 24, 2011, 07:48:01 AM
Nice kuzhali