FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 18, 2015, 09:27:04 PM

Title: ~ கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க் ~
Post by: MysteRy on July 18, 2015, 09:27:04 PM
கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10325145_1471456376485166_1860519602291389293_n.jpg?oh=a0929f0d42873b1cfe22cbf0e61e89c8&oe=560DD05B)

கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம். 2 வாரங்களில் மாற்றம் தெரிவதை காணலாம்.

• வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும். இந்த சிகிச்சையை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.

• கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.

• பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும். அப்போது தான் விரைவில் பலன் கிடைக்கும்.

• பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதோடு சருமத்தை மென்மையாக்கும். மேலும் வெயிலால் சருமம் கருமை அடைவதை தடுக்கும்

• 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.