FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on July 16, 2015, 01:22:33 AM
-
Written by Kavi
அத்யாயம்-1
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/11667324_557794461025330_4164163095992658338_n.jpg?oh=65b0289967a5bba3b4d55d38ad621b65&oe=56554819&__gda__=1448426693_458a3ce1159fe070e608810324c35a3c)
அந்த படர்ந்து விரிந்த மைதானத்தில் எங்கேயும் பச்சைவண்ணம் தீட்டியது போல் புற்களும், அங்கங்கே அழகிய ரோஜாக்களும் குரோட்டன்ஸ் வகைகளும் பூத்து குலுங்கி கொண்டு இருந்தன...!!!
ஓர் மூலையில் 3 நபர்கள் 10 பேரொடு சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள், ஒருவருக்கு 2 பேர் என சமாளிதாலும் முடியாது திணறீ கொண்டு இருக்கும்போது அந்த மூன்று பேருடன் இன்னும் ஒருவர் இணந்து அணைவரையும் அடித்து எரிந்தார்...!!!
பின் அங்கு ஒர் ஓரத்தில் இதையெல்லாம் ஒரு வித பயத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவரிடம் சென்றார்.
அவர் நிங்கள் எல்லாம் நினைப்பது போல் நம் கதையின் நாயகன் அல்ல...நம் கதையின் நாயகி மீரா (கை தட்டுங்க பா ஹிரொயின் எண்ரி அகியாசு இல்லையா?? )
“ஹெ மதி எனடி இங்க என்ன பண்ற?”
“போ மீரா...நானெ பயந்துட்டு இருகென் நீ
வேற...இப்டியா எல்லாரையும் அடிப்ப...அவனுங்க தான் ரொடி மாதிரி பண்றங்க நியும் சின்ன வயசுல இருந்து அவங்க கூட இருந்து இருந்து கெட்டு பொய்ட்ட”
“மதி அவ மட்டுமா எங்க கூட சின்ன வயசுல இருந்து எங்க கூட... ஹெ சரி சரி மீரா எங்க கூட நீ இல்ல உன் கூட தான் நாங்க இருக்கோம் எப்ப பத்ரகாளீ மாறி பாக்குர”
இதற்கு ஒரு காரணம் உண்டு...இவர்கள் ஐவரும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் சாட்சாத் நம் மீரா தான்...இதை பற்றி கதையில் பொக பொக தெரியும் இப்பொது கதைக்குள் செல்வொம்
“டெய் ஆதி போதும் டா அவங்களா கலைச்சது வா, அவனுங்க மயக்கம் சரி அகர்த்துகுள்ள பொய்டலாம்”
‘ம்ம்....யாரு யார கலைகிராங்க’னு தெரியாம பேசுரானே’
“இரு வீரா கொஞ்சம் பொருமையா இரு”
“இப்பொ யாருக்கு ஃபொன் பண்ர மீரா?”
“ஷ்ஷ்ஷ்....”
மீரா பக்கதில் இருக்கும் காவல் துரைக்கு கால் செய்து அங்கெ அடித்து பொட்டு இருந்த அடி ஆட்களை போட்டு கொடுத்தாள்...பின் ஆணைவரும் சித்து’வின் ஸி20’யில் பறந்து சென்றனர்...!!! அது அவர்களின் பழக்கம்...சிரு வயதில் முதல் வகுப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது...சிறு வயதில் பக்கதில் இருக்கும் பூங்கவிற்கு சென்று வரும் அப்பழக்கம் இன்று வரை சித்து’வின் அப்பா உடைய காரை எடுத்து கொண்டு விக்-எண்டில் கடற்கரை, திம்-பார்க் என்று தொடர்கிறது....அவர்கள் போகும் இடம் வரும்முன் அவர்களை பற்றி ஒரு சின்ன இன்ட்றோ...!!!
வீரா-அமதியின் உரு, பாசமிக்கவன், படிப்பாளி, இப்படி சொலி கொண்டே போகலாம்...
மதி-பெண்மையின் உரு, இவளும் பாசமிக்கவள், கொஞ்சம் பயந்த சுபாவம், நட்புகாக உயிரையும் கொடுப்பவள்.
ஆதி-கலகலபானவன், படிப்பிற்க்கும்
இவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, இவன் இருக்குமிடம் எப்பொழுதும் சந்தொசமாக இருக்கும்.
சித்தார்த்- அனைவரும் வேகமானவர்கள் என்றால் இவன் விவேகமானவன், பண-பலமிக்கவன்.
??? மீரா ??? - அழகானவள், அன்பானவள், அந்த நால்வருக்கும் இவள் ஒருவள் சமம் என்றே கூறலாம், ஆண்-பெண் வீரம், பெண்மை என பிரிக்க முடியாதவள், ஆனால் இவளின் பெண்மையை ஒருவரால் மட்டுமே துண்ட முடியும்...!!!
ம்ம்....இப்பொழுது கதைக்குள் செல்வோமா?? அந்த 4 சக்கர வாகனம் ஒரு 20 நிமிடம் கழித்து அங்கு தெரிகின்ற பெரிய காம்பொவ்ண்டுக்குள் நுழைந்தது...உள்ளே 3அறைகள் கொண்ட 5 தனி வீடுகள் இருந்தன (எல்லாம் நம் தொழமை அணி தான்...யாரொடைய திட்டம் என தெரிந்து இருக்குமே? ஆம்...எல்லாம் நம் நாயகியின் திருவிளையாடல் இல்லை இல்லை மிருவிளையாடல்...ஹெஹெஹெ) அங்கு அந்த மூணாவது வீட்டின் முன் அவர்கள் நுழையும்பொது அங்கு இவர்களின் குடும்பம் அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.
மீரா அப்பா-அர்ஜுனன், அம்மா-சுமித்ரா
மதி அப்பா-சந்தர செகர், அம்மா-அதியமாள்
வீரா அப்பா-சேகர், அம்மா-பரணி
ஆதி அப்பா-வீரபத்ரன், அம்மா-கங்கை ஆச்சி
சித்தார்த் அப்பா-சுந்தரம் அம்மா-அழகம்மை
இதில் இருந்து தெரிந்து இருக்குமே? ஆம்...இவர்கள் அனைவருக்கும் உடன்பிறந்தொர் இல்லை...ஆனால் இவர்கள் ஒருவரும் அதை ஒருபொதும் கவலையாக கொண்டந்து இல்லை என்றே சொல்லலாம்.
“என்னமா மீரா? எல்லாரைம் அடி பின்னிட்ட போல?”
“ச்ச்...என்ன ப்பா நிங்க...அவ அங்க எனமோ பையன் மாதிரி சண்ட போட்றா...எல்லாம் நிங்க கொடுக்குற செல்லம்”
“அம்மாடி மதி...என் பொன்னு தப்பா எதும் பன்ன மாட்டா அது பத்தி எனக்கு நல்ல தெரியும்...அவனுங்க எதாச்சு வம்பு பண்ணிருபாங்க அதான் இப்டி பண்ணிருப்பா”
“என்ன அங்கிள் நிங்களும்”
“என்ன மதி என்ன என்ன அங்கிள்?? அவரு எப்பவும் அவர் பொன்னுக்கு தான் சப்போர்ட் எப்பவும்”
“இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து தான் அவ தல கால் புரியாம ஆட்ரா”
“விடு சுமி...அவ இங்க இருக்க வரிக்கும் தான எல்லாம்”
“போ பரணி...இப்டி சொல்லியே என் வாய அடைச்சிடுங்க”
‘ஐயொ...எவ்ளோ நெரம் இப்டி சாப்பாடு போடாம பேசியே கொல்ல போராங்கலோ’
“டேய் ஆதி நீ மனசுல என்ன சொல்ரனு தெரிது வாங்க எல்லாரும் சாப்ட போலாம்”
“அழகும்மான அழகு தான்...வா..வா...”
“டேய்...இனிக்கு நா தான் அதிகமா ரெண்டு பேர்’அ அடிச்சென்...எனக்கு தான் இனிக்கு குல்ஃபி புரியுதா..” (இது ஒரு பழக்கம்...சின்ன வயதில் படிப்பிள் முதல், விளையாட்டில் முதல் என ஆரம்பித்தது இப்பொது எதிலும் தொடர்கிறது)
“போ மீரா...எப்பவும் நீ அதிகமா அடிச்சி குல்ஃபி சாப்புட்ற எப்டி தான் இப்டியோ”
“டேய் நிங்களாம் ஆம்பள்’ன்ற திமிருல கராதே க்ளாஸ்’அ கட் அடிப்பிங்க...இந்த லுசு சரியான பயந்தாங்கோளி நான் அதுல ப்ளாக் பெல்ட்...அதான்”
“சரி சரி விடு...இப்டி ஆடியன்ஸ் முன்னாடி அசிங்க படுத்தனுமா?”
“சரி எனக்கு சித்துவோட சாக்கி எடுத்து தா...நா எதும் சொல்ல மாட்டென் உன்ன பத்தி” (இதுவும் ஒரு பழக்கம்...அனைவரும் இரவிள் ஒரு காட்பரியை பகிர்ந்து உன்னுபார்கள்....பாதி மீராவின் வயதுக்கு தான் போகும்...செல்லமாக பேசியே அனைவரிடமும் வாங்கி விடுவாள்...இதில் இருவர் மட்டும் விதி விலக்கு...ஒருவன் சித்து...இன்னொருவர்...கதையினுள் போக போக தெரியும்)
“மீரா உனக்கு வேனும்’னா இந்தா என்னொடத எடுத்துகோ”
“போ அதி....திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம்”
“மீரா நீ திருந்தவே மாட்டியா?”
“அது வந்து மதி....”
“பொதும்...எல்லாம் பேசாம சாப்டுங்க நிங்க சாப்ட்டா தான் நாங்க சாப்ட”
“என்னமா? இத மொதல்லையே சொல்ல கூடதா?” (இது மதி? ஆதி? இல்லை...இது மீரா....கலகலபாக இருந்தாலும்...அது குழந்தைகளின் குரும்பு போல தான்)
“பரவால டா....நிங்க தான் கலைச்சி போய் வந்து இருக்கிங்க...சாப்டுங்க நல்லா” (இது மீரா’வின் அம்மா....அனைவரையும் அரட்டி வைத்தாலும் அன்பானவள்)
இப்படியாக அவர்கள் சாப்பிட்டு...பெரியவர்களையும் சாப்பிட வைத்து...பின் சிறிது அன்றைய நாளை பற்றி பேசிவிட்டு அவரவர்...வீடு சென்றன்ர்...
-
அத்யாயம்-2
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/1506675_558052434332866_8924135367713052346_n.jpg?oh=e7cf3f94f8f33a3898d889c2e8f6122c&oe=565239EF)
அன்று இரவு மீரா துங்க போகும் முன் எப்பொதும் போல் அன்றைய நிகழ்வுகளை நினைத்து பார்த்து கொண்டு இருந்தால். அன்று காலை எப்பொழுதும் போல் அவர்களின் கேட்டரிங் சேவைகான தொகையை வாங்கி கொண்டு வெளியில் வந்தனர். எப்பொழுதும் கிடைக்கும் ஆடரைவிட இது பெரிது. பெரிய இடம், பெரிய தொகை என இந்த வெற்றியை கொண்டாட அந்த ஐவர் குழு பக்கத்தில் இருக்கும் ஐஸ் கிரிம் சாப்’பிற்க்கு சென்றனர். அவர்களுக்கு தேவையானதை சொல்லிவிட்டு அவர்களின் அரட்டையை தொடர்ந்தனர். அப்பொழுது...அவர்களின் பக்கத்து டேபிளில் ரௌடிகளை போல் தொற்றத்துடன் இருந்த இரண்டு கல்லுரி மாணவர்களின் பேச்சு அவர்களின் காதில் நாராசமாக விழுந்தது.
ஒருவன்“டெய் மச்சான் நம்ம சுவாதியும் இங்க வந்து இருக்கானே நான் தான் உனக்கு சொன்னென் அதுக்குள்ள எப்டிடா இப்டி ஒரு ஐடியாவ கண்டு புடிச்ச?”
மற்றொருவன்“ஹெஹெ...இப்டி எத்தனி பொன்னுங்கள கொவுத்து இருப்பேன்”
ஒருவன்“சரி டா...அந்த வைட்டர் சரியா பண்ணிடுவான்ல?”
மற்றொருவன்“எல்லாம் நான் கொடுத்த மயக்கம் மருந்த கரக்டா மிக்ஸ் பண்ணி கொடுத்துடுவான் அவன் பண்ணலனாலும் நான் கொடுத்த 1000ருபாய் அவன பண்ண வெச்சிடும்”
ஒருவன்“ம்ம்...எல்லாம் சரியா நடந்துட்டா அப்புறம் உன்னொட ரூம்க்கு கூட்டிட்டு போய் ம்ம்....”
மற்றொருவன்“சரி சரி அவ ரெட் கலர் வித் வெயிட் தன போட்டு இருந்தா?”
ஒருவன்“ஆமா டா...வா...அவ டெபிள் பக்கத்துல போய் உக்காரலாம்”
அந்த மானம் கெட்டவர்கள் எழுந்து சென்றவுடன் யாரும் எதிர் பாக்காத சமயம் ஆதி மற்றும் மீரா ஒரே சமயத்தில் எழுந்து அவர்களை பின் தொடர்ந்தனர். மிதி மூவரும் பேய் முழி முழித்து பின் நடப்பதை உணர்ந்து அவர்களும் அவசரம் அவசரமாய் அவர்கள் பின் ஒடினர்.
மீரா “ஆதி,மதி அந்த பசங்க பக்கதில் போய் சாதரணமா உக்கார மாரி உக்காருங்க”
மதி “மீரா அப்பொ நீ? “
மீரா “நான் அந்த பொண்ணு பக்கத்துல போய் உக்காருறென்”
ஆதி “சரி வீரா, சித்து நிங்க அவ கூட போங்க”
அவர்கள் அனைவரும் அமர்ந்த அடுத்த நிமிடம் ஒரு வைட்டர் வந்து அந்த சிகப்பு நிற உடை அணிந்த பெண்ணிற்க்கு சாக்கலெட் மில்க் ஸேக்கை கொடுத்து விட்டு சென்றான். அந்த பெண் அதை எடுக்கும் முன் மீரா அதை கைபற்றி ஒரு மிடறு குடிப்பது போல் பாவனை செய்து கொண்டு அந்த பெண்ணை ஒர கண்களால் நோட்டம் விட்டால். அந்த பெண் இவளை குழப்பத்துடன் பார்த்து கொண்டு இருக்க மீரா சாவகாசமாக க்ளாஸை கிழே வைத்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தால்..
மீரா “என்ன அப்படி பாக்குறிங்க?”
அவள் “இல்ல...அந்த ஜுஸ்”
மீரா “ம்ம்....நான் ஆடர் பண்ணினது”
அவள் “இல்ல... அது தான் ஆடர் பண்ணினேன் அது நான் சொன்னதுனு நினைக்கிறென்”
மீரா “ஒ...சாரி...நான் எனது’னு நினைச்சேன்”
அவள் “பரவால”
மீரா “ம்ம்.. அம் மீரா”
சுவாதி “அம் சுவாதி” (மீரா இயல்பாக செய்வது போல் அந்த ஜுஸை சுவாதியின் மேல் தள்ளிவிட்டால்)
மீரா “ஹெய் அம் சாரி அகைன்...நெஜமா தெரியாம தான்”
சுவாதி “பரவால மீரா...நான் வாஸ் பண்ணிக்கிறேன்”
மீரா “வாங்க நான் உங்களுக்கு உதவி பண்ணுறேன்
சுவாதி “ம்ம்....தாங்க்ஸ்”
அவர்கள் செல்வதை திரந்த வாய் முடாம்ல் பார்த்து கொண்டு இருந்த அந்த ரௌடிகளின் முன் சிட்டிகை இட்டனர் அதியும் மதியும்...சுவாதியை கூட்டிச் சென்ற மீரா அவளுக்கு நடந்த்தை கூரி ஜாகர்தையாக இருக்க சொலி அவள் கூரிய ன்ன்றி பெற்று கொண்டு இவர்களிடம் வந்தாள். ஐவர் தங்களை சுற்றி அமருவதை பார்த்த அந்த இருவர் மருண்டனர்.
ஒருவன் “என்ன? யார் நிங்களாம்?”
“ம்ம்...உன் எமன்”
மீரா “என்ன பாஸுங்களா? உங்க பிளான் என்ன ஆச்சு? அந்த பொண்ணு எங்க’னு போனானு பாக்குரிங்களா??”
ஒருவன் “என்னங்க? எந்த பொண்ணு?”
வீரா “பாருடா? டெய் அதி இவனுங்கலுக்கு என்ன பொண்ணுனு தெரியாதம்ல?”
மற்றொருவன் “என்னங்க? வந்து வெனும்னே வம்பு பண்றிங்களா?”
மீரா “எது? வம்பு பண்றொமா?, வெக்கமா இல்ல உங்களுக்குலாம்? இதே உங்க அக்கா தொங்க்ச்சி’னா இப்டியா பண்ணுவிங்க?” (இதை கேட்கும் பொழுது மீரா வின் முகத்தில் அப்படி ஒரு ரௌத்திரம்)
மற்றொருவன் “இல்ல மாடம் நாங்க எதும்...” (அவர்களில் ஒருவன் பயந்தான்)
ஒருவன் “டேய் நீ ஏன்டா பயபடற? என்ன மாடம்? எங்கள எதுக்கு மொரைக்கிறிங்க? ஆஃப்ரால் நிங்க ஒரு பொண்ணு கூட ரெண்டு பசங்க இருந்துட்டா ஜாக்கிஜான் ப்ருஸ்லினு நினைப்பா” (ஒருவன் துள்ளினான்)
மீரா “டெய் சித்து ம்ம்...”
அவர்கள் உட்கார்ந்து இருந்த்து ஒரமாய் இருந்த டேபிளில்.. மீரா’வின் கண் அசைவில் வீராவும், சித்துவும் அவரிகளை மறைத்தார்போல் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் பிரண்ட்லி ஹக் கொடுத்து கொள்வது போல் பாவனை செய்ய...மீரா எப்பொழுதும் பாதுகாப்புகாக தன் பையில் வைத்து இருக்கும் மடக்கும் கத்தியை அவன் கழுத்தில் வைத்துவிட்டால்...!!!
மீரா “என்ன சொன்ன? அஃப்ரால் ஒரு பொண்ணா? இப்பொ நான் நினைச்சா நீ இந்த உலகத்துலயே இல்ல....”
ஒருவன் “மாடம் மாடம் ப்ளிஸ் மாடம் அவன விற்றுங்க..” (மற்றொருவன் கெஞ்ச அவனொ மீரா வை முறைத்து கொண்டு இருந்தான்)
ஆதி “என்ன முறைக்கிற? இவங்க என்ன பண்ணிடுவாங்க’னா? ரொம்ப யொசிக்காத...எங்களுக்கு ஐஜி லெவல்’ல ஆள் இருக்கு”
வீரா “விடு ஆதி...இதொ பார் இனி எதாச்சு பொண்ண தப்பா யுஸ் பண்ணனும்னு நினைச்சிங்க அவ்ளொ தான் வாங்க டா போலாம்”
நமது ஐவர் குழு கிளம்பிவிட்டது அவர்கள் பண்ண ஒரே தவறு...அந்த ரௌடிகளின் பார்வை நம் மதியின் மீது விழுந்த்தை கவனிக்காமல் விட்ட்தே....பயந்த்து கொண்டு இருந்த அவளை வைத்து இவர்களை பழி வாங்கி விடலாம் என அவர்கள் நினைத்துவிட்டன்ர்...அதன் படி அவர்களில் கூட்டத்துடன் மதியும் மீராவும் மாலை கொவிலுக்கு செல்லும்பொது பின் தொடர்ந்து கடத்த முயற்சி செய்தனர். (இதில் இவர்கள் தவறு மீராவை ஒரு பொருட்டாக மதிகாதட்தே...அவர்களுக்கு என்ன தெரியும் அவள் கராத்தே’வில் பிளாக் பெல்ட் என்று) ஆனால் அவளொ மதியை கூட்டிக்கொண்டு ஒர் இடத்தில் ஒளிந்து கொண்டு மிதி மூவரை கால் செய்து கூப்பிட அவர்கள் அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த ரௌடிகளுடன் சண்டையிட்டு கொண்டு இருந்தனர்...அவர்களால் முடியாத பொழுது இவள் ஒரே நொடியில் அனைவரையும் அடித்து விழ்த்தினால்.
இதன் நடுவில் ஆதி இதற்க்கு நீயெ இவர்களை சமாளித்து இருக்கலாமே என கேட்டதர்க்கு...இவள் “பின்ன எதுக்கு நிங்க இருக்கிங்க...பாடிகாட்’னு“ என கூறி கேலி செய்த்தும் நினைவு வர...அவளின் உதட்டில் ஒரு இனிய புன்னகை தவழ்ந்தது....இதனை தொடர்ந்து எப்பொழுதும் போல் அவளை அலைகழிக்கும் பழைய நினைவுகள் அன்றும் அவளை தொல்லை செய்தன...அதனுடன் போராடி எப்பொழுது நித்யாதேவி அவளை அனைத்தாளோ...அவளுக்கே தெரியாமல் துயிலில் ஆழ்ந்தால்...!!!
-
அத்யாயம்-3
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11703043_558469357624507_2778038602743421101_n.jpg?oh=39bae120924d86ba5740a9be772cdd76&oe=5652317C)
aமறுநாள் காலை எப்பொழுதும் போல் தாமதமாக எழுந்தவள் அரக்கபறக்க ரெடி ஆகி அப்பா-அம்மா விடம் சொல்லிவிட்டு ஆதி’யின் வீட்டிற்க்கு கிட்ட தட்ட ஒடினாள். அங்கே கமகமக்கும் பொங்களில் நெய் விட்டு சாப்பிட்டு கொண்டு இருந்தான் நம் ஆதி...அதை பார்த்ததும் அவனின் முதுகில் இரண்டு போட்டவள் அவனது ப்ளேட்டையே இழுத்து போட்டு சாப்பிட அரம்பித்தால்...இது தினமும் நடக்கும் நிகழ்ச்சி தான் என்பதால் ஆதி ஒரு சின்ன சிரிப்போடு அவள் தலையில் கொட்டிவிட்டு சென்றான். எப்பொழுதும் பதிலுக்கு பதில் கொடுக்கும் அவள் சாப்பிடும்பொது அமைதியின் சிகரம் அகிவிடுவாள்... ஹெஹெஹெ...
பின் ஆதியை இழுத்து கொண்டு அவளின் ஸ்கூட்டியில் பறந்தால்....அவர்கள் சென்று நின்ற இடம்...ஒரு கூடுசை வீட்டின் முன்...அங்கு உள்ளெ ஒரு 14 வயது பெண் ஒடுங்கி படுத்து கொண்டு இருந்தால்...அவள் 21 வயது பையனால் தவறாக நடத்தப்பட்டு இருக்கிறாள்....காரணம் காதல்...அவன் காதல் சொல்லி இவள் மறுத்த காரணத்தினால் அவன் நண்பர்களுடன் இனைந்து இப்படி செய்து விட்டான்...இதை அந்த பெண் திக்கி திணறி சொல்லும்பொது அந்த பெண்ணுடைய தாயின் கண்ணில் அப்படி ஒரு வலி இதையெல்லாம் குறித்துகொண்ட ஆதி...மிராவை கூப்பிட்டு அப்பெணை புகைப்படம் எடுக்க சொல்ல...சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை அவனுக்கு பரிசாக தந்தால்...பின் அவனை வெளியில் இருக்க சொல்லிவிட்டு இன்னும் சில விஷயங்களை கேட்டரிந்து கொண்டு விடைப்பெற்றனர்...!!!
மீரா “கொஞ்சமாச்சு அறிவு இருக்கா? சின்ன பொண்ணு அவளொட பாழ் பண்ற மாறி அவள போட்டோ எடுத்து இதொட இனைக்கலாம்னு நினைக்கிற?”
ஆதி “அம் சாரி மீரா...எதொ ஒரு ஆர்வகோளாறுள பண்ணிட்டேன்”
மீரா “சரி சரி வா போகலாம்”
அங்கு மதியும் வீராவும் சேர்ந்து சித்துவை எழுப்ப படாது பாடு பட்டுக்கொண்டு இருந்தனர்... நிங்கள் நினைப்பது சரியே அவன் ஒரு தூங்குமூஞ்சி...
மதி “டெய் சித்து எலுந்திடுடா...”
சித்து “ம்ம்....இன்னும் ஒரு டூ மினிட்ஸ் ப்ளிஸ் மதி”
வீரா “ஐயோ இப்பொவே 8:30 டா இன்னும் இவள அங்க விட்டுட்டு போகர்த்துகுள்ள....”
சித்து “என்னது? 8:30’ஆ? என்ன வீரா இவ்ளோ நேரம் என்னடா பண்ணிங்க என்ன எழுப்பாம? “
வீரா “டெய் கொலவெரில இருக்கென் சிக்கிரம் போய் ரெடி ஆகு...!!! “
அவன் அடுத்த இருவதாவது நிமிடம் ரெடி ஆகி சாப்பாட்டு அறையில் இருந்தான்...பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு சித்துவின் காரில் கிளம்பி மதியை அவள் இடத்தில் விட்டு விட்டு மிதி இருவரும் அவர்கள் இடத்திற்க்கு சென்றனர்.
என்னடா இது? நேற்று காட்டரிங் செர்விஸில் என்றார்கள் இன்று என்ன என்னவோ நடக்கிறதே என பார்க்கிறிர்களா? சொல்கிறென்...முதலில் நம் நாயகி...மீரா...யுஜி முடித்தவுடன் புரவஸ்னல் பொட்டொகிராபி கொர்ஸ் முடித்துவிட்டு தனியார் பத்திரிக்கை ஒன்றில் பொட்டொகிராபி செக்ஸனில் ஹெட் ஆக பணி ஆற்றிக்கொண்டு இருந்தால்...ஆதி பிஜி முடித்துவிட்டு ரிப்பொட்டராக பணி ஆற்றிக்கொண்டு இருக்கிறான்.
வீரா ஒரு தனியார் கம்பனியில் மேனேஜர்’ராக பணியாற்றுகிறான், அவனுக்கு மேல் தளத்தில் சித்து ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் கம்பனி ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருக்கின்றான்..இதில் விட்டு போனது நம் மதி மட்டுமே...அவளின் பயம் அவளை வெளியில் வேலை பார்க்க விட வில்லை...ஆனால்...மீராவின் சில தைரிய செயல்களினால் அவளை பற்றுகோளாய் வைத்து ஒரு 25 வயது பெண் தன் குழந்தையுடன் தன்னை ஏமாற்றிய கணவனிடம் இருந்த்து தப்பி வந்து இவளிடம் சரண்புகுந்தால்...!!! மீராவோ...மீனை பகிர்ந்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கத்து கொடுங்கள் என்ற பழபொழியை நம்புவபள்...எனவே அவர்களுக்கு என்று ஒரு தனி வீடும்...வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டி 10ருபாய் 20ருபாய் என விற்று அவர்கள் வாழ்க்கையை பார்த்துகொள்ள வழி காட்டினால்...!!! இவர்களை தொடர்ந்து பல பெண்கள் வர....கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி முன்னேறி இப்பொது 20 பேர் கொண்ட காட்டரிங் செர்விஸாக மாறியது. இவர்களை பார்த்த மதி...தனியாக தவிக்கும் இவர்களே இப்படி இருக்கும்போது நாம் ஏன் எதாவது சாதிக்க கூடாது என தொன்றவே மீராவிடம் சொல்ல...அவள் வீராவிடம் பேசிவிட்டு அவளை அப்பெண்களுக்கு துணையாய் மாற்றினால்...அன்றில் இருந்து இன்றுவரை மதி அந்த பெண்களுக்கு வழிக்காட்டியாய் திகழ்கிறாள். அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் மீராவுக்கும் சில பிரச்சனைகள் இருந்தன...பார்ப்போம்...அவள் அதில் இருந்து வெளி வருக்கிறாளா? அவள் வாழ்க்கையில் நடக்கபோவது என்ன?
-
அத்யாயம் – 4
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p720x720/11755139_558652274272882_2418511931543422109_n.jpg?oh=577ae0c4f58d5d4d28f49bf9ef6d895a&oe=565CCA64)
அன்று காலை எப்பொழுதும்போல் 5மணிக்கெல்லாம் அவனால் எழுந்து ஜாக்கிங் செல்ல முடிய வில்லை...!!! ஏன்? அவளை பார்த்ததில் இருந்து இப்படி தான்...யாரும் எதிர்காத அவனை கை நீட்டி அடித்து விட்டு கூலாக சாரி சொல்லிவிட்டு சென்றவள். அவனின் கண்ணுக்குள் நின்றுகொண்டு இம்சை செய்பவள்.
அவன்... ரிஷி யாதவ்...யாருக்கும் பயப்படாதவன்...யாரையும் பயம் கொள்ள செய்பவன்...அவனை புடிக்காதவர்களுக்கு அவன் ஒரு தாதா...அவனை புடித்தவர்களுக்கு அவன் தெய்வம்...!!! அந்த உலக அழகியாவே இருந்தாலும் அவன் ரிஷி தான்...அதாவது அந்த ரிஷி முனிவர் போல்...ஆனால் அவனை மயக்கவும் ஒரு மேனகை வந்தால்...அவள் தான் நம் நாயகி மீரா...அதே போல் அவன் உலகிற்க்கே ரிஷியாக இருந்தாலும் அவளுக்கு அவன் யாதவ கண்ணனே...!!!
ரிஷி படுக்கையில் புரண்டது போதும் என அவன் எழுந்து ஜன்னலிடம் வந்தான்...அங்கு இருந்து கீழே பூத்து குலுங்கி கொண்டு இருந்த சிகப்பு ரொஜாக்களை பார்த்ததும் அவளை முதல் முதலில் பார்த்து நியாபகம் வந்தது. அன்று அவனுக்கு வந்த தகவலில் படி ஒரு பெண்ணை துறத்திய கும்பலை காலி செய்ய அவனுடய ஸ்கார்பியோவில் சென்று கொண்டு இருந்தான்...!!! அந்த காட்டு பகுதியில் நுழையும்போதே பார்த்துவிட்டான், அங்கு ஒரு பெண் 10 அடியாட்களுடன் சண்டையிட்டு கொண்டு இருப்பதை...என்ன ஏது எதை பத்தியும் யொசியாமல் இறங்கி சண்டையிட ஆரம்பித்துவிட்டான்...இதில் அவன் கவனிக்காதது அந்த பெண்ணும் ஒருதருக்கு இரண்டு பேர் என ஒரே நிமிடத்தில் பந்தாடி கொண்டு இருப்பதை, அவள் கவனிக்காமல்விட்டது அவன் புதிதாக அவளை காப்பாத்த அவர்களுடன் சண்டையிட்டு கொண்டு இருப்பதை, இப்படியே தொடர்ந்து கொண்டு இருந்ததை முடிவுக்கு கொண்டு வர அவர்கள் இருவரும் மிஞ்ச இவள் அவனை பளார் என கொடுத்தால்...இதை எதிர் பாக்கத இவன் திகைத்து போய் இருக்க...அவள் பின்பு தான் கவனித்தால் அவன் சினிமா ஈரோ போல் இருந்ததை, பின் நாக்கை கடித்து சாரி சொன்னால்...இது எதுவும் அவன் மனதில் பதியவில்லை, அவன் கவனித்தது எல்லாம் அவள் கண்ணகளின் மாயஜாலத்தையும், உதட்டின் வடிவழகையும் தான்...!!!
அடுத்த சந்திப்போ ஒரு ஜொவ்ளி கடையில் நிகழ்ந்தது. அவள் எதோ ஒரு கிப்ட் சாபில் அவள் நண்பர்களுடன் நின்று கொண்டு இருக்கும்போது இவன் அந்த பக்கம் வர இவளை கண்டு காலில் ஆணி அடித்தது போல் நின்றுகொண்டு இருந்தான். அவள் எதொ கூறி கொண்டே நாக்கை கன்னதில் முட்டி உடனே கண்ணடித்து உடனே புருவத்தை ஏற்றி இறக்கினாள். இதில் அவளின் அந்தோ பரிதாபம் அவள் தோழி சட்டென நகர்ந்து விட நொடி பொழுதில் இது அனைத்தும் அவனை பார்த்து செய்து முடித்தாள். அவனின் அந்தோ பரிதாபம் அவள் அவனை மறந்துவிட்டது. அவள் எப்போதும்போல் நாக்கை கடித்து சாரி என உதட்டசைவில் சொல்லிவிட்டு சென்றுவிட்டால். அவள் உதட்டின் மேல் இருக்கும் கண்ணுக்கு தெரியாத மச்சம் அவன் கண்களில் மட்டும் சிக்கி... அதில் அவன் சிக்கி பித்தனாகி போனான்..இதை எதையும் அறியாத அவள் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தால்.
நேரம் ஆக ஆக கனவுகளில் இருந்து கலைந்து எப்பொழுதும் போல் அரக்க பரக்க எல்லாத்தையும் முடித்து கொண்டு மீரா அலுவலகம் வர, அவன் நினைவுகளில் இருந்து கலைந்து அதே அலுவலகம் வந்து சேர்ந்தான். அங்கே அவர்கள் இருவருக்கும் ஒரே பிரச்சனையால் தலைவலி வந்து சேர்ந்தது. என்ன ஆனது? எப்படி? பார்ப்போம்...!!!
-
அத்யாயம் - 5
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p480x480/10665361_559006030904173_46767102088160376_n.jpg?oh=73383b66cceee4980ffdc33367e557aa&oe=5653BE41)
மீரா எப்பொழுதும்போல் கிளம்பினாலும் மதிக்கு எதோ தேவை என ஆதி அவளுடனே சென்றுவிட மீரா தனியாக அலுவலகம் வந்து சேர்ந்தாள்.
ரிஷியோ காரில் வந்துகொண்டு இருக்கும்போது மீராவை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தான்...அவள் பெயர், ஊர், எதுவும் தெரியாது....ஆனால் அவன் நினைத்தால் கண்டுபிடிக்க முடியும்...ஆனால் அவன் அதை செய்யவில்லை...யாரும் அசைக்க முடியாத அவன் மனதை அவள் அசைத்துவிட்டால்..ஆனால் அதை காதல் என பகுத்தறிய அவன் விரும்பவில்லை. விதி யாரைவிட்டது? நினைவுலகிலிருந்து விலகி பக்கத்தில் இருக்கும் அந்த பத்திரிக்கை கையில் கிடைத்தது...எப்பொழுதும் அலட்சிய படுத்தும் அப்பத்திரிக்கையை இன்று கையில் எடுத்தான்...அது இவர்களின் கெட்ட நேரமோ?
பிரித்ததும் அவன் கண்களில் பட்டது அவனின் புகைப்படமே...ஒரு பெணின் கையை பிடித்துகொண்டு மறுகையில் அப்பெண்ணுடைய கணவனை அடிக்கும் காட்சியை மிக தெளிவாய் படம் பிடித்து இருந்தார்கள். அதில் இருக்கும் செய்தியை படிக்க படிக்க அவன் கண்களில் ரௌத்திரம் நிரைந்தது....!!!
நேரே அந்த பத்திரிக்கை அலுவலகதிற்க்கு வண்டியை விரட்டினான்...!!! ஆம் அவன் ஸ்கொர்பியோவில் அவன் மட்டுமே பயணம் செய்வான், அவன் ஆட்களுக்கு என்று தனி வண்டி அமைத்து தந்துவிட்டான்.
நேரே அவன் சென்று பார்க்கிங்கில் வண்டியை செலுத்தும்போது ஒரு வண்டியை இடித்து தள்ளிவிட்டு உள்ளெ செல்ல அவனை திட்ட என வந்த காவலாளி அவனை கண்டதும் திகைத்து அவன் பின்னால் ஓடி அவன் வேக நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் வழிவிட்டு நின்றான்...!!!
அவனை கண்ட அனைவரும் திகைத்து நிற்க மேல் அதிகாரிகள் அனைவரும் ஓடிவர யாரையும் கண்டு கொள்ளாமல் அவன் மீரா என்ற எழுத்து பலகையிட்ட இடத்திற்க்கு வந்து நின்றான்...!!!
நம் மீராவோ இது எதையும் கவனியாமல் அனைவருக்கும் முது காட்டி அமர்ந்து எங்கோ எடுத்த சில புகைபடங்களை வைத்து எனமோ எழுதி கொண்டு இருந்தால்...!!!
ரிஷி "மிஸ்.மீரா”
மீரா “யெஸ்”
அவளை கலங்கடிக்க நினைத்தவன் கலங்கிபோய் நின்றான் அந்த திருமுகத்தை பார்த்து...!!!
மீரா “ஹெலோ பாஸ் கொஞ்சம் முழிங்க...”
“என் முகத்துல அப்டி என இருக்கு இப்டி பாத்துட்டு இருகிங்க”
“என்ன ஸ்ர்....”
“ஹெல்லொலொலொலொலொ.......!!! “
கூப்பிட கூப்பிட பேசாமல் இருந்தவனை கண்டு அலுத்துபோய் அவன் காதில் பலமாக கத்தினாள்...அவள் அப்படி செய்ததும் நினைவு கலைந்தவன் அவளை கவனித்தான்...!!! ரோஜா நிறத்தில் உடை அணிந்து ரொஜாவாக நின்றுகொண்டு இருந்தால்...அவள் அழகை ரசித்துகொண்டு இருந்தவன் கண்களில் மீண்டும் அந்த பத்திரிக்கை பட....கண்களில் தோன்றிய கோபத்துடன் அதை கையில் எடுத்து அவள் முன் அந்த புகைப்படத்தை காண்பித்தான்.
மீரா “என்ன? இதுகா கூப்பிடிங்க?”
ரிஷி “யு....இது என்ன?”
மீரா “ஒ....”
அவளுக்கு அந்த புகைபடம் பார்த்ததும் தான் அவனை இனம்காண முடிந்தது...!!!
மீரா “பாத்தா தெரில? நிங்க பண்ற அட்டகாசம், ஆராஜகம்”
ரிஷி “எனது...நான் ஆ?”
மீரா “ஆமா பின்ன? ஒ இதுக்கு பேர் உங்க ஊர்ல வேறயோ”
அதற்க்குள் அங்கு சினியர் எடிட்டர் வந்துவிட்டார்...என்ன பிரச்சனையென தெரியாவிட்டாலும் வந்து இருப்பது யார் என தெரிய....!!!
எடிடர் “ஐயொ மீரா என்னமா பண்ற நீ?”
மீரா “நிங்க சும்மா இருங்க ஸர்...இந்த மாறி படிக்காத ஆளுங்களுக்கு இது ஒரு வேலையா போச்சு...”
ரிஷி “வாட்...”
மீரா “என்ன வாத்து கொழி? கோட் ஸுட் மாடிக்கிட்டு இங்கிலிஷ்’ல பேசிட்டு ரௌடி தானம் பண்றது இப்போ ஒரு பொழப்பா போச்சு”
ரிஷி “லுக்...உங்கிட்ட எதையும் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல பட்...இதுல ஒரு பொண்ணோட பேர் சேர்ந்து இருக்கர்தால சொல்றென்”
அவள் ஒரு அலட்சிய பார்வையுடன் நாற்காலியின் மேல் ஒரு கையை ஊன்றி கொண்டு ஸ்டையிலாக நின்று கேட்டு கொண்டு இருந்தாள். இதை பார்த்ததும் கோபம் கொண்டவன். அந்த நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அவள் தடுமாறுவதை லட்சியம் செய்யாமல் அமர்ந்தான்.
மீரா “ஹெய்...லூசு இப்டியா இழுப்ப...”
எடிடர் “ஐயொ மீரா அமைதியா இருரேன்மா”
அவள் எப்பொழுதும் போல் திட்டி வைக்க...சினியர் எடிட்டரோ...அவரின் செல்ல பிள்ளைப்போல் இருக்கும் மீராவை கண்டிக்க முடியாமல் திண்டாடினார்.
ரிஷி “இதொ பாரு...அந்த பொண்ண அவளோட அஸ்பண்டே தப்பா வேற ஒருத்தன் கூட சேத்து...ச்சா....அதுனால தான் நான் அவன அடிச்சி அந்த பொண்ண அவன் கிட்ட இருந்து காபாத்தி ***விமன்ஸ் ஹொம்’ல சேத்துருக்கேன்...உனக்கு வேனும்னா அங்க போய் விசாரிச்சிகோ..நாளைக்கே இதுக்கு மனிப்போட மறுப்பு சொல்லி நுயுஸ் வந்தாகனும் புரிதா?”
இத கேட்டு மீரா குழம்பினா...என அவளுக்கு வந்த நுயுஸ் வேற...!!! கண்ணுல அவளோட குழப்பம் அப்பட்டமா தெரிஞ்சிது...அவ பேசவே இல்ல...எடிட்டர் தான்...
எடிடர் “வி ஆர் சாரி ஸ்ர்...உங்கள பத்தி தெரியாம இப்டி நடந்து போச்சு”
அதற்க்குள் அவரும் அந்த செய்தியை பார்த்துவிட கோபமே வராத அவருக்கும் கோபம் வந்தது...மீராவை முறைத்துகொண்டே அவனிடம் மனிப்பு கேட்டார். இவர் வேறு ஏன் இப்படி முறைக்கிறார் என மேலும் குழப்பினாள் நம் நாயகி.
ரிஷி “நான் கொஞ்சம் உங்க ப்டோகாரவர் கிட்ட கொஞ்சம் பேசனும் எல்லாரும் போறிங்களா?”
எடிடர் “எல்லாரும் போய் வேலைய பாருங்க பா...!!! மீரா மிட் மீ அப்டர் திஸ்”
மீரா “ஒகே ஸர்”
ரிஷி “மீரா”
மீரா “ஹான்...என்ன?”
ரிஷி “ம்ம்...வெரும்.. கோட் ஸுட் மாடிக்கிட்டு இங்கிலிஷ்’ல பேசிட்டு ரௌடி தானம் பண்ணகூடாதுனு தான் உங்க சட்டமா? ஒரு டாப் மோஸ்ட் பத்திரிக்கைல வேலை செய்ற பொண்ணு மட்டும் ரௌடி தானம் பண்ணலாமா?”
அவன் தன் கன்னத்தை தேய்த்து கொண்டே கேட்டான். அவளோ திறந்த வாய் மூடாமல் பார்த்துகொண்டு இருக்க
“என்ன அப்டி பாக்குற?”
என்று கேட்டு...அவளை போலவே நாக்கை கன்னதில் முட்டி உடனே கண்ணடித்து உடனே புருவத்தை ஏற்றி இறக்கினான். அவள் மேலும் தன் முட்டை கண்ணை விரித்து முழிக்க...அவன் சிரித்து கொண்டே...
“இந்தா...இது உனக்கு”
அவனுடைய விசிடிங் கார்டை எடுத்து அவள் கையில் திணித்துவிட்டு சென்றான்...!!! அதை பிரித்து பார்த்த அவளுக்கு ஹாட் அடாக்கே வந்த்துவிடும் போல் இருந்தது...!!!
-
அத்யாயம் – 6
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/11704999_559314960873280_4361392953700693746_n.jpg?oh=7bdd4967f9220f6acd25368ea6f46fcd&oe=5654C9B1&__gda__=1444437304_0f1dfc4f94aea8b9c3b1f52c8cc063cb)
அவனின் விசிடிங் கார்டை பார்த்தவுடன் அவள் கண்கள் அகல விரிந்தன...அதில் முதலில் அவள் பார்த்தது கொட்ட எழுத்தில் ரிஷி யாதவ் பி.ஏ பி.ல் என்றது தான்...!!! திகைத்து விழித்தவள் கார்டை கீழே போட அது திரும்பி விழுந்தது...குனிந்து அதை எடுத்தவள் மேலும் திகைத்தாள்...அவள் வேலை செய்யும் அந்த பத்திரிக்கையின் சார்மேன் ஆவான். அது மட்டுமில்லாமல் வீரா வேலை செய்யும் தனியார் கம்பனியின் பாதி பங்குகள் இவனுடையதாக இருந்தது
மீரா “அட கிருஷ்ணா....இப்டியா கூண்டோட போய் மாட்டுவோம்”
அவள் வாய் விட்டே புலம்பிவிட்டாள்....பணியாள் வந்து கூப்பிட்ட பின் தான் சினியர் எடிட்டர் கூப்பிட்டார் என்றே நியாபகம் வந்தது
மீரா “அச்சோ மறந்தேபோய்டேன்”
பணியாள் “சிக்கிரமா போமா....சாரு ரொம்ப கோவத்துல இருகாரு”
மீரா “நான் மாட்டினேன்”
அவள் அரக்க பரக்க அவர் காபினுக்கு ஓட அங்கே அவர் கண்டுங்கோபத்துடன் இருந்தார்
ஆடிட்டர் “வா மீரா...நீ இப்டி பண்ணுவனு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல”
மீரா “ஸர் எனக்கே தெரியாது ஸர்”
ஆடிட்டர் “வாட்...என்ன உனக்கே தெரியாது? நிங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற எந்த பிராஜக்ட் ஆ இருந்தாலும் சக்சஸ் ஆ பண்ணுவிங்கனு தான நான் ரஃப் எடிசன் கூட பாக்காம பிரின்ட் பண்ண அனப்பினேன் இப்பொ இப்டி பண்ணிடிங்களே”
மீரா “ஸர் நான் சொல்றத...!!!”
அதற்குள்..................
ஆதி “எக்ஸ்க்யுஸ் மீ ஸர்”
ஆடிட்டர் “வா ஆதி...என்ன பண்ணிருகிங்க தெரிதா”
ஆதி “ஸர் அது வந்து...”
மீரா “ஸர் அவன திட்டாதிங்க ஸர் இந்த ஆர்டிகள் முழுக்க முழுக்க நான் பண்ணது...என்னோட மிஸ்டேக் தான் ஸர்”
ஆதி “இல்ல ஸர்...ஆக்சிவ்லி....இது ஒரு விபத்து மாறினு தான் சொல்லனும்...மிஸ்டர்.ரிஷி யாதவ் தான் நம்ம சார்மேன்’நு எனக்கே இப்போ தான் தெரியும்...மீராக்கு தெரிய வாய்ப்பே இல்லயே ஸர்”
ஆடிட்டர் “வாட் யு ஆர் பிலாபரிங் ஆதி?”
ஆதி “யேஸ் ஸர்...இங்க எல்லாரும் சார்மேன் ஃபாரின்’ல இருக்கர்தா தான சொல்லிருக்கிங்க?”
ஆடிட்டர் “ஓ மை காட்.....எல்லாம் என் தப்பு தான் சாமிங்களா...விடுங்க போய் உங்க வேலைய பாருங்க”
ஆதி “விடுங்க விடுங்க ஸர்...பத்திரிக்கை துறை’ல இதுல்லாம் சாதாரணம் ஸர்”
ஆடிட்டர் “இப்போ உங்களுக்கு கலாய்க்க நான் தான் கிடைச்சேனா? போங்க பா...நான் ஆல் ரேடி நொந்து நூடுல்ஸ் அகிருக்கேன்”
மீரா “வேனும்னா...நான் போய் அந்த நூடுல்ஸ் மண்டயங்கிட்ட சாரி கேட்டுட்டு வரவா?”
ஆடிட்டர் “ம்க்கும்.... நீ எங்கிட்டயே இப்டி சொல்ற அங்க போனா என் சீட்ட காலி பண்ணாம விட மாட்ட போல....வேண்டாம் மீரா...மீ பாவம்”
மீரா “ஸர் அது சும்மா லுலுலாய்க்கு...நான் போய் பேசினா அவர் உங்க கிட்ட வந்து சாரி கேப்பாறு பாருங்க..”
ஆடிட்டர் “என்னமோ சொல்ற சரி தான்”
அவர்கள் அலுவலகம் விட்டு வேளியே வந்தார்கள்...!!!
ஆதி“என்ன மீரா இப்போ இது ரும்ப தேவையா?”
மீரா “ஒரு காரணம் இருக்கு”
ஆதி “என்ன?”
மீரா “அதுலாம் நான் பாத்துக்குறேன்...நீ அந்த மர்டர் கேஸ்’அ டிட்டியள்ஸ் கலக்ட் பண்ணிட்டு வீட்டுக்கு போய்டு”
ஆதி “ஆர் யு சுர்? தனியா போய்டுவியா?”
மீரா “டேய் போடா போடா”
ஆதி சென்றவுடன் அவள் பையில் வைத்து இருந்த அவனின் கார்டை எடுத்து வீட்டு முகவரியை பார்த்து அங்கே சென்றாள்.
-
அத்யாயம் - 7
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11745670_559551264182983_1254248469897999662_n.jpg?oh=a306a0928da9baa780022948d1df001d&oe=561C5717)
அங்கே சென்றவுடன் அந்த வீட்டை...இல்லை இல்லை மாளிகையை அன்னாந்து பார்த்தால்...பார்த்ததும் இவ்வளவு பெரிய வீடா என திகைத்தவள் பின் எனக்கென்ன என்பது போல் அவள் இயல்பிற்க்கு மாறிவிட்டாள்...ஆனால் அவள் துரதிஸ்ட்டம் அவள் திகைத்ததை மட்டுமே ரிஷியின் கண்களில் எட்டியது...அவன் மனம் உடனே நினைத்துகொண்டது
ரிஷி ‘இவளும் பணதுக்கு ஆசை படறவளா?...’
“ச்ச இருகாது அவள பாத்தா அப்டி தெரியல....”
‘உனக்கு தெரியுமாக்கும்”
“எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ போ”
என சின்ன குழந்தை போல் அதை விரட்டிவிட்டவன் அவள் உள்ளே வருவதற்க்காக காத்துகொண்டு இருந்தான்
மீரா “அண்ணா நான் மிஸ்டர்.ரிஷி யாதவ்’ஆ பாக்கணும்”
காவலாளி “ம்ம்....உள்ளார போ மா...அதோ அவர்கிட்ட கேளு”
மீரா “ஆ....சரிங்க அண்ணா தாங்க்ஸ்”
காவலாளி “இதோ பாரு மா...மினிஸ்டர்ங்களே எங்க ஐயா பேர் சொல்லி கூப்டமாட்டங்க நீ இப்டி சொல்ற பாத்து பேசு மா எல்லாரும் என்ன போல விட மாட்டாங்க”
அவள் அப்படி அவர் சொன்னதும் எதுவும் வாய் ஆடாமல் அங்க இருந்து கிளம்பினாள்...ஆனால் அதற்க்கு ஈடாக அவள் மனம் புகைய ஆரம்மித்தது.
மீரா ‘பெரிய பிரசிடன்ட் இவன பேர் சொல்லி கூப்ட கூடாதாம்...கிருஷ்.......இந்த நூடுல்ஸ் மண்டயன்க்கு இப்டி ஓவர் பில்டப் தராங்களேயா’
மணி “ஹெலொ மேடம்...என்ன நீங்க பாட்டுக்கு உள்ள போய்ட்டு இருகிங்க? யார் வேனும்?”
மீரா “உங்க கொய்யா தான்யா வேனும்”
அவள் இருந்த கடுப்பில் அவ்வாறு கூறிவிட்டாள். அவள் அப்படி பேசியதும் கடுப்பாவது அந்த நபரின் முறையாகிற்று.
மணி “என்னமா...பொண்ணாச்சே’னு பாத்தா பேச்சே சரி இல்லை”
மீரா “என்ன பொண்ணாச்சேனு பாவம் பாத்தியா? பொண்ணுனா உனக்கு எலக்காரமா போச்சா உன் பாவம் யார்க்குயா வேனும்?”
மணி “அடிங்க்........”
அவர் என்ன சொல்லிருப்பாரோ...அதற்க்கு அவளின் பதில் வாயால் இருந்து இருக்குமோ இல்லை கையால் இருந்து இருக்குமோ அதற்க்குள்...
பணியாள் “மணி அண்ணா ஐயா, இந்தம்மாவ உள்ளார விட சொன்னாங்க”
மணி “ம்ம்...போ”
மீரா “வேவ்வேவ்வே”
பணியாள் “ம்மா...உங்கள உள்ள உக்கார சொன்னாங்க ஐயா கால்மணி நேரத்துல வருவாராம்...உங்களுக்கு என்ன ஜுஸ் பிடிக்கும்னு கேட்டு கொடுக்க சொன்னாரு”
மீரா “அதலாம் எதும் வேண்டாம்”
இருக்கும் கோபத்திற்க்கு எதாவது குடித்து அதை அனைக்க ஆசை தான்...ஆனால் அனைத்தையும் ரிஷியின் மேல் இறக்க எண்ணி வேண்டாம் என கூறி அவரை அனப்பி வைத்தால். அவர் நகர்ந்ததும் உட்காராமல் எழுந்து அங்கு இருந்த புத்தக அலமாரியிடம் சென்றால். அங்கு இருக்கும் பாரதி கவிதை புத்தகத்தை எடுத்துகொண்டு வந்து உட்கார்ந்தாள். அதில் இருக்கும் ஒரு கவிதையை திரும்ப திரும்ப படிக்க படிக்க திகட்டவில்லை அவளுக்கு...!!!
ரிஷி “என்ன படிக்கிற?”
திடிர் என பின்னாடி கேட்ட குரலில் பதட்டபடாமல் திரும்பினாள், அவளுக்கு தெரியும் அது ரிஷி என்று...!!! ஆனால் எதுவும் பேசாமல் திரும்பி நின்றாள்...
ரிஷி “கேக்குறேன்’ல? என்ன படிக்கிற?”
காணி நிலம் வேண்டும் பராசக்தி
heart emoticon காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் - அங்கு
கேணி அருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்குக்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும் என்றன்
சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும். heart emoticon
அவள் எதுவும் பேசாமல் அந்த கவிதையை படித்து காண்பித்தால்...!!! அதை கேட்டதும் அவன் திகைத்தான்...ஒவ்வொரு முறையும் இக்கவிதையை படிக்கும் பொழுதும் அதுபோல் வாழ முடியாதா என ஏங்குபவன் அவன்...
ரிஷி “உனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிக்குமா?”
மீரா “ம்ம்....ஆமா...இது’ல இருக்கர்து போலயே சின்னதா ஒரு மாந்தோப்பு அதுக்கு நடுவுல ஒரு சின்ன வீடு வீட்ட சுத்தி பத்து பதினைந்து தென்னமரம், குயில் கூவுற சத்தம் இப்படி வாழ்ந்தா ப்பாஅ....அது தான் என்ன பொருத்த வரிக்கும் மனித வாழ்க்கையே”
ரிஷி “ம்ம்....நீ சொல்லறது சரி தான்...கூடவே நமக்கே நமக்குனு மொத்த காதலையும் கொட்டி தீக்கிற ஒரு உயிர்”
அவன் அப்படி சொன்னதும் முகம் கருக்க திரும்பியவள் அவளது பையை எடுத்துகொண்டு
மீரா “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”
ரிஷி “ம்ம்...பேசு”
அவள் முகம் கருத்ததை பார்த்தும் பார்காதது போல் அவன் இயல்பாகவே இருந்தான்...அவள் சுற்றி முற்றி பார்த்தால் யாரையும் காணவில்லை...அவளுக்கு என்ன தெரியும் அவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து அனப்பி வைத்ததை
மீரா “ம்ம்... நான் உங்கள பத்தி தெரியாத உங்க பத்திரிக்கை’லயே உங்கள பத்தி தப்பா சொல்லிட்டேன்”
ரிஷி “ம்ம்...தெரிஞ்சி இருந்தா?”
அவன் குரலில் கிண்டலை கவனித்தவள் கோபம் தலைக்கேற
மீரா “இதொ பாரு...நான் ஒன்னும் நீ பெரிய ரௌடினு பயந்தோ, இல்ல நீ பெரிய பணகாரனு பயந்தோ உன்ட சாரி சொல்லல...நான் ஒரு குழந்த பத்தி தப்ப சொலிருந்தா கூட சாரி சொல்லிருப்பேன் அதான்...உனக்கும் சாரி வரேன்”
இதையெல்லாம் கேட்டு அவனுக்கு கோபம் வரவில்லை...சின்ன குழந்தை பெரியவர்களிடம் உரிமையுடன் மிரட்டுவது போல் தான் இருந்தது..அவளோ கடகடவென கூறியவள் திரும்பி செல்ல போக திடிர் என நினைவு வந்தவளாக...
மீரா "நான் எதும் கம்மியா கொடுத்ததில்ல நீ என்ன ரும்பவே வேற படுத்தி இருக்க அதுக்கு....!!!”
என கூறி சட்டென கை நீட்டிவிட்டால்...ஆனால் அவளைவிட வேகமாக அவள் கையை பற்றி பின்னால் முறுக்கியவன்
ரிஷி “எனக்கு யார்கிட்டையும் வாங்கி பழக்கமில்ல...வாங்கினாலும் அத விட பல மடங்கு அதிகமா கொடுத்து தான் பழக்கம்”
இவ்வாறு கூறியதும் எங்கே அடித்து விடுவானோ என கண்களை இருக்கி மூடி கொண்டான். அவள் ஒன்றும் அடிக்கு பயந்தவள் இல்லை...ஆனால் அவனிடம் தனிந்துபோக அவள் விரும்பவில்லை.
நேரங்கள் பல கடந்தும் எதுவும் நிகழாமல் இருக்க என்னடா இது என்று கண்களை திறக்க அடுத்த நிமிடம் அவன் முகத்தை அவ்வளவு அருகில் பார்த்து திடுக்கிட்டு அவனை தள்ளிவிட்டவள் கீழே விழுந்துகிடந்த அவளது பையை எடுத்துக்கொண்டு வெளியே ஒடியவள் தனது வண்டியை கூட எடுக்க தோன்றாமல் சென்று விட்டாள்.
-
அத்யாயம் – 8
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/11050701_560844657386977_5626107454968788457_n.jpg?oh=6e7c8787dad2c07ee106b2bc3b3dca18&oe=564EC9E5&__gda__=1443872349_17ec28922ea3daee0734c92466b67f2f)
அவனை பார்த்து பயந்து சென்றவள் அவளது வண்டியை அங்கேயே விட்டுட்டு சென்றாள். அவள் சென்றதும் சுய நினைவு வந்தவன் என்ன காரியம் செய்ய இருந்தோம் என எண்ணி மருகினான்.
‘ச்ச என்னயா இது எதுக்கு தான் இப்டி நடந்துக்கொண்டோமோ, இனி அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் ஜாக்கர்தையா நடந்துக்கனும்’
இவ்வாறு எண்ணி கொண்டு இருந்தவன் எப்பொழுது தூங்கினான் என அவனுக்கே தெரியாமல் தூங்கிவிட்டான்...எப்பவும் தூக்கதிற்க்காக தவிப்பவன் இன்று ஏவ்வாறு நிம்மதியாக தூங்கினோம் என யோசிக்காமல் துயிலில் ஆழ்ந்தான்.
அங்கோ நித்தியாதேவியின் துணையில்லாமல் தவித்துகொண்டு இருந்தால் நம் நாயகி...எவ்வாறு அவன் நம்மிடம் அப்படி நடந்துகொண்டான் நாம் அவனுக்கு பார்த்த அந்த நொடியில்லேயே அவ்வளவு இடம் அளித்துவிட்டோமோ என எண்ணிகொண்டும் புரண்டுகொண்டும் இருந்தாள்.
இவர்களால் பாதிக்கப்பட்டது ஒரு ஜிவனே...எதையும் எளிதில் துடைத்துபோட்டுவிட்டு செல்பவன் இன்று நாம் செய்தது தவறோ என கலங்கினான். ஆம். அது நம் ஆதி. மீரா வை தனியாக அனப்பியதற்க்கு தக்க திட்டுகளை வாங்கிவிட்டான். அவனின் நினைவு இரண்டு மணி நேரத்திற்க்குமுன் சித்துவின் வீட்டில் நின்றது.
வீரா “என்ன வேனா சொல்லு நீ மீரா’அ தனியா அனப்பினது தப்புதான்”
ஆதி “ஐயோ நான் எதனை தடவ சொல்றது வீரா...நான் சொன்னேன் அவ தான் அடம் பிடிச்சி தனியா போனாடா”
மதி “நீ சொல்றது சரிதான் அனா என்னதான் இருந்தாலும் அவ ஒரு பொண்ணுடா”
ஆதி “இப்போ நீயா? உனக்கு வேற தனியா சொல்லனுமா மதி? நான் தான் சொல்றேனே”
சித்து“சரி விடுங்க கய்ஸ்...அவ ஒரு பத்திரிக்கைதுறைல இருக்கவ அவள்க்கு தெரியாததா?”
ஆதி “அப்பாடா அபத்தபான்டவா அட்லிஸ்ட் நீயாது எனக்கு சப்போட் பண்ணியே”
வீரா “என்ன சித்து நீ அவன்க்கு சப்போட்’அ? அவள எங்க அனப்பி இருக்காங்க தெரியுமா? அந்த ரொக் அ லாம்........”
ஆதி “வீரா அவரால நம்ம மீராக்கு எதும் ஆகாது என அவர் தான் எங்க பத்திரிக்கைக்கே ஒனர்...ஆமா அவர் பினாமி பேர்’ல தான் இது ஒடிட்டு இருக்கு”
மதி “என்ன சொல்ற நீ?”
ஆதி “எதுக்கு இப்படி வாய பொளக்குற மதி??”
சித்து“அவள விடு...நீ உண்மையாவா சொல்ற?”
ஆதி “ஆமா சித்து....அதுமட்டுமில்ல...வீரா வேலை செய்ற கம்பனியும் அவரோடது தான் அதுமட்டுமில்ல...அவர் ரொம்ப நல்ல டைப்...பா....அவர் செய்றது எல்லாமே தப்பான வழில இருந்தாலும் தப்பு செயல”
இதையேல்லாம் கேட்டுகொண்டு இருந்தவர்கள் திகைத்துபோய் அமர்ந்து இருந்தனர்...முதலில் தெளிந்தது மதியே...
மதி “இப்போ என்ன பண்றது?”
ஆதி “நிங்களாம் ஷாக் அகுற அளவுக்கு எதுவும் நடந்துடலபா நம்ம மீராக்கு தெரியாத’தா என்ன?”
வீரா “ஜஸ்ட் சர்ட் ஆப் ஆதி...நாம கூட பரவாயில்லை...தயவ செஞ்சி அவள இந்த வேலைய விட்டு ரிலிவ் பண்ண வெக்கர்து உன் பொருப்பு”
மதி “ஆமா வீரா சொல்றது கரக்ட் மீரா தப்புனு தெரிஞ்சா எதையும் யோசிக்காம என்னவெனா செய்வா அத தடுக்க...இப்டினு தெரிஞ்சும் அவளா அங்க விட்டது தப்பு தான்”
இவ்வாறு சொல்லிவிட்டு அனைவரும் நகர்ந்துவிட ஆதி முதல்முறையாக தவறு செய்துவிட்டோமோ என தவித்தான்...அவனுக்கு தெரியும் என்ன ஆனாலும் அவள் இவ்வேலையை விட மாட்டாள் என தெரியும்...ஆனால் இனி எக்காரணம் கொண்டும் அவர்களை சந்திக்க விட கூடாது என முடிவு எடுத்தான்.
மறுநாள் காலை எப்பொழுதும்போல் கிளப்ப ஆதியோ சித்து வீட்டில் இருப்பதாக கூறி அங்கே வர சொன்னான். அங்கே ரிஷியோ அன்று போக வேண்டிய இடத்தை பற்றி மணியிடம் பேசிகொண்டே வெளியே வந்தான்..மணி தான் ரிஷியின் வலது கை...அவனுக்காக உயிரையே கொடுப்பவர் அவரை பற்றி பின் தெரிய வரும்...
அவர்கள் வேகமாக வெளியே வர இவனின் ஸ்கோர்பியோ முன் மீராவின் இரண்டு சக்கர வாகனத்தை பார்த்து திகைத்துபோனான்.
மணி
“அந்த பிள்ளைது தான்யா...நீங்க வேற அந்த பொண்ணு மேல ஒரு கண்...”
அவன் இளித்துகொண்டு சொன்ன விதத்தில் ஒரு பார்வை பார்த்தவன் சகாயத்தை கூப்பிட்டு எதுவோ கூறினான். மணியோ எந்த பொண்ணையும் ஏர் எடுத்தும் பார்க்காமல் இருந்த அவன் எஜமான் நேற்று அனைவரையும் அனப்பிவிட்டு அவளுடன் பேசியதில் சந்தோசமாக இருந்தவன் இப்பொழுது ரிஷி அவனை பார்த்த பார்வையில் ஊசி குத்திய பலுனாக மாறி போனான்.
அங்கே வண்டியை ரிஷி வீட்டில் விட்டுட்டு வந்த தன் மூட்டாள் தானத்தை எண்ணி தன்னையே திட்டிகொண்டு சித்துவின் வீடு சேர்ந்தால். உள்ளே....
மதி “ஆதி உன்னால தான் இவ்வளவும் அது மட்டுமில்லாம நீ சொன்ன அவ கேட்பா...நீயே சொல்லு டா”
ஆதி “என்ன மதி புரியாம பேசற? நான் சொன்னா மட்டும் எப்படி கேட்பா?”
மீரா "எங்கிட்ட அப்படி என்ன கேக்கனும்?”
வீரா “அது வந்து... வந்து...”
உள்ளே நுழைந்தவளை கவனிக்காமல் பேசிகொண்டு இருந்த தனது முட்டாள் தனத்தை எண்ணி அர்ச்சரித்துகொண்டு இருந்தனர் அனைவரும்.
-
அத்யாயம் 9
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xft1/v/t1.0-9/11745364_561389817332461_2739940934581476206_n.jpg?oh=d2f0a1bb63f29727ea3c73f2dfae4fa7&oe=56131761&__gda__=1447832555_7982f497d08f139f2ea1253847befc44)
குறிப்பு: தயவு செய்து அனைவரும் உங்கள் கருந்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே...!!!
சகாயத்தை கூப்பிட்டு எதுவோ கூறியவன் மணியை முறைத்துகொண்டே அவன் ஸ்கோர்பியோவில் ஏறி சென்றுவிட்டான்.
அங்கு மீரா’வோ மீதி நால்வரிடம் சண்டையிட்டுகொண்டு இருந்தாள்.
மீரா “என்ன இப்டி சொல்றிங்க என்னால வேலையல்லாம் விட முடியாது”
வீரா “சொன்னா புரிஞ்சிகோ மீரா”
மீரா “என்ன? அப்போ நியும் அவனொட கம்பனில தான வேலை செய்ற?”
வீரா “நானும் நியும் ஒன்னா?”
மீரா “வேற என்ன?”
வீரா “மீரா நீ ஒரு பொண்ணு நா சொல்றத கொஞ்சம்....”
அதற்க்குமேல் யாரையும் பேச விடவில்லை கையை காண்பித்து தடுத்தவள் வேகமாக வேளியே வந்தாள். வண்டி இல்லாத காரணத்தினால் முடிந்த அளவுக்கு வேகமாக நடந்தவள் ஒரு அளவுக்குமேல் முடியாமல் ஆட்டோவை கூப்பிட்டு அலுவலகம் விரைந்தால். அவள் மனமோ இடைவிடமால் கொதித்துகொண்டு இருந்தது.
‘ச்ச எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான் பெண்கள மட்டம் தட்றதுல அப்டி என்ன சந்தோஷமோ...இவங்களலாம் ரும் உள்ளயே வெச்சி ஒரு ஒரு பெண்ணோட வெற்றியும் பாக்க வெச்சே சாகடிக்கனும்’
என அவளிற்க்கே உரிய முறையில் திட்டிகொண்டு போனால் அவள் தனியாக பேசி கொண்டு இருப்பதை ஆட்டோகாரன் இரண்டு முறை திரும்பி பார்த்ததும் தான் அடங்கினால்.
அங்கு நால்வரும் திகைத்துபோய் அமர்ந்து இருந்தனர்.
ஆதி “ஏன் டா வீரா அப்டி பேசின? அவள்க்கு தான் கோவம் வரும்னு தெரியும்ல?”
வீரா “எதோ ஒரு நியாபகத்துல சொலிட்டேன் டா இப்படி கோவிச்சிட்டு போவானு தெரியாது டா ஆதி”
மதி “ம்கும் இப்டியே பேசிட்டு இருங்க அவ ஒரேடியா முரங்கை மரம் ஏரிடட்டும்”
சித்து“போதும் மதி இப்டி பயமுறுத்தாத”
மதி “அப்போ கிளம்பி போய் அவள சமாதனம் பண்ண பாருங்க”
சித்துவும் மதியும் கிளம்பிவிட வீராவும் ஆதியும் நேர்மை பத்திரிக்கை அலுவலகம் நோக்கி பயனம் ஆனார்கள்.
மீரா கடும்கோபத்தில் உள்ளே நுழைந்தவள் அவளுடைய இடத்தில் போய் தொப் என அமர்ந்தாள். அமர்ந்தவளிடம் பணியாள் வந்து அவளை பார்க்க யாரோ வந்து இருப்பதாக கூறி சென்றான். அங்கு போய் பார்ந்தவளோ இவன் எதற்க்கு இங்கு வந்தான் என திகைத்துபோனாள்.
அது வேறு யாருமில்லை ரிஷியின் வீட்டில் வேலை செய்யும் சகாயம் தான்.
சகாயம் “அம்மா நிங்க உங்க வண்டிய ரிஷி ஐயா வீட்டில் விட்டுட்டு வந்துட்டிங்க அத எடுக்க திரும்பி நிங்க வரணும்னு அவசியமில்லனு என்னையே வந்து விட சொன்னாங்க, தேவையில்லாத இனி வர வேணாம்னு சொன்னாங்க மா”
இதை கேட்டதும் அவள் முகம் கோபத்தில் செரி பழம் என சிவந்துவிட்டது. அதை எதையும் கவனிக்காமல் அவர் சாவியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வாங்கியவள் யாரையும் கவனியாமல் கீழே சென்று வண்டியை எடுத்தாள் எடுத்துகொண்டு முழு வேகத்தில் அந்த பெருமாள் சன்னிதியில் நுழைந்தால், அங்கு ஓரமாய் இருந்த கிருஷ்னர் சிலை முன் அமர்ந்தால்.
மனம் முழுவதும் ரணமாக இருந்தது...ஏன் இவ்வளவு கோபம் என அறிய முடியாமல் தவித்தால்.
‘நானா அவன் பின்னாடி போனேன் என்னமோ அப்படி சொல்றான், மனசுல பெரிய மன்மதனு நினைப்பு அவன் மட்டும் என் கைல கிடைச்சான் அவ்ளோ தான். ச்சீ’
‘பொண்ணுகள கீழ்தரமா தான் நினைக்கனுமா என்ன ச்ச’
இவ்வாறு எதெதோ நினைத்துகொண்டு இருந்தவளின் மனம் பழைய நினைவுகளும் சேர்ந்து வாட்டியதில் திக்பிரம்மை பிடித்தது போல் உட்கார்ந்து இருந்தால்.
அலுவலகம் வந்து சேர்ந்தவர்கள் மீராவை கானும் என்றதும் எடிடரிடம் கேட்டவர்கள் அவருக்கும் தெரியாது என்றதும் எங்கே போவாள் என தெரியும் எனவே உடனே அங்கு சென்றனர் அங்கே அவள் இருந்த கோலத்தை கண்டவர்களின் மனம் சுக்கு நூறாய் உடைந்தது.
இதை எதையும் அறியாத ரிஷியோ ஒரு நில தகறாரில் ஒருவனை தூக்க சொல்லி மணியிடம் கட்டளையிட்டு கொண்டு இருந்தான்.
-
அத்யாயம் 10
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/p480x480/11145067_561701390634637_6015771079132897389_n.jpg?oh=075a4ad3195ea6b4479e4b4390fd7a64&oe=56162A6C)
ஆதி“மீரா...மீரா...”
மீரா “ஹான்.....!!!”
ஆதி “இங்க ஏன் அதும் இப்படி உட்காந்துட்டு இருக்க? வா போலாம்”
மீரா “என்ன விடு ஆதி நீ போ”
வீரா “என்ன விளையாடிட்டு இருக்க மீரா வா’னு சொல்றோம்’ல”
மீரா “நீ மட்டும் என்ன பெரிய இதுவா வீரா? தயவ செஞ்சி போங்க இல்ல பப்ளிக்’னு கூட பாக்க மாட்டேன்”
ஆதி “எவ்ளோ நேரம் இங்கயே இருக்கர்தா உதேசம்?”
மீரா “நான் என்னவோ பண்ணிட்டு போறேன் நீங்க கிளம்புங்க”
அதற்க்குமேல் வீரா’வால் அங்கு நிற்க்க முடியவில்லை...கோபத்தோடு வேளியே வந்தான்.
ஆதி “டேய் ஏன் டா அவ தான் எதோ கோவத்துல பேசுறா’னா நியும்?”
வீரா “எப்படி பேசுறா பாருடா”
ஆதி “ஆனா என்ன சொல்றது டா, அவ சின்ன வயசுல இருந்தே அப்படி பேசினா கோவம் வரும்னு தெரிஞ்சே ஏன் அப்படி பேசின”
வீரா “நான் வேனும்னாடா பேசினேன் அவளோட நல்லதுக்கு தான சொன்னேன்?”
ஆதி “சரிடா நீ கவலைப்படத விடு இதுக்கே இப்படி ஆனா எப்படி ஃபொர்த் படிக்கும்போது என் தலைய உடைச்சாலே அப்போல இருந்து நான் எவ்வளோ ஜாக்கர்தையா இருந்தேன் உனக்கு சனி தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சுனு சந்தொஷப்பட்டுகோ”
வீரா “அட போடா அப்படி மண்டைய உடைச்சா கூட பரவால இப்படி பேசமா உட்காந்துட்டு இருக்கா, மனசு வலிக்கிது டா”
ஆதி “சரி சரி லூசு மாறி கஷ்ட்டபடாத டா எல்லாம் சரி அகிடும் அவளே வெளிய வரட்டும் பாத்துக்கலாம்”
வீரா “வேற வழி...வா அந்த டீ கடைல போய் உட்காரலாம்”
அவர்கள் சென்று அங்கே உட்கார மதிய உணவு நேரம் வந்தும் ஆளை காணவில்லை...காலை எட்டு மணிக்கு கிளப்பியவள் எதையும் உண்ணவில்லை. இப்பொழுதோ ஒரு மணி ஆகியும் வரவில்லை. மயக்கம் கியக்கம் போட்டுவிட்டாலோ என நினைத்தவர்கள் மனசு பதற ரோடை கிராஸ் பண்ண அப்போழுது பார்த்து ஒரு டேங்க்கர் லாரி அவர்களை உரசி செல்ல கரேக்டாக மீரா அந்த காட்சியை பார்ந்துவிட்டால்.
லாரியில் அடிபட இருந்ததை விட மீரா முறைத்த முறைப்பில் தான் அவர்கள் உடல் நடுங்கியது. அவர்களின் நினைவு பின்நோக்கி சென்றது.
அப்போது அவர்கள் காலேஜில் முதல் வகுப்பில் இருந்தனர். ஒரே யுனிவர்ஸிட்டியில் ஆதியும், மீராவும் ஆர்ட்ஸ் துறையில் பயில மீதி முவரும் எஞ்சினியரிங் படித்துகொண்டு இருந்தனர். கிளாஸிற்க்கு நேரமாகிவிட்டது என மதியும் சித்துவும் ஒடிவர மிதி மூவரும் அடுத்த கட்டிடத்திடம் இருந்தனர் சாலையை கடக்க இருவரும் ஒட அங்கே ஒரு சிறு விபத்து உள்ளாகியது.
இருவரும் சிறு சிராய்ப்புடன் தப்பிவிட மீரா கூடுத்த அரையில் தான் அவர்கள் கன்னம் பழுத்துவிட்டது.
மீரா “ஒரு கிளாஸ் கட் அடிச்சா குடியா முழ்கிப்போய்டும்? அது என்ன அப்படி கவனிக்காம ரெண்டு பேரும் ஓடி வரிங்க?”
சித்து “இல்ல...வந்து...”
ஆதி “மதி இதுக்கு நிங்க அந்த வண்டிலயே விழுந்து இருக்கலாம்”
ஆதி கிண்டலாக கூற அங்கே சிறு சிரிப்பலை தொடங்கி மீராவின் முறைப்பில் அடங்கியது.
மீரா “பாதி ஆக்சிடன்ட் ஓட்றவங்களால அகுதுனா பாதி ஆக்சிடன்ட் உங்கள மாதிரி ஆளுங்கலால தான் நடக்குது இதுல சட்டத்த குத்தம் சொல்லி என்ன பண்ண மொதல நாம ஒழுங்க இருக்கனும்’ல”
அந்த சம்பவத்திற்க்கு பிறகு மிகவும் கவனத்துடன் நடந்துகொண்டனர் நம் ஐவர் குழு. இதுப்போல் சிறு சிறு தவறுகளை கூட மனிக்க முடியாதவள் தான் மீரா. எனவே தான் அது ரிஷியின் அலுவலகம் என்று தெரிந்ததும் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதில் விதி என்னவென்றால் எதற்க்கு அவள் கோப படுவாளோ அதையே கூறி அவள் அக்னி பார்வைக்கு ஆள் அகியதே. அதற்க்கு திலகம் வைத்ததுப்போல் இந்த சம்பவமும் நடந்துவிட்டது.
இவர்கள் இதை நினைத்து அங்கேயே நின்றுவிட மீரா கடும் கோபத்தோடு வண்டியிடம் நின்றுகொண்டு இவர்களை முறைத்துகொண்டு இருந்தால்.
ஆதி “டேய் வாடா பத்திரகாளி மாதிரி மொரைக்கிறா இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சோமோ எல்லாம் ஏடாகூடமாவே நடக்குது”
வீரா “சும்மா வாடா இத வேற கேட்டா ருத்ரதாண்டவம் அடிருவா”
ஆதி “அது என்னமோ சரிதான்”
அவர்கள் தங்கள் வண்டியை எடுத்துகொண்டு அவளிடம் செல்ல அவளோ முறைத்தது முறைத்த படியே இருந்தால்.
ஆதி “மீராமா அப்படிலாம் பாக்காதமா”
மீரா “இப்போ எதுக்கு ரெண்டு பேரும் உத்தமபுத்திரம் மாதிரி சீன் போடுறிங்க?”
வீரா “அப்படிலாம் இல்ல மீரா”
மீரா “நான் உங்கிட்ட பேசல வீரா”
ஆதி “மீரா என்ன பேசுரோம்னு யோசிச்சி பேசு”
மீரா “எல்லாம் யோசிச்சிட்டேன் எல்லாம் சும்மா என் முன்னாடி வேஷம் போடுறிங்க ச்ச”
இதை கேட்டதும் வீராவின் முகம் கும்பிபோய்விட ஆதியின் முகம் சிறுத்துவிட்டது.
ஆதி “ஆமா...நாங்க தான் நடிக்கிறோம் உன் நல்லது சொன்னா புரிஞ்சிகாம எதோ தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்கு இப்படி அவன பேசுற?”
அவன் அனைவரையும் சம நிலையில் வைத்து பேசினான். வீரா பண்ணது தப்பு என அவனுக்கு தெரிந்தும் மீரா பேசுவது அதிகம் என உணர்ந்து கத்திவிட்டான்
மீரா “ஆமா அஃப்ற்றால் ஒரு பொண்ணுகிட்ட எதுக்கு வந்து கெஞ்சிட்டு இருக்கிங்க? போங்க உங்க லெவல்க்கு யார் இருக்கங்களோ அவங்ககிட்ட போய் பேசுங்க”
ஆதி “சும்மா புரிஞ்சி....”
வீரா “இரு ஆதி...மீரா நான் பேசினது தப்பு தான் மனிச்சிக்கோ ஆனா உன்னோட நல்லது....க்காக மட்டும் தான் அப்படி....மத்தபடி நடிப்புலாம்...இல்ல”
சொல்லி முடிப்பதற்க்குள் எவ்வளவு முயன்றும் அவன் குரல் கமரிவிட்டது. அதை உணர்ந்ததும் மீரா குற்ற உணர்ச்சியில் தவித்தால்.
மீரா எதுவும் கூறாமல் இருந்ததும் அவனே...
வீரா “ஆதி நீ மீரா கூட வந்துடு நான் போறேன்”
ஆதி “டேய்..இருடா”
வீரா “இல்ல ஆதி பிளிஸ்”
மீரா “என்னடா? ஒவர் ஆ பண்ணுற? நீ சொன்னதுக்கு தான திட்டினேன் உடனே ஃப்ரண்டே வேணாம்னு போய்டுவியா?”
வீரா “ஹெ மீரா அப்படிலாம் இல்லமா...உன்ன இன்னும் கஷ்ட்டபடுத்த வேணாம்னு தான்”
மீரா “கஷ்ட்டம் தான்...இவ்வளவு பசி’ல மொட்ட வெயில்ல நின்னு பேசுறது ரும்பவே கஷ்ட்டமா தான் இருக்கு என்ன பண்ண?”
ஆதி “ஐயோ அத நினைச்சி தான் நாங்களே ஓடி வந்தோம் மா வா வா பக்கதுல இருக்க நல்ல ரெஸ்டாரண்ட் ஆ....ஆ..........”
வீரா “ஹெ எதுக்கு மீரா ஆதி’ய இப்படி அடிக்கி...ஆ...”
அவர்கள் இருவரையும் அடித்துவிட்டு ஒரு சின்ன சிரிப்போடு சொன்னால்...!!!
மீரா “இது நிங்க சரியா கவனிக்காம ரோட் கிராஸ் பண்ணதுக்கு”
வீரா “அதுக்கு இப்படியா? செம்மையா வலிக்குது மீரா”
மீரா “வலிக்கட்டும் உங்களுக்கு எதவாதுனா எங்களுக்கும் இப்படி தான மனசு வலிக்கும்? இனி ஒழுங்க பாக்காம வந்து பாருங்க நானே கார் ஏத்தி கொன்னுடேறன்”
வீரா “கொல்லகாரி”
ஆதி “சரி ரும்ப பசிக்கிது பா போலாமா”
மீரா “எனக்கு ரெண்டு பட்டர்ஸ்காச் ஐஸ்கிரிம் ஒரு வெண்ணிலா ஐஸ்கிரிமும் கண்டிப்பா வேணும் நீங்க பண்ணதுக்கு பனிஷ்மன்ட்”
ஆதி “வீரா இதுக்கு இந்த ஜந்துவ சமாதானம் பண்ணமலே இருந்து இருக்கலாம்”
மீரா “என்னது நான் ஜந்துவா? நீ தான் டா டைனோசர்”
வீரா “சும்மா அவள வம்பு பண்ணாம வாடா, மீரா எல்லாம் ஒரே நேரத்துல வேணாம்’மா இனிக்கு ஒன்னுத்தோட நிருத்திக்கோ மிதி ரெண்டும் டைலி ஆதி’ய வாங்கி தர சொல்றேன்”
ஆதி “இதுக்கு நான் வேற கூட்டா?”
இவ்வாறு சந்தோஷமாக பேசிகொண்டும் கலாய்த்துகொண்டும் அந்த ரெஸ்ட்டாரண்டிற்க்குள் நுழைந்தனர் அங்கு நடக்க போவது தெரியாமல்...!!!
-
அத்யாயம் 11
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11223552_562153120589464_6166170446156991185_n.jpg?oh=7cb3d91c08445c663035d5aca7513b75&oe=56564393&__gda__=1443979208_ca48c15ff9c4d6f2cbdc35541fbbac60)
அங்கு ரெஸ்ட்டாரண்டிற்க்குள் நுழைந்தவர்கள் சிரித்து பேசி கொண்டு உணவு அருந்திகொண்டு இருந்தனர். அப்பொழுது தவறுதலாக ஆதியின் மேல் பன்னிர் மசலா கொட்டிவிட அவனுக்கு உதவியாக வீரா வும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற சில நிமிடங்களிலேயே ஆதியின் ஃபோனிற்க்கு ஒரு கால் வந்தது. வேறு யாருமில்லை அது அவர்களின் எடிடர் தான்.
ஆடிட்டர் “ஹெலோ ஆதி நீ சொன்ன மாதிரி அந்த கேஸ் பத்தி நான் மீரா கிட்ட எதும் சொல்லல ஆனா இந்த ஆர்டிகிள் அ சிக்....”
மீரா “நான் மீரா தன் பேசுறேன் ஸர்”
ஆடிட்டர்“என்னது? ஆதி...அவன்...”
மீரா “என்ன விஷயம்னு சொல்லுங்க”
ஆடிட்டர் “ஒண்ணுமில்லை மீரா மா...”
மீரா “நம்புறேன் ஸர் நான் இந்த துறைல நறைய சாதிக்கிணும்னு இருக்கேன் தயவ செஞ்சி நிங்க இப்படில்லாம் பண்ணதிங்க”
ஆடிட்டர் “என்னைய எதும் கேக்காத மா”
மீரா “சரி வைங்க”
அதுக்கு மேல அவர் ஏதும் சொல்ல மாட்டார்னு தெரிஞ்சி அவ ஃபோன் அ வெச்சிட்டு ஆதி வீராகாக வைட் பண்ண ஆரமிச்சா அவங்களும் கொஞ்ச நேரத்துல வந்தாங்க...நம மேடம் எதும் சொல்லாம ஆதியவே முறைச்சிட்டு இருந்தா
வீரா “என்னடா ஆதி, என்ன பண்ண? எதுக்கு இப்படி முறைக்கிறா”
ஆதி “எனக்கு மட்டும் என்னடா தெரியும் இவ்ளோ நேரம் நல்லா தான இருந்த இப்போ திடிர்னு முறைக்கிறா”
வீரா “சரி சரி ஆல் தி பேஸ்ட்”
ஆதி“என்ன கிண்டலா காபாத்து மச்சான்”
வீரா “ஒகே டா சமாளிப்போம்”
அவங்க குசுகுசுனு பேசிட்டு இருக்கர்த பாத்துட்டு எதுவும் சொல்லாம இன்னும் முறைக்க அரமிச்சா
ஆதி “ஹெஹெஹெ என்ன மீரா அப்படி பாக்குற நான் அவ்ளோ அழகா இருகேனா?”
மீரா “எர்ர்ர்ர்”
அவ எதுவும் சொல்லாம பக்கதுல இருந்த ஹொட் வாடர் அ பாத்தா அது கொதிக்க கொதிக்க இருந்துச்சு. உடனே அவன் கப்சிப்னு வாய முடிகிட்டான்
வீரா “என்ன அச்சு மீராமா? ஏன் கோவமா இருக்க?”
மீரா “ம்ம்...உன் பிரண்ட் தனியா எதோ அசைன்மென்ட் பண்ணுறான்”
வீரா “என்னடா ஆதி என்ன பண்ண?”
ஆதி “அது.... நம்ம மீரா’அ தேடி ஆபிஸ் போனோம்ல? அப்போ தான் டா இந்த அசைன்மென்ட் பத்தி சொன்னாங்க அல்ரெடி இங்க ஒரே பிராபலம் அதான் சொல்ல வேணாம்னு சொல்லி இருந்தேன் டா”
எங்கே அது ஆபத்தானது, பெண்ணாக இருக்கும் மீராவை அதற்க்குள் மாட்ட வைக்கவேண்டாம் என்பதே அவன் எண்ணம் இதை சொன்னால் அவள் நம்மை வதம் செய்துவிடுவாள் என்ற நியானோதையம் பெற்றவனாக அதை விடுத்து மிதியை சொன்னான் அவன் பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டு அனைத்தையும் சொல்லி முடிக்க வீரா என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.
மீரா “இப்போ எதுக்கு என்ன எந்த அசைன்மென்ட்டும் பண்ண விடமாட்றிங்க?”
வீரா “அது இல்ல மீரா அவன் உன் நல்லதுகாக தான் பண்ணி இருக்கான்”
மீரா “இதோ பாருங்க எனக்கு என்ன பாத்துக்க முடியும் இப்படி எனக்கு பாதுகாப்பு’ன்ற பேர்’ல நாலு சுவர்குள்ள அடைக்காதிங்க”
ஆதி “அப்படில்லாமில்ல மீரா மா”
மீரா “வேற எப்படி ஆதி?”
ஆதி “சரி மீரா நான் பண்ணது தப்பு தான் என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனா எனக்கு ஒரு சத்தியம் பண்ணிகொடு”
மீரா “என்னது?”
ஆதி “எந்த சிச்சுவேஷன்லையும் நீ ஆபத்துனு தெரிஞ்சே எதையும் செய்ய மாட்டனு எங்க நாலு பேர் மேலயும் சத்தியம் பண்ணு மீரா...எனா எங்களுக்கு நீ ரும்ப முக்கியம்”
இதை கேட்டதும் அவளையும் அரியாமல் அவள் கண்களில் நீர் கோர்க்க சத்தியம் செய்து கொடுத்தால் பாவம் சத்தியம் செய்த அவளுக்கும் தெரியவில்லை வாங்கிய அவர்களுக்கும் தெரியவில்லை அவளாகவே பல ஆபத்துகளில் சிக்கி கொள்ள போகிறாள் என்று.
பின் பேசிகொண்டே மிதி சாப்பாட்டையும் சாப்பிட்டு முடித்தவர்கள் கிளம்பினார்கள். போகும்போது வீரா அவர்கள் வண்டியில் சென்றுவிட ஆதியும் மீராவும் அவர்கள் அலுவலகம் சென்றனர்.
ஆடிட்டரை சந்தித்து ஆதியே அந்த கேஸை பற்றி கூற சொல்ல மீராவோ அதை தனியாக தானே பார்த்துகொள்வதாக சொல்லி ஆதிக்கு ஆர்ட் அட்டேக்கே வர வைத்தால். பேசிவிட்டு வெளியே வந்த மீராவிடம் ஆதி திட்ட தொடங்கினான்.
ஆதி “என்ன மீரா என்ன நினைச்சிட்டு இருக்க
நீ? என்ன சொன்னா இப்போ என்ன பண்ணிட்டு வந்து இருக்க? நாங்க சொல்றத கேக்க கூடாதுன்ற முடிவோட தான் இருப்பியா? ச்ச”
மீரா “ஆதி பிளிஸ் எதுக்கு இப்போ கோவ படுற? நான் எந்த ஆபத்துலையும் மாட்டிக்க மாட்டேன்னு தான் சொன்னேன் ஆபத்த அழிக்காம இருப்பேன்னு சொல்லல இந்த துறைல எந்த விஷயத்துல ஆபத்து இல்லாம இருக்கு நீயே சொல்லு?”
ஆதி “இப்படில்லாம் உன் வாயாடி தனத்த காட்டி என் வாய்அ அடைச்சிடு”
மீரா “எனக்கு எதாச்சுனா நிங்க இருக்கும்போது நான் ஏன் பயபடனும் ஆதி? கண்டிப்பா எனக்கு எதும் அக நீங்க விடமாட்டிங்க”
ஆதி “ரும்ப ஐஸ் வைக்காத”
மீரா “ஹெஹெஹெ விடு விடு வா இப்போ அந்த **** ஒட பேட்டிஅ அலைன் பண்ணிட்டா நாளைக்கு பிரிண்ட்க்கு அனப்பிடுலாம்”
அந்த நாள் அவ்வாறே கழிய மறுநாள் அவர்கள் எப்பொழுதும் போல் அலுவலகம் செல்ல பத்து மணிக்குமேல் நைசாக நழுவி வெளியே வந்தால் மீரா...!!!
அவள் நேராக சென்று நின்றது ஒரு பெரிய பங்களாவின் முன்...!!! அவளை தொடர்ந்துகொண்டு வந்ததோ நம் ரிஷியின் ஸ்கோர்பியோ ஆகும்.
அங்கு ஒரு ஒரமாக வண்டியை நிறுத்தியவள் தன் பையை திரந்து அதனுள் இருந்த பிஸ்கெட் பாக்கெடை எடுத்துகொண்டு அந்த பங்களாவின் முன் கேட்டிடம் சென்றாள். அங்கு இரண்டு நாய்கள் தன் கோர பற்களை காட்டிகொண்டு இருந்தது. மெதுவாக கேட்டிடம் சென்று நின்று பார்த்தால் அதுவோ இவளை குறி வைக்க ஒரு நிமிடம் பயந்தவள் ஒரு துண்டு பிஸ்கெட்டை அதற்க்கு போட்டால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுகொண்டு அதை சாப்பிட அவள் மனமோ
‘ம்கும் இவ்ளோ பெரிய வீடு ரெண்டு ஜிவங்களுக்கு ஒரு பிஸ்கெட் கூட போட ஆள் இல்ல போல’
மெதுவாக ஒவ்வொன்றாய் போட்டுகொண்டு இருந்தவள் திடிர் என்று அதுங்கள் இரண்டும் மயக்க நிலை அடைய வெற்றி சிரிப்புடன் அந்த பிஸ்கெட் பொட்டலத்தை பையில் திணித்தால். பின் வண்டியில் மாட்டி இருந்த பிரவஸ்னல் கேமிராவை எடுத்துகொண்டு அந்த பங்களாவை சுற்றிகொண்டு இருந்தாள்.
இதையெல்லாம் பார்த்தவன் ஆ வென்று வாயை பிளந்துகொண்டு நின்றுவிட்டான். அவன் மனமோ...
ரிஷி ‘என்னமா தில்லாலங்கடியா இருக்கா எப்பா...நாம வெளிபடையா பண்ண அதே வேளைய இவங்க பத்திரிக்கை பேர்க்கு பின்னாடி நின்னுட்டு செய்றாங்க...ஆமா இவனோட வீட்டுகுள்ள எதுக்கு போறா இவ? அவனே ஒரு 420 ம்ம்...ரிஷி உனக்கு பொறுப்பே இல்லாம போச்சு இனி அப்ப அப்ப அந்த பத்திரிக்கைக்கும் கம்பனிக்கும் போய் என்ன நடக்குதுனு பாத்துட்டு வரனும் இவ என்னதான் பண்ணிட்டு இருக்கா...அந்த வீட்டையே சுத்தி சுதி வந்துட்டு’
அவள் அந்த வீட்டை நோட்டமிட நம் ரிஷியோ மீராவை ஒளிந்து இருந்து நோட்டம்விட்டுகொண்டு இருந்தான்
-
அத்யாயம் 12
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11751853_562440133894096_4858899017077270358_n.jpg?oh=4ef99c5d186ef1abdeeb56a2b74f591a&oe=56552D7E&__gda__=1448521765_a55f416be8bce479456a10ee9df3685a)
மீரா நோட்டம் விட்டு கொண்டு இருந்தவள் மெதுவாக பக்கவாட்டு சுவர் பக்கம் செல்ல இவனும் மெதுவாக பின்னாடி சென்றுகொண்டு இருந்தான். தான் யார் என்பதையும் மறந்து அவள் பின்னாடி சென்றுகொண்டு இருக்கின்றோமே என்ற தோன்றியதை எண்ணி சிரித்துகொண்டு இருக்கும்போது சலசல என சத்தம் வர என்னடா இது என்று அவன் திகைத்துபோய் பார்க்க...
அவள் அந்த தென்னைமரத்தில் சுலபமாக ஏரிக்கொண்டு இருந்தால் அதை பார்த்ததும் திகைத்து அவன் மனசாட்சி சமனே இல்லாமல் ஆஜர் ஆகியது.
‘டேய் யாதவா இவ மனிசியா இல்ல வேற எதாதா? எப்பா....என்னயா இது...ரிஷி...இவள வெச்சிட்டு நீ...ஒரே கஷ்ட்டம் டா’
இவ்வாறாக அவன் யோசித்துகொண்டு இருக்க எதற்காக இப்படி தோன்றியது என்று யோசிப்பதற்க்குள் அவள் உள் பக்கம் எகிரி குதித்து இருந்தால்.
இவனும் பின்னாடியே செல்ல அவளை போல் எல்லாம் ஏற முடியாத காரணத்தினால் கொஞ்சம் தூரம் சென்றவன் அங்கு லைட்டுகாக கொஞ்சம் சுவரை விட்டு விலகி இருந்த செங்கலை பிடித்துகொண்டு ஒரே தாவாக தாவி அந்த பெரிய சுவரின் உள் குதித்தான். அதற்க்குள் அவள் அந்த விட்டின் ஜன்னல் வழியே வீட்டினுள் புகுந்து இருந்தால்.
போகும் வழியெங்கும் அவள் புகைப்படம் எடுத்துகொண்டே மேலையும் போக திடிர் என்று அவள் பின் திரும்ப பின்னாடியே வந்து கொண்டு இருந்தவன் குறும்புடன் புன்னகை புரிந்தான்.
முதலில் பயந்து கத்த போனவள் நிலைமையை புரிந்து தன் திகைப்பை மறைத்துகொண்டு அவனை முறைத்தால்.
மீரா “நீ...நீங்க்...நீ இங்க என்ன பண்ணற?”
ரிஷி “ம்ம்...நீ என்ன பண்ணுற சொல்லு”
மீரா “உனக்கு தேவ இல்லாத விஷயம்”
ரிஷி “நீ பத்திரிக்கை விஷயமா தான் இங்க வந்து இருக்கனு எனக்கு தெரியும் சோ சொல்லு ஒரு முதலாளியா கேக்குறேன் சொல்லு”
இவ்வாறாக கேட்டவுடன் உதட்டை கடித்து தன் உணர்வுகளை கட்டு படுத்த போராட அவன் பார்வை ரசனையுடன் அவள் உதட்டில் பதிந்தது. அதை கவனியாதவல் அமைதியாக நிற்க்க நேரம் போவதை உணர்ந்து நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தால்
மீரா “இது முன்னால் நடிகர் அஜய் ஒட வீடு”
ரிஷி “அப்படியா? எனக்கு தெரியாதே”
அவன் கிண்டலாக கூறவும் பற்கள் விழுந்துவிடும் அளவுக்கு பல்லை கடித்தவள் சரிதான் போடா என்று அவள் அவளுடைய வேலையை பார்க்க போக சடார் என்று அவள் கையை புடித்து இழுத்தான்
மீரா “ஏ என்ன திமிரா? நீ யார வேனா இருந்துட்டு போ அதுக்காக நீ என்ன பண்ணாலும் என்ன பேசினாலும் அமைதியா போவேனு நினைக்காத”
அவள் முகம் ரத்தமென சிவந்துவிட ஒரு பெண் சிங்கதின் தோறனையுடன் அவள் கர்ச்சிக்க ஒரு நிமிடம் திகைத்தவன் எப்பொழுதும்போல் குறும்பு புன்னகையுடன் அவள் முகத்தை திருப்பி ஜன்னல் வழியே வெளியே காண்பித்தான். அங்கு அந்த அஜய் அவன் கோபத்துடன் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தான். நாய்களின் குலைக்கும் சத்தம் கூட நின்று போய் இருந்ததை கவனிக்காத அளவு கோபம் அவன் முகத்தில் தாண்டவம் ஆடியது.
அவனை பார்த்ததும் மீராவின் முகத்தில் பயம் வர நம் நாயகனோ எப்பொழுதும் போல் புன்னகையுடன் நின்றுகொண்டு இருந்தான் அவன் முகத்தில் பயமோ பதட்டமோ இல்லததை பார்த்தவளின் முகம் இப்பொழுது கோபம் குடிகொண்டது.
மீரா “எதுக்கு ஈஈ’னு இளிச்சிட்டு இருக்குறிங்க? உன்னால தான் எல்லாமே நீங்க வராம இருந்து இருந்தா நான் எப்பவோ என் வேலைய முடிச்சிட்டு போய் இருப்பேன் ச்ச”
ரிஷி “உனக்கு தான் மரியாதை கொடுக்க வரல’ல அப்புறம் எதுக்கு கஷ்ட்ட படற? விட்டுட்டு”
மீரா “ம்க்கும் இப்போ இது ரும்ப முக்கியம் ச்ச என் வேலையே கெட்டு போச்சு இப்போ இனி இந்த மாதிரி ஒரு சான்ஸ் எப்போ வருமோ”
ரிஷி “அப்போ மாட்டிப்போம்ன்ற பயம்லாம் இல்லயா?”
அவள் மாட்டிப்போம் என்று பயந்து தான் கத்திகொண்டு இருக்கிறால் என நினைத்தவன் அவள் இப்படி சொல்லவும் என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் இவ்வாறு கேட்க்க
மீரா “அதலாம் நான் மாட்ட மாட்டேன்”
ரிஷி “அவ்வளவு நம்பிக்கையா?”
மீரா “ஆமா...இப்படி உள்ள நுழைறவளுக்கு வெளிய போக தெரியாத என்று கூறினால்”
ரிஷி “நான் இப்போ சத்தம் போட்டா?”
மீரா.“நீ பண்ண மாட்ட...பண்ணினா நியும் மாட்டிப்ப தவிற எதாச்சுனா என் ஃபிரேண்ட்ஸ் சும்மா விடமாட்டாங்க”
அவனுக்கு இதை கேட்டதும் காதில் புகை வரதா குறையாக இருக்க அவளோ இப்படி கூறிகொண்டே அந்த வீட்டின் டெரஸின் படிகளில் கால் வைக்க
ரிஷி “எங்க போற?”
மீரா “ம்ம்...தப்பிக்க வேணாமா? டெரஸ் போனா அங்க ஒரு ஏணி கிழ வரிக்கும் இந்த ஆள் வெச்சி இருப்பான் அதுல போனா சிக்கிரம் தப்பிச்சிடலாம் உனக்கு வேணும்னா நியும் சிக்கிரம் வா”
ரிஷி “இதலாம் உனக்கு எப்படி தெரியும்”
மீரா “ஐயோ இங்க வரர்த்துக்கு முன்னாடியே இந்த வீட்டோட பிளு பிரிண்ட்’அ எடுத்துட்டு தான் வந்தேன் வளவள’னு பேசாம சிக்கிரம் வா அவன் மேல வந்துட்டா அவ்வளவு தான்”
ரிஷி “ஹெ பாப்பா நீ கொஞ்சம் நில்லு உனக்கு எதுக்கு இத்தன லொள்ளு”
கோபத்தோடு திரும்பியவள் கையில் வைத்து இருந்த பென்’னின் பின் பக்க முடியை திரந்து அவன் கழுத்தில் வைக்க அவன் அவளை முறைத்தான். காரணம் அதன் பின் பக்கம் ஒரு சிறு வெட்டு பிளேட் இருந்தது.
மீரா “வாய வெச்சிட்டு சும்மா வரல அவ்வளவு தான்”
ரிஷி “ஹெல்ப் பண்ணலாம்னு பாத்தேன் வேணாம்னா போ”
அவன் இருந்த இருப்பென்ன சிரிப்பு கிலோ என்ன விலை என்று கேட்பவன் இப்பொழுது ஒரு காலேஜ் பையனை போல் பேசி அவளை சீண்டிகொண்டு இருந்தான் அவன் அதை பற்றியெல்லாம் கவலைகொள்ளவில்லை...அவனுக்கு அவளுடன் இருக்கும்போது மனதில் ஒரு அமைதி என்நேரமும் உதட்டில் புன்னகையுடன் இருக்க முடிகிறது. அது அவனுக்கு போதுமானதாக இருக்க கேலி செய்துகொண்டு இருந்தான்
மீரா “ஐய்யே...ஹெல்ப் பண்ணுற முகத்த பாரு”
ரிஷி “நான் அம்புட்டு அழகாவா இருக்கேன்? ரிடர்ஸ’லாம் என்னயவே பாக்க சொல்லுற?”
மீரா “ரும்ப ஆசை தான் உங்க முஞ்ச கூட பேசுறவங்க பாக்கர்தே கஷ்ட்டம் இதுல ஊரே பாக்கனுமாமில்ல”
ரிஷி “எனக்கு யாரும் பாக்க வேணாம் நீ பாத்தா போதும்”
மீரா “என்னது?”
ரிஷி “ஆ...அது ஒன்னுமில்ல...நீ தான இப்போ என்ட பேசுற அத சொன்னேன்
‘எப்பா என்ன முறை முறைக்கிறா’
அவன் மனதினுள் நினைத்துகொண்டு இருக்க அஜய் மேலே வருவதை பார்த்த இருவரும் திகைத்து அப்படியே நின்றனர்.
-
அத்யாயம் 13
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11825238_563408160463960_3300534711921385939_n.jpg?oh=b4d976a7ff4c3748f646883030e02f09&oe=563A566C)
அஜய் அங்கு வருவதை பார்த்தவர்கள் திகைத்து நின்றது ஒரு நிமிடமே அடுத்த நிமிடம் இருவரும் எதிர் எதிர் திசையில் நகர்ந்து ஒருவர் மீது ஒரு முட்டிகொள்ள வலியில் மீரா’வின் முகம் சுருங்கியது. அதை பார்த்தவனின் மனம் பதற அவள் தலையை தடவி விட போக அவன் கையை தட்டி விட்டவள். சடக்கென்று பக்கதில் உள்ள அறைக்குள் புகுந்து அவனையும் இழுக்க அவன் அவள் மேலேயே சரிந்தான்.
இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலக்க ஸ்டாச்சு சொன்னது போல் அசையாமல் இருந்தனர். முதலில் சுதாரித்தது நம் மீரா தான்.
மீரா“ஸ்ஸ்...எழுந்துடு யாதவ்”
“ஹெ நான் சொல்றது உனக்கு கேக்குதா இல்லயா”
“ஹெய் யாதவ் எழுந்துடு”
ஏற்கனவே அவள் கண்களின் விழுந்துகிடந்தவன் அவனின் யாதவ் என்ற அழைப்பே போதை ஏற்ற குனிந்து மீன் குட்டியை போல் துள்ளி கொண்டு படபடத்து கொண்டும் இருந்த அவள் வலது கண்ணின் மேல் தன் இதழ்களை பதித்தான்.
அவனின் திடிர் தாக்குதலில் நிலைகுலைந்தவள் சுதாரிக்கும் முன்பே அவளது கன்னங்களில் இறங்கின அவன் உதடுகள். மேலும் என்ன நடந்து இருக்கும்மோ அதற்க்குள் அஜயின் அரவம் கேட்க அவனை தள்ளிவிட்டு விலகியவள் சுவரோரம் ஒட்டி நின்றாள். அவனோ எதுவும் தோன்றாமள் அவன் இழுத்த இழுப்பிற்க்கு சென்றான்.
அஜய் “மிஸ்டர். ராஜ் நான் சொன்ன மாறி அந்த சீமான் கிட்ட கள்ள நோட்டு கொடுத்து அனப்பிட்டேன் நீங்க அந்த டைமண்ட்ஸ்’அ அவனுக்கே தெரியாத மாறி அந்த வாச் போக்ஸ் ல கொடுத்து அனப்பிடுங்க”
மேலும் அவன் அவனின் கேடி வேலைகளை பற்றி பேசிகொண்டே போக...எழுந்த அடுத்த நிமிடம் தன் மினி ரெக்கார்டரை ஆன் செய்தவள் தனது கேமரா மூலம் அனைத்தையும் படம் பிடிக்க ஆரம்பித்தாள். இதை பார்த்துகொண்டு இருடவனோ இமைக்கவும் மறந்து அவள் முகத்தை பார்த்துகொண்டு இருந்தான்.
பேசிகொண்டே அவன் மேலும் இரண்டாவது மாடிக்கு சென்றவன் அங்கு இருந்து ஒரு பெண்ணை நாயை விட கேவலமாக இழுத்துகொண்டு வந்தான். அவளை பார்த்தாலே தெரிந்தது உடல் ரிதியாகவும் மன ரிதியாகவும் மிகவும் காயப்பட்டு இருக்கிறாள் என்று அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் அதிர்ந்தவள் வெளியே சென்று அந்த அஜயின் சட்டையை கொத்தாக பற்றும் ஆதிரம் வந்தது. அவள் கண்களில் இருந்தே அவள் என்ன யோசிக்கிறான் என்று அறிந்தவன் அவளை நகர முடியாத படி இழுத்து பிடித்தான்.
மீரா “விடு யாதவ்”
ரிஷி “பொறுமை மீரா வெளில மாட்டினினா அவ்வளவு தான்”
மீரா “அதுக்கு சும்...”
ரிஷி “சும்மா இருக்க சொல்ல’ல வந்த வேலை முடி அப்புறம் பாக்கலாம்”
மீரா “ம்ம்”
அவள் அதற்காக தான் வந்தாள் என நினைத்து அவன் பேசிகொண்டு இருக்க அவளோ வெறும் அவனின் கள்ள நோட்டு பற்றிய ஆராய்ச்சியில் வந்தவள் இப்படி ஒரு பெண்ணின் அவல நிலையை பற்றி அறிந்து இருக்கவில்லை ஆனால் அவள் திடுக்கிட்டது ஒரு நிமிடமே...மறு நிமிடம் ரௌத்திரம் பொங்க அதற்க்கு மறு நிமிடம் ரிஷியின் வார்தையினால் நிதானதிற்க்கு வந்தாள்.
அஜய் அந்த பெண்ணை ஒரு முலையில் தள்ளியவன் அங்கு வைக்கப்பட்டு இருந்த உசிய சாப்பாடை போட்டவன் அவள் அதை கடகடவென சாப்பிட்டு கொண்டு இருப்பதை ஒரு குருரத்துடன் பார்த்துகொண்டு இருந்தான். அவள் சாப்பிடும் வேகத்திலேயே தெரிந்தது கொலை பட்டினியில் இருக்கிறாள் என்று...!!!
அனைத்தையும் மீராவின் கேமரா படம் பிடித்துகொண்டு இருக்க மீராவின் கண்கள் என்னும் கேமராவோ ஒரு வித ஆத்திரத்துடன் படம் பிடித்து தன் அறிவு பெட்டகத்தில் பதிவு செய்துகொண்டு இருந்தது.
சிறிது நேரத்தில் அந்த பெண்ணை மறுபடியும் அந்த அறையில் வைத்து புட்டியவன் வெளியே சென்றுவிட்டான். அவன் சென்றதை உறுதி படுத்திகொண்டவர்கள் வெளியே வந்து அந்த பெண் இருக்கும் அறையை நோக்கி விரைந்தனர். அங்கே புட்டிய கதவு அவர்களை பார்த்து கைக்கொட்டி சிரிக்க என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தனர். மீரா கதவு துளையின் வழியாக பார்த்தவள் திகைத்தால், அடுத்த நிமிடம் அவள் பேசிய ஒரே வரி...
மீரா “யாதவ் இந்த... இந்த கதவை உடைக்கனும் ஆனா...நீ...நீ இங்க இருந்து...போய்டு...பிளிஸ்”
அவள் திக்கி திணறி பேசியதை கண்டு குழம்பி கொண்டவன்...என்ன அகிற்று என கேட்டுகொண்டே அந்த கதவை நோக்கி நகர பதற்றத்தோடு அவனை தடுத்தவள் அவனை இங்கு இருந்து செல்லுமாறு கூறவும் திகைத்து பின் கீழே சென்று காத்து இருந்தான் அதே குழம்பிய மனதோடு...!!!
அங்கே அவளோ கைகள் நடுங்க அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்து கதவை உடைக்க ஆரம்பித்தால். அந்த பெண்ணோ ஒரு ஒரு முறை வந்த சத்ததிற்க்கும் உடல் குலுங்க பயந்து நடுங்கினால்.
ஒரு வழியாக கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தவள் முதலில் செய்த காரியம் தன் பையினுள் இருந்த உடையை எடுத்து அந்த பெண் பயத்தில் நடுங்க நடுங்க அவளுக்கு புரிய வைத்து அணிவித்துவிட்டாள். பின் சுற்றி பார்வையை சுழற்ற பயந்து அவளை அழைத்துகொண்டு வெளியே வருவதற்க்குள் அவள் பாதி வாழ்வே முடிந்துவிட்டது போல் உண்ர்ந்தாள் ஆனால் ஏற்கனவே அழிந்துவிட்ட அந்த பெண்ணின் வாழ்வை எண்ணி அவளையும் உணராமல் கண்களில் கண்ணிர் சுரந்தது. ஆனாள் அந்த பெண்ணோ உணரும் எண்ணம் சிறிதுமின்றி கள்ளம் கமடமில்லாத சிரிப்போடு அவளுடன் கீழே வந்தாள்.
அங்கு ரிஷி இவர்களுக்கு தேவையென தோன்றிய இன்னும் சில குறிப்புகளை அஜயின் பிசியிலும் அவனின் பைல்களில் இருந்தும் எடுத்துகொண்டு இருந்தான். பின்பக்கம் அரவம் கேட்டு திரும்பியவன் அந்த பெண்ணின் நிலையை கண்டு அதிர்ந்தான்.
ஒரு வழியாக அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து மதியின் காட்டரிங் சர்விஸ் மற்றும் குடியிருப்பிற்க்குள் நுழையும் வரை மீரா பேசவில்லை. அந்த பெண்ணும் கண்களில் தெளிவற்ற சுழற்சியுடன் அனைத்தையும் வேடிக்கை பார்த்துகொண்டு வந்தாள். ரிஷி மீராவை பார்ப்பதும் வண்டியை ஒட்டுவதுமாக இருந்தனர்.
-
அத்யாயம் 14
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11813405_564417853696324_9203045095108012766_n.jpg?oh=e032efc2fa064976f6ea5d3255d2419b&oe=5643AC7B&__gda__=1448818720_f6ff48e8f39754b226208f557d482cff)
அவர்கள் இருவரும் அந்த பெண்ணை கூட்டிகொண்டு வருவதற்க்குள் படாதுபாடுபட்டுவிட....ரிஷியின் முகத்தில் உதவி செய்யும் மனபான்மை இருக்க மீராவின் முகமோ அங்கு அந்த பெண் இருந்த நிலைமையை கண்டதில் இருந்து கோவத்தில் சிவந்துகிடந்தது.
அதற்க்குள் நம் ஐவர் குழுவில் நால்வர் வந்துவிட்டனர் முதலில் ரிஷியின் காலில் பயந்து அவனால் தான் எதோ அகிவிட்டதோ என பதறிகொண்டு ஓடிவர அங்கே இன்னும் ஒரு பெண் அதுவும் புத்திசுவாதினம் இல்லாத ஒரு பெண்ணை கண்டதும் இது வேறு ஏதோ பிரச்சணை என தெளிந்தவர்கள்
மீரா’வின் நிலையை கண்டு அவளிடம் விரைந்தனர்.
அவள் யாரையும் பக்கத்தில் விடாமல் சிடுசிடுக்க மதி பொறுமையாக உள்ளே கூட்டிசென்று மெதுவாக பேச்சு கொடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டவள் அந்த பெண்ணிற்க்காக வருத்தபடுவதா இல்லை அஜயின் மேல் கோவம் கொள்வதா என்று தெரியாமல் மீராவிற்க்கு தூக்க மாத்திரையை கொடுத்து ஓய்வெடுக்க கூறிவிட்டு வந்தாள் அனைவரும் அவளையே பார்த்துகொண்டு இருந்தனர் ரிஷியையும் சேர்த்து...ஏனேனில் அவனுக்கும் அந்த அறையில் என்ன நிகழ்ந்தது என தெரியாது.
வெளியே வந்த மதி அந்த பெண்ணிற்க்கு சாப்பிட கொடுத்து அவளையும் ஓய்வெடுக்க வைத்துவிட்டு வெளியே வந்தாள். அதற்க்குமேல் பொறுக்க முடியாமல் ஆதி அவள் கையை பிடித்து இழுத்து விஷயத்தை கேட்டான். அவன் கேட்ட அடுத்த நொடி அவள் தலைமேல் கை வைத்துகொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
ஆதி “என்னாசு மதி? என்னனு சொல்லு ரிஷி’அ கேட்டாலும் எதும் சொல்ல மாட்டாரார்”
மதி “ஆதி............”
அவள் கண்களில் கண்ணிரோடு அவன் தோளில் சாய்ந்துவிட்டால். பாவம் மனதில் திடந்துடன் இருக்கும் மீராவே அந்த பெண்ணின் நிலையில் தவித்துவிட மென்மையான மனம் கொண்ட மதி என்ன செய்வாள்?
வீரா “ஹெய் மதிமா என்னச்சு? என்ன? சொல்லு...மீர...மீராக்கு ஒன்னுமில்லை தான?”
மதி “அதல்லாமில்ல வீரா”
சித்து“பின்ன என்னச்சு சொல்லு மதி எல்லாரையும் பதட்ட பட வெக்காத”
ரிஷி “நான் சொல்றேன் சித்து”
ஆதி “சொல்லுங்க ரிஷி பிளிஸ் சிக்கிரம்”
அவர்கள் அனைவரையும் பார்த்து அவர்களில் உறவின் பிடிப்பை கண்டு திகைத்தவன். அவன் அவளை பார்த்ததில் இருந்து அனைத்தையும் சொன்னவன்...கொஞ்சம் சென்சார்டுடன் தான்....அந்த பெண்ணை பார்த்தது பின் மீரா அவளை வெளியில் இருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்றதில் இருந்து அவள் காரில் கூட எதுவும் பேசாத வந்தது வரை சொல்லிவிட்டான்.
ரிஷி “அந்த அறை’ல என்ன நடந்துச்சுனு எனக்கும் தெரியாது பாஸ்...அவ என்ன உள்ளயே விடல...சரி தொல்ல பண்ண வேணாம் எதாச்சு காரணம் இருக்கும்னு நினைச்சி வந்துட்டேன், ஆனா எனக்கும் அந்த பொண்ண வண்டில ஏத்துறவரிக்கும் அவங்க மனநிலை சரி இல்ல’னு தெரியாது”
இதை கேட்டு முடித்தவர்கள் அந்த அறையில் தான் ஏதோ நிகழ்ந்து இருக்கிறது என மதியின் முகத்தை பார்க்க...அவளோ திகைப்பில் இருந்து வெளிவராமல் இருந்தால்...சித்து அவளிடம் சென்றவன் பளார் என அவள் கன்னத்தில் ஒரு அரை வைத்தான்.
சித்து“டேய் ஏன்டா அவள அடிக்கிற பைத்தியமா உனக்கு?”
வீரா “சித்து இது சரி இல்ல எதுக்குடா அவள அடிக்கிற அவங்கள பாதிக்கிற மாதிரி ஏதோ நடந்து இருக்கு அதான இப்படி இருக்காங்க”
சித்து“நானும் அதுனால தான் வீரா அவள அடிச்சேன்...தெளியட்டும்’னு, ஆதி...எனக்கு மட்டும் ஆசையா என்ன? என்ன ஏது’னு தெரிஞ்சா தான? இதுக்கு அப்புறம் என்ன செய்யற்துனு தெரியும்?”
மதி அவளை அடித்ததும் அவர்களை பரிதாபமாக பார்க்க சித்து சொன்னதின் உண்மை புரிந்து அங்கு என்ன நடந்ததுனு சொல்ல ஆரம்பித்தாள்.
இதுவே நடந்தது...அங்கு மீரா கதவின் துளையில் இருந்து பார்த்தவள் திகைத்தால்..ஏனேனில் அங்கே சுற்றிலும் கண்களையும் மனதையும் கூச வைக்கும் படங்களும். நடுவில் அந்த பெண் மனதை பதற வைக்கும் நிலையிலும் இருந்தாள்....கேமரா பொருத்தபட்ட நிலையில் ஒரு மிருகத்தைவிட கேவலமாக தாழ்த்தபட்டு இருந்தாள். முதலில் ஜன்னல் வழியாக அவள் முகம் பதியாத மாதிரி நின்றவள் அந்த கேமிராவின் மீது பக்கத்தில் இருந்த இரும்பு பிளவர்வாஸை துக்கி ஏரிந்தவள் அது உடைந்ததும் கதவை உடைத்து உள்ளே சென்று அந்த பெண்ணை நெருங்கினால்...இதில் அனைத்திலும் மனம் பதறிகொண்டு இருந்தவள் அந்த பெண்ணிற்க்கு மனநோயாளி என அறிந்ததும் மொத்தமாக உடைந்தாள்...!!!
அந்த பெண்ணை சமாளித்து உடை அணிவித்துவிட்டு வெளியே கொண்டு வருவதற்க்குள் பாதி மனதால் இறந்ததுபோல் இருந்தது மீராவிற்க்கு...!!! வண்டியில் வரும் அந்த 40 நிமிடங்களும் அவள் மனம் அந்த அஜயை உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சித்துவிட்டாள்.
ஆனாலும் அவள் மனம் ஆறவில்லை...முழு தெளிவுடன் இருக்கும் பெண்களே இன்நிலைமையில் இருந்து இருந்தாள் ஏன்? அவளே இருந்து இருந்தால் கூட ஒரே நாளில் இறந்துவிட்டு இருப்பால் பாவம் அந்த அபலை பெண் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆள் ஆனாலோ என மனம் தவித்துவிட்டது. பெண்களை உடல் ரிதியாகவும் மன ரிதியாகவும் மிகவும் சோர்ந்துபோக வைத்திவிட்டது இந்த சமுதாயம் இதில் இவ்வாறு ஒரு சகமனிதனாக கூட பாவிக்காத நிலையை கண்டு கொதித்தெழுந்தாள்...!!!
சொல்லி முடித்து மதி முகத்தை முடிகொண்டு அழ அங்கே அமைதி நிலவியது...!!!
மதி “என்னால முடில வீரா....கேட்ட எனக்கே மனசு ஆறலையே அத கண்ணால பாத்த மீரா எவ்வளவு கஷ்ட்ட பட்டு இருப்பா?”
“அத கூட விடு இவ்வளவு கஷ்ட்ட பட்ட அந்த பொண்ணு எவ்வளவு பாவம் அதும்....அவளுக்கு என்ன...என்ன நடக்கதுனு கூட புரிஞ்சிக்க முடியாத ஒரு நிலை’ல”
“ஐயோ முடில ஆதி....”
“அவன எதாச்சு பண்ணியே அகனும் சித்து”
இவ்வாறாக அவள் புலம்பி கொண்டு இருக்க பெண்களில் இந்த சாபகேட்டை நினைத்து அழுவதா இல்லை மனிதானாக உருவில் மட்டும் இருந்துகொண்டு ஜந்துவை போல் நடந்துகொண்டு இருக்கும் அந்த அஜயை துண்டு துண்டாக வெட்ட கோவபடுவடதா என இரு வேறு மனநிலையில் இருந்தனர்.
-
அத்யாயம் 15
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11825757_565031693634940_8946538013672170550_n.jpg?oh=8fd724f873f0c3ed537fcd10c74663e1&oe=563E1F19&__gda__=1448132723_719ebaaedd6d90d65c6a12bf31791fb2)
சிறிது நேரத்தில் தூக்கம் கலைந்து ஏழுந்து வந்த மீரா அங்கு யாரையும் காணாமல் திகைத்தால். பின் அந்த பெண்ணை தேட அவளையும் காணாமல் மேலும் திகைத்து வெளியே வர அங்கு ரிஷி மட்டுமே இருந்தான்...!!!
மீரா “எல்லாரும்....எல்லாரும் எங்க? அந்த பொ..பொண்ணுக்கு?”
ரிஷி “வா....!!!”
மீரா “எங்க? ஹெய்...கேக்குறேன்’ல? சொல்லு நீ பாட்டுக்கு உள்ள போய்ட்டே இருக்க?”
ரிஷி “வந்து உக்காரு”
மீரா “முதல என்னனு சொல்லு”
ரிஷி “இந்தா பக்கத்துல இருக்க கடை ல எதும் ஐஜினிக்’அ இல்ல சோ....எதோ எனக்கு தெரிஞ்சது....”
மீரா “நான் என்ன கேக்கறேன் நீ சாப்பாடு பத்தி பேசிட்டு இருக்க?”
ரிஷி “காபி நல்லா தான் இருக்கும் இந்த பிரெஞ்ச் பிரெஸ் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ”
மீரா "எர்ர்ர்ர்...”
ரிஷி “சாப்பிடும்போது கோவபட கூடாது”
மீரா “நான் இன்னும் சாப்பிடவே இல்ல உங்கிட்ட கேட்டு டைம் வேஸ்ட் பண்ண நான் தயார்’அ இல்ல”
ரிஷி “சரி சரி உக்காரு சொல்லுறேன்”
மீரா“சொல்லு”
ரிஷி “நீ லஞ்ச் கூட சாப்பிடல மீரா பிளிஸ் நீ சாப்பிடுவியாம் நான் அப்டியே சொல்லிட்டே வருவேனாம்”
அவன் கெஞ்சிய கெஞ்சலில் கொஞ்சம் மனம் இறங்கியவள் காபியை மட்டு எடுத்து பகிர ஆரம்பித்தால், அவனும் சொல்ல ஆரம்பித்தான்.
மதி சொல்லிவிட்டு புலம்ப ஆரம்பித்ததும் முதலில் சுய நினைவிற்க்கு வந்தது ஆதி தான்.
ஆதி“எங்களுக்கு வந்த இன்ஃப்ர்மேசன் படி அவன் வெரும் கள்ள நோட்டு அடிக்கிறவனு தான் நினைச்சோம் ஆனா இப்படி...!!!”
சித்து“என்ன சொல்லுற அதி? உனக்கு முன்னாடியே தெரியுமா?”
ஆதி“ம்ம்...எனக்கு தான் இந்த அசைன்மென்ட் கொடுத்தாங்க...ஆனா அவ தான் விடாபிடியா அத அவளே முடிக்கிறேனு வாங்கிட்டா...சரி அவ்வளவு சிக்கிரம் எதும் பண்ணமாட்ட நாளைக்கு காலை’ல உங்கிட்ட சொல்லு மாத்தாலாம்ன்றத்துகுள்ள இப்படில்லாம் ஆகிப்போச்சு”
வீரா “இப்போ அந்த பொண்ணுக்காக பாக்கற்தா இல்ல மீரா ஒட நிலைமை’அ நினைச்சி கவலை படுறதா”
சித்து“வீரா நம்ம மீரா அ கண்டிப்பா மாத்த முடியும்...ஆனா அந்த அஜய சும்மா விட கூடாது டா”
ரிஷி “ம்..இதுலாம் நான் அங்க இருந்து தேவப்படும்’னு எனக்கு பட்டத எடுத்து வந்துருக்கேன் பாரு ஆதி”
அவர்கள் பேசுவதற்க்குள் ரிஷி, தான் எடுத்து வந்து இருந்த பைல்களை எடுத்து கொடுத்தான். அதன் வாங்கிய ஆதியின் முகம் யோசனையுடன் கண்களை அதில் மேய விட்டவன் ஒரு பைலில் இருந்த விஷயத்தை கண்டு முகம் பிராகாசித்தான்.
சித்து“என்ன ஆதி? எதாச்சு யுஸ் இருக்கா”
ஆதி“ஐயோ சித்து இது போதும்...தாங்க்ஸ் ரிஷி இது அந்த அஜய் ஒட தலை எழுத்தே மாத்த போகுது”
வீரா “நிஜமா முடியுமா ஆதி? அப்புறம் மீரா’அ பத்தி அந்த அஜய்க்கு தெரிய வாய்ப்பில்ல தான? அவளோட ஃபேஸ் அந்த காமிரா’ல....இவங்க ரெண்டு பேரும் அதுல சிக்கினா கண்டிப்பா இவ்வளவு நேரத்துக்கு அஜய் தப்பிச்சிட்டு இருப்பான்”
ஆதி “நாங்க மாட்டமாட்டோம் வீரா”
ரிஷி “அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லுறிங்க?”
ஆதி “அவன்க்கு இன்னிக்கு நைட் ஒரு கடத்தல் கும்பலோட மீட்டிங் இருக்கர்தா அவன் போன்’ல பேசிக்கிட்டான் சோ நம்ம போலிஸ்’க்கு இப்போவே சொல்லிட்டு பேப்பர்லையும் போட்டுட்டா அவனால தப்பிக்க முடியாது...என்னோட ஆளுங்கல அவன கண்காணிக்க சொல்லுறேன்”
இவர்கள் பேசி முடித்ததும் போலிஸ்ற்க்கு வீரா போன் பண்ண ஆதி பத்திரிக்கை அலுவலகத்திற்க்கு கிளம்ப தயாராக ரிஷி அவன் ஆட்களிடம் சொல்லி அஜய்யை கண்காணிக்க ஏற்ப்பாடு செய்தான். பின் மீராவுடன் யார் இருப்பது என குழப்பம் வர ரிஷி மதியை அந்த பெண்ணிற்க்கு துணையாக அனப்பிவிட்டு மீராவிற்க்கு துணையாக இங்கே இருந்தான். சந்தேகமாக பார்த்த அவர்களை சமாளித்து அனப்பினான்.
சொல்லி முடிக்கும்போது அவளின் மன நிலையை என்னவென்று சொல்வது என தெரியவில்லை...!!!
அந்த அஜயை நினைத்தால் கோபம் ஆத்திரம் ரௌத்திரம் என அனைத்து கலந்து அவள் முகம் பார்க்க காளி அவதாரம்போல் இருந்தது.
மீரா “அவனலாம் கொல்ல கூடாது அனு அனுவா சித்திரவந்தை பண்ணணும்...ச்ச மனிசனா அவன் பாவம் புத்தி இல்லாத பொண்ணாய் கூட்டிட்டு போய்...”
எங்கே எதுவாவது அகிவிடுமோ என பயந்து அவளை உலுக்கியவன்...
ரிஷி “மீரா...மீரா....விடு..அவன்லாம் மனிசனு சொல்லி ஏன் கவல படுற...பொண்ணுங்கள மதிக்க தெரியாதவன்லாம் மிருகம்...உடல மட்டு பாக்குறது ஒரு ஆம்பிளையே இல்ல”
மீரா “ச்ச...விடு என்ன...நீ என்ன அவன பத்தி பேசுற நீ மட்டு ஒழுங்கா? விடு விடு விடு...என்ன விடு சொல்லுறேன் இல்ல...”
கத்திகொண்டே அவனிடம் இருந்து விடுபட போறாடினாள்...ஆனால் அவன் இரும்பு பிடியில் இருந்து விலக முடியாமல் தோய்ந்து சரிந்தாள் புலம்புவதை நிறுத்தாமல் தான்...!!!
மீரா “இந்த ஆம்பிளைகளே இப்படி தான்...ச்ச்...பொண்ணு’அ ஒரு அபாச பொருளா பாக்குற ராட்சன்...நீ மட்டு என்ன...உத்தமன் மாதிரி பேசுற பாத்த ரெண்டு நாள் கூட ஆகாத பொண்ணுகிட்ட தப்ப தான நடந்துக்கிட்ட...விடு மரியாதை’அ விடு...தப்ப உன்பேர்’ல வெச்சிக்கிட்டு அந்த டிரைவர் கிட்ட என்னமோ நான் தப்பு பண்ண மாதிரி இல்ல சொன்ன...விடு இல்ல என்ன பண்ணுவேனே தெரியாது...விடு....”
பைத்தியம் பிடித்தவள் போல் கத்திகொண்டு இருந்தவளை என்ன பண்ணுவது என திகைத்தவன்...சித்துவைபோல் இவனும் மீராவை பளார் என அரைந்தான்...மிகவும் பலமாக...!!! அதில் விதிர்விதிர்த்து போனவள் கதறி கொண்டு அவன் மார்பின் மீதே சரிந்தாள். அவளை ஒரு நிமிடம் இருக்க அணைத்தவன் அவளை துக்கிகொண்டு போய் படுக்கையில் விட்டு...அவள் நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்தவனின் கண்களிலும் ஈரம்...!!!
-
அத்யாயம் 16
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11855809_565885550216221_9161858757838033719_n.jpg?oh=6ceab13e7b160a5d5e2275f9f401f53f&oe=564ECDD1&__gda__=1448232842_6ea51556feea8a7de4517b4481bff818)
எப்பொழுது தூங்கினோம் என புரியாமலே அவள் தூங்கிவிட இரவு ஒன்பது மணி அளவில் மதி வந்து எழுப்பியதும் தான் எழுந்தாள். ஒரு நிமிடம் எங்கு இருக்கிறோம் என குழம்பியவள் பின் நடந்ததெல்லாம் நினைவு வர முகத்தை சுருக்கி அவன் கண்களின் கண்ணீரை நினைத்து பார்த்தாள்.
மதி “என்னச்சு மீரா? ஏன் இப்படி குழப்பமா பாக்குற வா வெளில போலாம்”
மீரா “ம்ம்...இரு கொஞ்சம் முகம் கழுவினு வரேன்”
மதி “ம்ம். சரி சரி நீ வா நான் டினர் எடுத்து வைக்குறேன்...இனிக்கி நமக்கு எல்லாம் இங்க தான் ஸ்ட்டே”
மீரா “ஓ”
ஒற்றை சொல்லோடு அவள் நகர்ந்துவிட வினோதமாக அவளை பார்த்துவிட்டு வெளியே வந்தாள் மதி...மதியின் வினோத பார்வையில் அனைவரும் குழம்பினாலும் மீரா எவ்வாறு ரியாக்ட் பண்ணிருப்பாள் என்ற யுகம் கொண்ட ரிஷியோ என்ன வர போகிறதோ என பயந்தான்.
உள்ளே மீராவின் மனமோ வேறு வகையாக குழம்பி கொண்டு இருந்தது
மீரா ‘இந்த யாதவ் இருக்கனா போய்ட்டனா?”
“நாம பண்ணதுலாம் சொல்லி இருப்பனோ’
‘ஆனா மதி எதும் சொல்லலையே’
‘இவ்வளவு நேரமாகியும் இங்கயே இருப்பானா என்ன?’
இவ்வாறாக யோசித்துகொண்டே வெளியே வந்தவள் அந்த அறையின் பால்கனியில் ரிஷி நின்றுகொண்டு இருந்ததை கண்டு திகைத்தால். என்னடா இது என திருதிருவென முழித்தவள் திரும்பி வெளியே செல்ல போக
ரிஷ “கொஞ்சம் நில்லு மீரா”
மீரா 'ஐயயோ பாத்துட்டானே இவன் இன்னும் போகாம என்ன பண்ணுறான்”
ரிஷ “இன்னும் என்ன பண்ணுறானு தான யோசிக்கிற?”
சிரித்துகொண்டே அவன் கேட்க பேய் முழி முழித்து உண்மையை சொல்லாமல் சொல்லி பின் இல்லை என கூறி அதற்கும் முழித்து வைத்தாள்.
ரிஷ “போதும் முழிச்சது மீரா அப்புறம் உன்னோட முட்ட கண்ணு வெளில வந்து விழுந்துட போகுது”
மீரா “நான் போறேன்”
ரிஷ “கொஞ்சம் இரு மீரா...”
மீரா “என்ன”
ரிஷ “ஐம் சாரி....நான் உங்கிட்ட அப்படி சொல்ல சொல்லி சொல்லிருக்க கூடாது தான்...என்ன மனிச்சிரு”
மீரா “ம்ம்...”
ரிஷ “ நீ என்ன நினைக்கிறனு என்னால புரிஞ்சிக்க முடியுது ஆனாலும் எனக்கு அப்ப என்ன பண்ணுறது தெரில...”
மீரா “பரவால”
ரிஷ “ஆனா....”
மீரா “புரிது நீங்க வேனும்னு சொல்லலனு...நீ...நீ உன்னோட கண்ணுல இருக்க கண்ணீர பாக்கும்போதே புரிஞ்சிது”
ரிஷ “ஓ”
மீரா “ம்ம்...வெளில எல்லாரும் வைட் பண்ணுறதா மதி சொன்னா போலாமா?”
ரிஷ “ம்ம்....போலாம் வா”
அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே வர அங்கே அனைவரும் குசுகுசு என எதுவோ பேசிகொண்டு இருந்தனர். என்னவென்று ரிஷியின் முகம் பார்க்க அவன் முகமோ எதையும் வெளிகாட்டமாட்டேன் என அடம் பிடித்தது.
மீரா “என்னாச்சு?”
சித்து“அது...ஒன்னுமில்லை மீரா வா வந்து சாப்பிடு செம பசி ல இருக்கோம் எல்லாரும்”
மீரா “ம்ம்....சரி”
பாவம் பசியோடு இருப்பவர்களை காய போட வேண்டாமென அவள் ஓப்புகொண்டு உட்கார்ந்தாள். பின் பார்வையை சுழற்றியவள் அப்பொழுது தான் கவனித்தால் அந்த பெண் அங்கு இல்லாததை...!!!
மீரா “அந்த பொண்ணு எதோ மதி?”
அவள் கேட்டதும் அங்கே ஒரு பலத்த அமைதி நிலவியது. அனைவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க மீரா’விற்க்கு தான் நெஞ்சம் தடதடத்துகொண்டு ஓடியது.
-
அத்யாயம் 17
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/10410321_566844916786951_6860284605564642478_n.jpg?oh=6cc0427164e38de2ac472475cea6c718&oe=5636F5B3&__gda__=1451372215_fcec76becf607db78d414e04a8a18dc3)
அவள் அந்த பெண்ணை பற்றி கேட்டதும் பலத்த அமைதி அங்கே நிலவியது.
மீரா “எ...என்னச்சு?”
“எதாச்சு சொல்லுங்க”
அவள் பதட்டத்துடன் கேட்கவே ஆதி சித்துவின் முகம் பார்க்க அவன் அமைதியாக இருக்க சொன்னான் கண்களால்...!!!
சித்து “மீரா......அவளுக்கு ஒன்னுமில்லை மா”
மீரா “தாங்க் காட் சித்து...அப்போ அவ எங்க? போலிஸ் அவங்களே அவளோட ஸ்டேக்கு அரைன்ச் பண்ணிட்டாங்களா?”
சித்து“இல்ல நான் சொல்லுறேன் ஆனா நீ அமைதியா இருக்கனும்?”
மீரா “ம்ம்....சரி சிக்கிரம் சொல்லு”
சித்து “அந்த பொண்ணு பேரு ரம்யா”
மீரா “ம்ம்....”
“சித்துஅவள கூட்டிட்டு போனது ஃப்ஸ்ட் போலிஸ் ஸடேசன்க்கு தான் அங்க எல்லாத்தையும் சொல்லி கம்பிளைன்ட் பண்ணும்போது தான் அவ..அந்த ரம்யா மயக்கம் போட்டு விழுந்துட்டா”
மீரா “வாட்?”
ஆதி “நீ ஷாக் ஆகாத மீரா”
மீரா “ம்ம்...அவளுக்கு என்னாச்சு?” சித்து“ம்..ஃப்ஸ்ட் எங்களுக்கும் தெரில...அப்புறம் ஆஸ்பெட்டில் கூட்டிட்டு போனதும் தான் தெரிஞ்சிது.......”
மீரா “என்னடா? என்னனு சொல்லு.......”
சித்து“வந்து....எப்படி சொல்லறதுனு தெரில...அது...அந்த அஜய் அந்த பொண்ண...அப்படி...அந்த பொண்ணோட உடலுறுப்புகளையும் விக்கற்த்துக்கு பிளான் போட்டு இருக்கான்”
மீரா “வாட் த ஹெல் என்ன தைரியம் அவனலாம் நடு ரோட் ல விட்டு சாப்பாடே போடாம சாகடிக்கனும்”
ஆதி “மீரா அமைதியா இரு சொல்றேன்’ல ஷ்...”
மீரா “அப்புறம்? அதுக்கு அப்புறம் என்னாச்சு?”
சித்து“ஒன்னும்மில்லை மா அதுக்கான சில பில்ஸ்’லாம் அந்த பொண்ணுக்கு கொடுத்து இருக்கான் அதோட எஃப்க்ட் தான் இது இனி பயபட ஒண்ணும்மில்லைனு சொல்லிட்டாங்க”
மீரா “ஓ...!!!”
ஆதி “ம்ம்...அந்த பொண்ண இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்’ல வெச்சிட்டு டிஸ்சார்ச் பண்ணுறதா சொல்லி இருக்காங்க”
சிறிது அமைதி ஆனவளை சமாளித்து உண்ண வைத்து அவர்களும் உண்டு முடித்ததும் மிதி கதையை கூற ஆரம்பித்தார்கள்...ரம்யா’வை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு வந்தவர்கள் அந்த அஜயை அரஸ்ட் பண்ண உதவி புரிந்து கைதும் பண்ணினர் ரிஷி ஆட்களில் உதவியுடன்...!!!
அவன் வீட்டை முழு சோதனையிடும்பொழுது தான் தெரிந்தது அவன் இதற்க்கு முன்னால் பதின் கணக்கில் பெண்களை இதே மாதிரி செய்ததையும்...கோடிகணக்கான ரூபாய்க்கு போதை பொருள் கடத்தி இருப்பதையும்.
எல்லாவற்றையும் பேசி முடித்தவர்கள் தூங்க அயத்தமாக ரிஷி மட்டும்...!!!
ரிஷி “சரி அப்போ நான் கிளம்புறன்...!!!”
மதி “ஏன்? நீங்களும் இங்கயே இருங்கலாமே?”
ரிஷி “இல்ல மதி...நான் போறன் நீங்க எஞ்சாய் பண்ணுங்க”
ஆதி “கொஞ்சம் இருங்க பாஸ்...ஃபிராங்க்கா சொல்லனும்னா நாங்க எல்லாருமே முதல உங்கள தப்பா தான் நினைச்சோம் ஆனா இப்போ புரிஞ்சிக்கிட்டோம்”
ரிஷி “தாங்க்ஸ் ஆதி”
ஆதி “இனிக்கு நீங்க பண்ணது ரும்ப சரியான விஷயம் தான்...நீங்க இல்லனா இத கண்டுபிடிச்சு இருக்க முடியாது...நிங்க பண்ணுற முறைவெனா தப்பா இருக்கலாம் ஆனா நிங்க பண்ணுறது எல்லாம் ரும்ப நியாயமான விஷயம்”
ரிஷி “ம்ம்...........புரிஞ்சிகிட்டதுக்கு மறுபடியும் தாங்க்ஸ்”
மதி “ம்ம்....இப்படி தாங்க்ஸ் சொல்லியே டைம் வேஸ்ட் பண்றத்துக்கு நீங்க இங்கயே தூங்கலாம் வாங்க வாங்க”
ரிஷி “இல்ல மதி....நான்...சொ”
சித்து“இனிக்குல இருந்து நிங்களும் எங்க காங்’ல ஒருத்துர் சரியா வாங்க...”
ரிஷி “இல்ல சித்து...நான் போகனும் இன்னொரு நாள் பாத்துக்கலாம்”
மதி “அண்ணா.....சொன்னா கேக்க மாட்டிங்களா? இங்கயே இருங்க சொல்லுறோம்’ல?
ரிஷி “என்ன...என்ன சொன்ன? அ..அண்ணா’னா?”
மதி “ஹான் இன்னில இருந்து இந்த அழகான அன்பான மதி என்பவள் ரிஷி யாதவ் என்கின்ற வீரம் மிகுந்த இந்த ஆடவனை அண்ணனாக ஏற்கின்றாள் டொன்டொன்டொய்.........!!!”
இவ்வாறு மதி கூறியதும் அனைவரும் சிரித்துவிட பெண்கள் இருவரும் சேர்ந்து சென்று அந்த பெரிய படுக்கையை எடுத்து வர ஆண்கள் அந்த ஹாலை சுத்தம் செய்து அங்கே அந்த படுக்கையை விரித்து படுத்துகொண்டனர்...!!! மீரா ஒரு ஓரத்திலும் அதற்க்கு அடுத்த ஓரத்தில் ரிஷியும் உறங்கினர்
ரிஷிக்கு இது புதுவிதமான ஒன்று...நண்பர்களுடன் ஒரே அறையில் சாதாரண தரையில் படுத்துகொண்டு அரட்டை அடித்துகொண்டு உறங்குவது இவ்வளவு சந்தோஷத்தை தரும் என அவன் கனவிலும் நினைத்ததில்லை. சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கி விட மீராவும் ரிஷியும் நித்திராதேவியின் துணையில்லாமல் தவித்தனர்...!!!
ரிஷி ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு...மீரா என்ன புரிஞ்சிக்கிட்டாளோ இல்லையோ மத்த எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க அது போதும்’
மீரா ‘எப்படி இந்த யாதவ் எல்லாரையும் அவன் பக்கம் இழுத்துக்குட்டான்?’
ரிஷி ‘எப்பா என்ன ஆட்டம் ஆடிட்டா சாமி ஆட்டம்...சரியான ராங்கி’
மீரா ‘பேசி என்னமா அவன் நினைச்சத சாதிச்சிக்கிறான் சரியான சண்டியன்”
ரிஷி ‘இவள சமாளிக்கற்து எவ்வளவு கஷ்ட்டமா இருக்கு...சரியான ராங்கி’
மீரா ‘இவன் பேச்சுல ஏதோ இருக்கு எல்லாரையும் எப்படி சமாளிக்கிறான்’
ரிஷி ‘இவள வச்சிக்கிட்டு...டேய் ரிஷி உன் பாடு திண்டாட்டம் தான்டா’
மீரா ‘இவன் கூட இருக்கவ ரும்ப பாவம்’
ரிஷி ‘சரியான ராங்கி’
மீரா ‘சரியான சண்டியன்’
ரிஷி ‘ராங்கி’
மீரா ‘சண்டியன்’
இவ்வாறாக அந்த ராங்கியும் சண்டியனும் அவர் அவர் மனதுடம் பேசிகொண்டே உறங்கிவிட்டனர். இந்த ராங்கியும் சண்டியனும் இன்னும் என்ன என்ன செய்ய காத்து இருக்கிறார்களோ பார்ப்போம்
-
அத்யாயம் 18
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11873487_568228679981908_2837856657512519750_n.jpg?oh=4ce4ed78ab414aef0bce79d8ba7e4fa1&oe=5643921D&__gda__=1447877401_9cb35c5b7d03409fe3f330b9d2bef889)
மறுநாள் காலையில் அனைவரும் எழுந்துவிட எப்பொழுதும் போல் நம் சித்து மட்டும் நயன்தாரா ஒரு பக்கமும் தமனா வை ஒரு பக்கமும் நிறித்திவைத்து டுயட் பாடி கொண்டு இருந்தான்.
ஆதி “டேய் எழுந்து தொலை டா”
சித்து “ம்ம்...இரு ஆதி கொஞ்ச நேரம்”
வீரா “அவன் எழுந்துக்க மாட்டான் ஆதி...நீ ஏன் கஷ்ட்ட படுற?”
ஆதி “ஹான்...அப்போ இவன எப்படி தான் எழுப்புறது வீரா?”
வீரா “ம்ம்...டெய்லி மதி தான் எழுப்புவா”
ஆதி “ஓ...ஆனா இந்த மீரா ஒட சேர்ந்து உள்ள போனவள இன்னும் கானுமே”
வீரா “என்னனு சொல்லிட்டு போனாங்க?”
ஆதி “ம்ம்....ரெடி ஆகிட்டு வரோம்னு சொல்லிட்டு போனாங்க இன்னும் ஆள காணும்”
அவன் பாவமாக முகத்தை வைத்துகொண்டு சொல்ல குழம்பி போய் கதவை தட்டினான் வீரா
வீரா “ஹெ கள்ஸ் என்னப்பா பண்ணுறிங்க?”
மீரா “ம்ம்...வரோம் வீரா...கொஞ்சம் வைட் பண்ணுங்க”
வீரா “என்ன மீரா நீங்க போய் ஒரு மணி நேரம் ஆச்சுனு ஆதி சொன்னான் இன்னுமா?”
அவன் வாயை பிளந்துகொண்டு நின்றுவிட்டான்..அவன் நிலையை கண்டு கிட்டே வந்த ஆதியும் ரிஷியும்
ஆதி “ஹெய் வெளில வாங்க அப்படி என்ன பண்ணுறிங்க?”
மீரா “இப்போ என்னடா ஆதி”
வேகமாக கேட்டு கொண்டே வெளியே வந்த மீரா’வை வாயை பிளந்துகொண்டு பார்த்தனர் முவரும்...!!! மீராவை பார்த்த ரிஷி சொக்கி நின்றான் என்றால் அவள் பின்னாடி நின்ற மதியை பார்த்து மயக்கம் போடத குறைதான் நம் ஆதி...!!! ஏனெனில் எப்பொழுதும் ஜின்ஸ் சாட் டாப் குர்த்தி என அணியும் மீரா அன்று வாடாமல்லி கலர் புடவையில் இருக்க தலையில் வைத்து இருந்த மல்லிகையின் மனம் வீடு முழுவதும் பரப்பி கொண்டு அடக்கமாக நிற்க, பின்னாடி நின்றுகொண்டு இருந்த மதியோ அதே வாடாமல்லி கலரில் குர்த்தியும் ஜின்ஸில்லும் போனி டெய்லிலும் அட்டகாசமாக இருந்தாள்.
முதலில் சுதாரித்தது வீரா தான்...!
வீரா “ஹெய் வாட் அ சேன்ஞ் ஒவர் மாமா”
மீரா “ஒய் என்ன கிண்டலா?”
மீரா எகிறிகொண்டு வர
ஆதி“ம்ம்...பின்ன? இப்படி ஓரேடியா மாறினா அப்படி தான் சொல்ல முடியும்”
ஆதி வைத்த கண் வாங்காமல் மதியை பார்த்துகொண்டே கூறயதை கவனித்த மீராவின் கண்களில் விஷமம் இருந்தது...!!! இதுவரை நண்பன் என்ற முறையில் மட்டுமே பார்க்கும் பார்வையில் இன்று வித்யாசம் அதுவும் மதியை பார்த்து மட்டும்...!!! பாவம் இதை கவனித்த மீரா அவளை விழுங்கும் பார்வை பார்த்துகொண்டு இருந்த ரிஷியை கவனிக்க மறந்தால்.
மீரா “அப்படியா ஆதி நாங்க மாறினது சரி உங்கிட்ட ஏதோ மாற்றம் தெரிதே”
ஆதி “ம்ம்...அப்படில்லாம் ஒன்னுமில்லையே”
மீராவின் நக்கலான கேள்வியில் திணறியவன் முகத்தை சுருக்கிகொண்டு சமாளித்து வைத்தான்.
வீரா “சரி சரி...மதிம்மா....கொஞ்சம் வா...அந்த சித்து படுபாவி எழுந்துக்காம உயிர வாங்குறான்..!!”
மீரா “என்ன வீரா சொல்லுற? இன்னும் அவன் எழுந்துக்கலையா?”
ஆதி “இல்ல மீரா...”
மீரா “சரி வாங்க நான் எழுப்புறன் மதி நீ அந்த பாக் எடுத்துட்டு வா..ஆதி நீ அவள்க்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு”
அவர்கள் இருவருக்கும் தனிமை ஏற்படுத்திகொடுத்துவிட்டு இருவரையும் அழைத்துகொண்டு வெளியே வந்தால் இன்னும் அந்த தூங்குமுஞ்சி தூங்கி கொண்டே இருந்தான்.
மீரா “டேய் சித்து எழுந்துடுடா”
சித்து“ம்ம்....போ மதி...கொஞ்ச நேரம் சொல்லுறேன்ல”
மீரா “டேய் நா மீரா... மணி ஒன்பதுடா பக்கி எழுந்துடு டா”
சித்து“ம்ம்....டூ மினிட்ஸ்”
மீரா “இடியட் இது என்ன மாகியா? எழுதுக்கோ”
சித்து“ம்ம்....”
அவன் சினுங்கி கொண்டே மறுபுறம் திரும்பி படுத்துகொள்ள கடுப்பானவள் பக்கத்தில் இருந்த தண்ணிர் பானையிடம் சென்று தண்ணிர் பிடித்தவள் அவன் முகத்திலேயே ஊற்றிவிட்டால்...!!!
சித்து“ஐயோ எரும மாடே எதுக்கு தண்ணி ஊத்தின...ஸ்ஸ்ஸ்....ஜில்லுனு இருக்கே”
வீரா “ஹஹஹஹ”
ரிஷி " ஹெய் மீரா என்ன பண்ணுற”
சித்து“ நல்லா கேளுங்க ரிஷி...டேய் வீரா சிரிக்கவா சிரிக்கிற இரு டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து உன்ன வெச்சிக்கிறேன்.”
அங்கே ஆதியும் மதியும்....மதி எதை பற்றியும் கவலை படமால் அங்காங்கே தூக்கி எறிந்து வைத்து இருந்த மீரா’வின் துணியையும் ஒரு ஓரமாய் போட்டு இருந்த அவளின் துணியை முகம் சுளிக்காமல் எடுத்து மடித்துகொண்டு இருக்க அவர்களின் ஒப்பணை சாமான்களை சேகரித்துகொண்டு இருந்தான் ஆதி...!!!
ஆதி “இந்த மீரா இன்னும் சின்ன புள்ள மாதிரி எப்படி எல்லாத்தையும் போட்டு வெச்சி இருக்கால மதி?”
மதி “ம்ம்...அவ இன்னும் சின்ன குழந்தை தான ஆதி நமக்கு? சில சமயம் பெரிய பெரிய விஷயம்லாம் அசால்ட்டா செஞ்சாலும் சில சமயம் நமக்கே அம்மா மாதிரி தான் அவ...அனாலும் எப்பவும் அவ நம்ம எல்லார்க்கும் குழந்தை தான்”
சின்ன சிரிப்போடு சொல்லி கொண்டு இருந்தவளை இமைக்க மறந்து பார்த்துகொண்டு இருந்தான்...
மதி “என்ன ஆதி? ஏன் அப்படி பாக்குற?”
ஆதி “நீ...இன்னிக்கு ரொம்ப வித்யாசமா அழகா இருக்க மதி”
மதி “ம்ம்...எல்லாம் இந்த மீரா தான் தொல்ல பண்ணி இப்படி போட்டுக்க வெச்சா...அவ புடவை கட்டினா கட்டிக்கற்து தான என்னையும் படுத்தி எடுத்துட்டா”
அவள் அவனின் குரல் மாற்றத்தை புரிந்துகொள்ளாமல் அவள் இஷ்ட்டத்திற்க்கு பேசிகொண்டே போக நொந்துகொண்டான் ஆதி...!!! சிறிது நேரத்தில் வெளியே வர...அதே சமயம் சித்துவும் வெளியே வர ஹாலில்...
வீரா “ஹஹ செமயா எழுப்புன மீரா அவன இனி நானும் இதே டிரை பண்ணுறன்”
மீரா “ஹஹ பின்ன சொல்ல சொல்ல எழுந்துக்காம இருந்தா?”
வீரா “நீ என்ன தான் அடக்க ஒடுக்கமா சேரி கட்டினாலும் உன்னோட இந்த அறந்தவாள் மட்டும் போகவே மாட்டேன்தே”
அவளையும் சேர்த்து வாரிவிட்டு சிரித்தவனை தூரத்த ஆரம்பித்தாள் மீரா...
மீரா “டேய் உன்ன என்ன பண்ணுறேன் பாரு”
சித்து“அப்படி தான் மீரா என் சார்பா ரெண்டு போடு”
வீரா “அடேய் துரோகி சித்து...கோத்துவிடாம இருடா”
சித்து “என்ன எழுப்பினத பாத்து சிரிக்கவா சிரிக்கிர இன்னிக்கி மாட்டினடா”
மதி “ஐயோ மீரா வேனாம் விட்டுடு மா...பாவம்”
மீரா “ நீ சும்மா இரு மதி”
வெவ்வேறு வகையாக அனைவரும் கத்த..வீராவும் மீராவும் ரிஷியை சுற்றி ஒட ஆரம்பித்தனர். அவர்கள் ஓடியது பத்தாது என அவனையும் ஆட்டி வைத்த இருவரையும் கண்டு சிரிப்பதா அழுவதா என முழி பிதிங்கி நின்றான் ரிஷி...!!! ஒரு பக்கம் இதுவென்றால் மிக அருகில் தெரிந்த மீராவின் முகமும் அவளின் மல்லிபூ வாடையும் வேறு அவனை கிறங்கி அடிக்க செய்தது...!!!
ஒரு வழியாக அவர்களின் ஆட்டம் முடிந்து கிளம்ப அயத்தமானார்கள் வீராவும் மதியும் ஒரு வண்டியில் ஏரி கொள்ள ஆதியும் சித்துவும் ஒரு வண்டியில் ஏரி கொள்ள மீரா அவள் வண்டியிடம் செல்ல...அதுவோ பஞ்ச்ர் ஆன டயரை காண்பித்து ஈ என ஈளித்தது.
ஆதி “மீரா என்னாச்சு?”
மீரா “வண்டி பஞ்ச்ர் ஆதி...”
ஆதி “ஓ...”
அனைவரும் முழித்துகொண்டு நிற்க
ரிஷி “வா மீரா என் கார் தான் இருக்கே வண்டி இங்கயே இருக்கட்டும் யாரச்சு ஒருத்துர் என்கூட வாங்க வேனும்னா”
அவர்கள் எங்கே தப்பாக எடுத்துகொள்வார்களோ என பயந்துகொண்டே கேட்டவன் கூடவும் யாரையாவது அழைத்தான் ஆனால் அவர்களோ பரவாயில்லை என மீராவையும் ரிஷியையும் மட்டும் தனியே வர விட்டனர்...
வண்டி கிளம்பிய சிறிது நேரத்திலேயே மீரா பிளேயரில் பாடலை ஒடவிட...!!!
இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்குமர காடு வெடிக்குதடி
அவள் கைகள் தாளமிடுவதை ரசித்துகொண்டே வண்டி ஓட்டிகொண்டு இருந்தான்.
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன் மடிப்பிச்சை கேக்கறேன்
மனச தாடி என் மணிக்குயிலே
அக்கறைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
அவள் உதட்டை சுழித்து பாடலை ரசித்ததை கவனித்தவன் அவள் கைகள் தாளமிடும்போது அவன் மீதும் படும்போது தவித்தான்.
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேட்கல
தவியா... தவிச்சு....
உசிர் தடம் கெட்டு திரியுதடி
தயிலாங்குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி...
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்துவச்சு மன்னிச்சுடும்மா
அவன்மீது கை பட்டதும்.. நகர்ந்து அமர்ந்தவளை ஓர கண்ணால் பார்த்தான்...அவளின் சிரிப்பில் தன்னை இழந்தவன் வண்டியை ஓரமாக நிறுத்தியவன் அவள் கைகளை பற்ற அவள் திகைத்து நிமிர்ந்தால்.
ரிஷி “பிளிஸ் மீரா....என்னால முடில...”
மீரா “ஹான்...”
ரிஷி “இன்னிக்கு இந்த சேரி’ல ரும்ப அழகா இருக்க...”
மீரா “ய..யாதவ்...என்ன இது...விடு...”
அவள் இடுப்பை வளைத்து பிடித்தவனை தடுக்க முடியாமல் திணறி தவித்து பதட்டத்துடன் விட சொன்னாள். அதன் பின்னே சுய நினைவு வந்தவன் போல் தலையை உளுக்கி கொண்டவன்...
ரிஷி “ஐயம் சாரி மீரா...ஏதோ என்னக்கே புரியாம...”
அதற்க்குமேல் என்ன சொல்வது என தெரியாமல் வண்டியை கிளப்பினான்
-
அத்யாயம் 19
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/1970588_568594263278683_685136928423251424_n.jpg?oh=64ba5e7ce0569393f6919f3668b98a16&oe=567C8194)
ஏதுவும் அதற்க்கு மேல் கூற இயலாமல் வண்டியை கிளப்பியவனை அடிகடி திரும்பி திரும்பி பார்த்துகொண்டு வந்தாள் மீரா...!!! பிளேயர் வேறு நிலைமை புரியாமல் சதி செய்தது.
“தோழியா என் காதலியா யாரடி பெண்ணே”
“பூக்களே சற்று ஓய்வெடுங்கள்”
“காதல் கண்கட்டுதே”
“அன்பே அன்பே கொள்ளாதே..”
“என் காதலே என் காதலே என்னை என்ன செய்யபோகிறாய்”
இவ்வாறாக அவன் எவ்வளவு தான் பாட்டை மாற்றி வைத்தாலும் ஒரே காதல் ரசம் அதில் நிரம்பி வழிய ஒரு கட்டத்திற்க்குமேல் பொறுக்காமல் அதன் தலையில் தட்டி அதன் கதறலை நிருத்தி இருந்தான் கோபத்தோடு...!!!
மீரா “எ எதுக்கு இப்போ அதுமேல கோவத்த காட்டற?”
“...........”
“உன்மேல தப்பு வைச்சிட்டு கோவம் வந்து என்ன பிரியோஜனம்”
“..........”
அதற்க்குள் அவர்கள் வீடு வந்து சேர்ந்து இருக்க அவன் அவள் இருங்குவதற்க்காக காத்து இருந்தான்
மீரா “இனி இப்படி பிஹேவ் பண்ணாத..எனக்கு பிடிக்கல... நீ என்ன மனசுல வெச்சிட்டு இருக்கனு புரில ஆனா எதுவா இருந்தாலும் அழிச்சிடு...அதான் நல்லது இல்ல என்னோட முழு கோபத்த நீ தாங்க மாட்ட”
கூறிவிட்டு விடுவிடுவென வீட்டினுள்ளே நுழைந்துவிட்டால்...அவளின் மெரட்டலில் சிரிப்பு வந்தாலும் அவள் என்ன நினைசிட்டு என்று வேறு எதையோ குறிப்பிட்டதை உணர்ந்தவன் முகம் கருக்க சீட்டிலேயே சாய்ந்துவிட்டான்.
மதி “என்ன அண்ணா இங்கயே இருக்கிங்க? மீரா எதோ?”
ரிஷி “ம்ம்...நத்திங்
மதி வந்து எழுப்புவரை அங்கே கண் முடி சாய்ந்து இருந்தவன் அவள் முதல் கேள்விக்கு பதில் கூறி இரண்டாம் கேள்வியை கவனியாததுபோல் காரை லாக் செய்வதில் இடுப்பட்டான்.
மதி “சரி உள்ள வாங்க எல்லாரும் உள்ள போயாச்சு..”
ரிஷி “ம்ம்...”
உள்ளே அனைவரது பெற்றோர்களும் இருந்தனர்...அதை கண்டு சிறிது தயங்கினாலும் நேர்கொண்ட பார்வையுடன் உள்ளே நழைந்த ரிஷியை முதல் பார்வையிலேயே அனைவருக்கும் பிடித்துவிட்டது. உள்ளே நுழைந்தவனை அமர வைத்து அவனுக்கு மேங்கோ ஜுஸ் கொண்டு வந்து உபசரித்தார் பரணி.
சேகர் “உங்கள பத்தி கேள்வி பட்டதும் முதல தள்ளி இருக்கனும்னு தான் சொன்னோம் ஆனா உங்களோட நேர்மை, பயமில்லாத அநியாயத்த தட்டி கேட்கற்து இதுலாம் ஆதி சொல்லி தான் எங்களுக்கு தெரிஞ்சிது அதுவும் இல்லமா எங்க குழந்தைகளோட பாஸ் வேற...எப்படி இருப்பிங்களோனு கவலையா தான் இருந்துச்சு ஆனா எந்த ஒரு பந்தாவும் இல்லாம நீங்க பழகற்து நல்ல இருக்கு தம்பி...ரும்ப பெரிய உதவி செஞ்சி இருகிங்க ரும்ப நன்றி”
சேகர் அனைவரின் சார்பாகவும் பேசி தான் வீராவின் தந்தையென நிருப்பித்தார். அவர் பேச பேச முகத்தில் ஒரு சின்ன சிரிப்போடு கேட்டுகொண்டு இருந்தாலும் அங்கே அழகம்மையின் மடியில் படுத்து கொஞ்சி கொண்டு இருந்த மீராவின்மேல் அடிகடி பார்வையை படரவிட்டுகொண்டு இருந்தவன் அவர் நன்றி கூறியது....
ரிஷி “ச்ச் இது என் கடமை ஸ்ர்”
“என்ன?”
“ம்ம்....மீராவை காபதற்து என் கடமை அவள்க்கு ஒரு பிரச்சனைனா நான் அங்க இருப்பேன்”
அவன் இவ்வாறு கூறியதும் அனைவரும் குழம்ப மீரா வெடுக்கென தலை நிமிர்த்தி பார்க்க...
ரிஷி “ஒரு பாஸா அவள பாதுகாகற்து என் கடமை தான?”
மீராவின் முகத்தில் தோன்றிய எரிச்சலை ரசித்துகொண்டே கூறியவன் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் என்ன வர்புறுத்தியும் மதிய உணவிற்க்கு தங்காமல் கிளம்பிவிட்டான்.
பின் அனைவரும் அன்று அலுவலகத்திற்க்கு மட்டம் போட்டுவிட்டு அவரவர் வீடு சென்றனர் ஓய்வெடுக்க...!!! சித்து முதல் ஆளாய் ஒடிவிட அவனை கண்டு சிரித்துகொண்டே தன் அறைக்கு வந்தவள் முகம் கழுவி சாதாரண உடைக்கு மாறி கட்டிலில் சரிந்தாள்.
அவள் கண் முன்னே அவள் இடையை பற்றி அருகிலிழுத்த யாதவே வந்து போனான்.
மீரா ‘என்ன நினைச்சிட்டு இப்படி பண்ணினான்...’
‘எப்பவும் எங்கிட இப்படி நடந்துகற்தே இவன் வேலையா போச்சு’
‘இனிமே அவன் அப்படி பண்ணினா இருக்கு’
‘ச்ச்...ஏன் அத பத்தியே மண்டைல ஓடிட்டு இருக்கு’
‘ம்ம்....யாரையும் நெருங்க வடதவ...அப்படி யாராச்சு டிரெய் பண்ணினாகூட உயிர் தவிர வேற எதுமில்லாத மாதிரி ஆக்குறவ ஏன் அவன் வந்தா மட்டும் இப்படி தடுமாறுது இந்த மனசு?’
‘ம்ம்...அந்த இடியட்’அ கூட ஈசியா தூக்கி எரிஞ்சனே இந்த யாதவ் மட்டும் ஏன்’
சிறிது நேரம் பழயதை நினைத்து கண்களில் இரத்தை சுரந்தவள் இனி அவன் இருக்கும் பக்கம் கூட போக கூடாது என தவறான முடிவுடன் கண் முடினாள்.
வீடு போய் சேர்ந்த ரிஷியும் எங்கேயும் போக பிடிக்காமல் நேற்று காலை சென்றவன் இன்று காலை வரும் மர்மத்தை அறிய துடித்துகொண்டு இருந்த மணியையும் லட்சியம் செய்யாமல் யாரையும் தொந்தரவு பண்ண வேனாம் என கூறி அவன் அறையில் சென்று அடைத்துகொண்டான்.
ரிஷி ‘யாரையும் என் வண்டியில ஏத்தாதவன் எப்படி அவள ஏத்தினேன்’
‘அப்படி என்ன உரிமை அவகிட்ட...’
‘இப்படியா நிலையிழந்து போறது?’
‘ச்ச்...எவ்வளவு கேவலமா நினைச்சிட்டா’
‘ஆனா எவ்வளவோ பொண்ணுகளோட பழகி இருக்கேன் அவங்களே மேல வந்து விழுந்தாலும் தள்ளி விட்டு வரவன் எப்படி இவள பாத்தா மட்டும் மதி மயங்கி போறன்’
‘நம்ம இருக்க நிலைமைக்கு இதலாம் தேவையா?’
‘இனி அந்த ராங்கி இருக்க திசைக்கே நம்ம போக கூடாதுடா சாமி’
விதி வலியது! அன்று மாலையே ஐவர் கூட்டம் ரம்யாவை காண மருத்துவமணை செல்ல அங்கே அதே நோக்கத்தோடு வந்த ரிஷி அவர்களை கண்டு தயங்கினான் என்றாள் மீரா தலையில் அடித்துகொள்ளாத குறை தான்.
நன்றாக தூங்கி எழுந்த மீரா மதிய உணவு உண்டுகொண்டு இருந்த வேளையில் ஆதி வந்து மாலை செல்ல போகும் விஷயத்தை கூறிவிட்டு செல்ல மண்டை ஆட்டியவள் உண்டுவிட்டு சிறிது நேரம் கார்டூனை போட்டுகொண்டு உட்கார்ந்துவிட்டு மூன்று மணி அளவில் காலையில் கட்டி அதே சேலையை எடுத்து அணிந்துகொண்டால் ஏனோ அது அவள் உடலை தழுவும்போது காலையில் அவளை அனைத்து காதில் இந்த சேரி ரும்ப அழகா இருக்கு உனக்கு என்று கூறிய யாதவே மனதில் நின்றான்.
அனைவரும் கிளம்பி மருத்துவமனை செல்ல அங்கே போலிஸ் உடன் பேசிகொண்டு இருந்த யாதவ் கண்ணில் பட்டதும் அனைவரின் முகத்தில் ஆச்சர்யம் என்றால் மீராவின் முகத்தில் கடுகும் எள்ளும் வெடித்துகொண்டு இருந்தது. அதை கவனித்த ரிஷி என்ன சொல்வது என தெரியமல் இன்ஸ்பெக்டருடன் தன் பேச்சை தொடர்ந்தான்.
ஆதி.“என்னாச்சு ரிஷி? நிங்க இங்க?”
ரிஷி “அது....”
சித்து“இன்ஸ்பெக்டர் எனி இப்பார்ட்டன்ட் நியுஸ்”
இன்ஸ்பெக்டர் “வந்து மிஸ்டர்.சித்தார்த்...”
ரிஷி “ம்ம்...நான் சொல்லிகிறேன் ஸ்ர்....எக்ஸ்குயுஸ்மீ”
என்றுவிட்டு அவரை கீழே சென்று வழியனப்ப சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்திலேயே ரம்யாகாக வாங்கி வந்த பழங்களை காரிலேயே விட்டு வந்ததை நினைத்து தலையில் அடித்துகொண்டு அதை எடுக்க கீழே சென்றால் மீரா. முதல் தளத்தில் தான் இருந்தால் என்பதால் லிவ்டை தவிர்த்து படியிலேயே இறங்கிவந்தவள் கவனியாமல் மேலே வந்துகொண்டு இருந்த ரிஷியின்மீதே சரிந்தாள்.
திடிர் என்று தன்மேல் பூசென்டு போல் விழுந்த மீராவை சற்று தள்ளாடி பின் அவள் இடையை இறுக்கி சமாளித்து நின்றான்...!! இருவர் கண்களும் கலந்துவிட்ட நிலையில் சுற்றம் மறந்து நின்றுகொண்டு இருந்தனர்.
-
அத்யாயம் 20
(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xaf1/v/t1.0-9/11855692_568883019916474_663073745369371895_n.jpg?oh=e59cacfe2f9897f69f64303e8874d986&oe=563FF754&__gda__=1450677546_e56d0ab49d3c9950aed85909eccb7fad)
அவர்கள் படியில் ஒருவர் பிடியில் மற்றொருவர் நின்றுகொண்டு இருக்க...அந்த பக்கமாக ஸ்டெச்ச்ரை தூக்கிகொண்டு வந்த இருவர் வழிவிட சொல்லி கேட்க ஸ்டெச்சரில் படுத்து இருந்தவனோ
யாரோ “ம்ம்....இப்படில்லாம் லவ் பண்ண பார்க் பீச் போறத விட்டுட்டு ஹாஸ்பெட்டிலையும் விட மாட்டுறாங்களே கலி காலம்”
என புலம்பிகொண்டே அடுத்து தனக்கு நடக்க போகிற சிகிச்சையை பற்றி கவலையில் சென்றுவிட...பதறி விலகினர் இருவரும்.
மீரா “ஏய் எதுக்கு என்ன புடிச்ச அறிவு இல்ல உனக்கு”
ரிஷி “ம்ம்........”
அவள் அவ்வாறு கோவமாக கேட்டதும் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன் கிண்டலாக கேட்க அவள் திருதிரு என விழித்துகொண்டு கீழே ஓடி விட்டாள். அதை பார்த்தும் சிரிப்புடன் பார்த்துகொண்டு இருந்தவன் அவள் காலையில் கூறியது நியாபகம் வர முகம் இருக்கத்துடன் மேலே சென்றான்.
ஆதி “வாங்க ரிஷி ஏன் இன்ஸ்பெக்டர் லாம் வந்து இருந்தாங்க? என்னாச்சு?”
ரிஷி “ஒன்னுமில்லை ஆதி...வந்து....”
ஆதி “ம்ம்... என்னனு சொல்லுங்க ரிஷி”
ரிஷி “அந்த அஜய் வெரும் அம்பு தான் இதுக்கு பின்னாடி ஒரு காங்க்’எ இருக்குனு சொல்லிட்டு போறாங்க”
ஆதி “ஓ”
ரிஷி “ம்ம்....அந்த காங்க்-க்கு இந்த பொண்ணு மேலையும் கண்ணு இருக்காம் இவங்கல கொல்ல பாக்குறாங்க...அதுக்காக ரெண்டு போலிஸ்’அ பாதுக்காப்புக்கு இருக்க சொல்லிட்டு போய் இருக்காங்க”
மீரா “ஆனா அவங்க இருந்தா மட்டும் இவளுக்கு ஏதும் ஆகாதா?”
அதற்க்குள் வந்து விட்ட மீரா யோசனையுடன் கேட்க மெச்சும் பார்வை ஒன்றை அவள் மீது விசியவன் அமைதியாக திரும்பி மற்றவர்களை பார்க்க அவர்கள் முகத்திலும் அதே குழப்பம்.
ரிஷி “ம்ம்....உண்மைதான் அதுக்காக தான் என்னோட ரெண்டு ஆள்’அ உள்ளயே பாதுக்காப்புக்கு வெச்சி இருக்கேன்”
மீரா “என்னது? அவ ஓரு பொண்ணு என்ன இப்படில்லாம்”
ரிஷி “ஹெ...வைட் மீரு...ரா......உள்ள வாங்க பாக்கலாம்”
அவன் சொல்லிவிட்டு உள்ளே செல்ல அனைவரும் திருதிருவென விழித்துகொண்டே உள்ளே சென்றனர். அங்கே இருந்த இருவரை பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் திகைத்தனர்.
ரிஷி “இவங்க பேர் சிந்தாமணி இவங்க தனம்...”
தனம் “வணக்கமுங்க”
அவர்கள் இருவரும் திருநங்கைகள்....என்ன கூறுவது என தெரியாமல் கடமைக்கு சிரித்து வைக்க அதை கண்ட ரிஷியின் முகம் மாறியது
ரிஷி “என்ன எல்லாம் திகைச்சி போய் இருக்கிங்க?”
வீரா “ம்ம்....ஒன்னுமில்லை”
ரிஷி “இவங்க பிறக்கும்போதே இப்படி தான்...இவங்க வீட்டுல இருந்து தொரத்தி விட்டுடாங்க....தப்பான இடத்துல மாட்டினவங்கள ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் காப்பாதினோம்....தற்காப்பு கலை கத்துக்குட்டு எங்களுக்கு உதவிட்டு இருக்காங்க”
மதி “யு ஆர் ரியலி கிரேட் அண்ணா.... நாங்கலாம் ஜஸ்ட்....நீங்க எவ்வள்வு பேர்க்கு உதவுரிங்க?”
ஆதி “ஆமா ரிஷி....புரொவுடு ஒஃப் யு”
ரிஷி. “ஐயோ போதும்...விடுங்க நான் எதுமே பண்ணல அவங்களும் நம்மல போல மனிசங்க தான்....ஆனா அத யாரும் சரியா புரிஞ்சிகற்தில்ல...”
சிந்தாமணி “எங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே தம்பி தான்...இவர் எப்பவும் நல்ல இருக்கனும்”
பின் சிறிது நேரம் பேசிவிட்டு ரிஷி கிளம்பிவிட மீரா மற்றும் அவள் நண்பர்கள் அந்த பெண்ணை விழிக்கும் வரை காத்து இருந்து பார்த்துவிட்டு சென்றனர்...ஆனால் அந்த பெண்ணோ யாரையும் அருகில் வர விடமால் கத்தி கூச்சலிட என்ன செய்வது என தெரியாமல் நின்றவர்கள் அந்த பெண் மீராவிடம் மட்டும் ஒன்றிகொள்வதை கண்டு ஆச்சர்யம் அடைய அங்கே வந்த மருத்துவர். அவளை காப்பாற்றிய காரணத்தினால் இருக்கலாம் கொஞ்சம் கொஞ்சமாக தான் சரி செய்ய வேண்டுமென கூறிவிட்டு சென்றார்.
அனைவரும் கிளம்பி வீடு போய் சேர மீராவிற்க்கு தான் மனம் குழப்பதிலேயே இருந்தது. ஆதி மதியின் புது தோற்றத்தில் சிக்கி தவிக்க ஆரம்பித்தான். மதியோ அதை பற்றி சிறிதும் அறியாமல் இருக்க...ஆதி அவளுடன் டுயட் பாட ஆரம்பித்தான்.
மறுநாள் காலை மீரா எழுத்து கிளம்பி ஆதியிடம் செல்ல அவனோ என்றுமில்லா திருநாளை மிகவும் ஸ்மார்டாக டிரஸ் பண்ணிகொண்டு வந்தான்.
மீரா “என்னடா? ரும்ப ஹான்ட்சம் ஆ இருக்க? ரும்ப நாள் அப்புறம் இன்னிக்கி தான் குளிச்சியா என்ன?”
ஆதி “ஒய் என்ன கிண்டலா”
மீரா “ச்ச்...ச்ச்....நக்கலு”
ஆதி “அடிங்க்...”
ஆதிம்மா “டேய் பசங்களா போதும் அரட்டை அடிச்சது காலை’லயே ஆரம்பிச்சிட்டிங்களா?”
ஆதி “இல்ல அம்மா இவ தான்”
ஆதிம்மா “போதும் டா சின்ன பையன் மாதிரி இன்னுமும் அம்மா முந்தானைய புடிச்சிட்டு உனக்கே ஒரு கல்யாணம் பண்ணுற வயசாச்சு”
ஆதி “ஐயோ அம்மா...ஒரே ஒரு கல்யாண்ம் தானா?”
மீரா “டேய் உன் முஞ்சிக்கு ஒன்னு கிடைகற்தே பெரிசு”
ஆதிம்மா “விடு மீரா....வா உனக்கு புடிச்ச இடியாப்பம் செஞ்சி இருக்கேன் சாப்புடுவ”
ஆதி “ம்ம்....இந்த வீட்டு புள்ள நானா இவளா எப்பாரு இவளுக்கு புடிச்சதே செய்யுங்க...சரியான சாப்பாடு ராமி”
மீரா “டேய் போடா நீ என்னமோ சாப்பிடாதயே உயிர் வாழுற மாதிரி பில்டப் தர...அப்படி ஒன்னும் நீ சாப்பிட வேனாம் நானே சாப்பிட்டுகுறேன்.”
ஆதி “அடியேய் நீ செஞ்சாலும் செய்யுவ...எனக்கு பசிக்கிது கொஞ்சம் கொடுடி...”
அவள் பிளேட்டையே பிடிங்கி இவன் சாப்பிட ஆரம்பிக்க அதில் உப்பை கொட்டி அவன் சாப்பிடுவதை கெடுத்துவிட்டு இவள் ரசித்து உண்ண ஆரம்பித்தால்...இவ்வாறாக எப்பொழுதும் போல் குறும்புடன் அவர்கள் கிளம்ப என்றுமில்லா வித்யாசமாய் ஆதி....
ஆதி “வாயேன் மீரா...சித்து வீட்டுக்கு போய்ட்டு போலாம்?”
மீரா “ஏன்? என்ன திடிர்ன்னு?”
ஆதி “சும்மா தான்”
சரியென ஒத்துகொண்டு அவளும் அவனுடன் செல்ல அங்கே மதி சித்துவின் தலைமுடியை இழுத்து அவனை எழுப்ப படாதுபாடு பட்டுகொண்டு இருக்க....விஷயம் புரிந்த மீரா நமுட்டுசிரிப்புடன் ஆதியை பார்க்க அவனோ முப்பதி இரண்டு பற்களையும் காண்பித்து இளித்துவிட்டு மதியை சைட் அடிப்பதை தொடர்ந்தான்.
-
அத்யாயம் 21
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11896195_571645786306864_5523334785048975224_n.jpg?oh=12a13cb25f257573e9992ba7d7b4b508&oe=563F0462)
மீரா.“என்ன ஆச்சு மதி இன்னிக்கும் ஸர் சிக்கிரம்மா எழுந்துக்களையா?”
மதி “ஹாய் மீரா ஆமா டி எழுந்துக்க மாட்ரான்”
மீரா “சரி நீ குட் பொண்ணா எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்து வருவியாம் நான் இவன எழுப்பிக்கிறேன்.”
மதி “ஹான்...சரி மீரா”
மீரா “டேய் ஆதி நீ போய் ஸோட்ர் ரூம் ல பிச்சி இருக்கும் எடுத்து வாடா”
கிட்சனை தாண்டி தான் ஸோட்ர் ரூம் போக வேண்டும் என தெரிந்தே அனப்பி வைத்தாள்
வீரா “என்ன மீரா அதிசயமா இங்க வந்துருக்கிங்க”
மீரா “ஏன் நாங்கலாம் வர கூடாதோ?”
அவள் ஆதியை மாட்டி விட மனமில்லாமல் வம்பு இழுத்துகொண்டே சித்துவை எழுப்பி விட அவன் திருதிரு என முழித்துவிட்டு பின் உர்ர் என்ற முகத்துடன் பாத்ரூமிற்க்குள் நுழைத்தான்.
வீரா “ச்ச்ச் அப்படில்லாம் இல்ல மீரா காலைல நீங்க ரொம்ப பிசியா இருப்பிங்களே அதான் கேட்டன்”
மீரா “சும்மா டா... இனிக்கு தான் கொஞ்சம் ஃபிரியா இருந்தோம் அதான்...10 போல ஆபிஸ் போனா போதும் டா”
வீரா “ஓ அப்படியா சரி சரி”
அங்கு மதியின் பின்னாலையே பூனைக்குட்டி போல் சென்ற ஆதி அவளுக்கு உதவுகின்றேன் பேர்வழியென்று அவளின் அழகில் மூழ்கியவனாய் அவளை சைட் அடித்துகொண்டு இருந்தான். இதை எதையும் அறியாத நம் மதி அவன் நெளிவதை பார்த்து
மதி “என்னாச்சு ஆதி? புழுக்கமா இருக்கா? நீ போய் ஹால்’ல அவங்களோடு போய் உட்கார்...நா காபி போட்டுட்டு பிஸ்கட் எடுத்துட்டு வரேன்”
ஆதி “அதல்லாமில்லை அம் ஆல்ரைட் நான் போய் பிச்சி..ச்ச்...பிஸ்கடை எடுத்துட்டு வரேன்”
அவள் அதற்க்கு மெல்லிய சிரிப்பை பரிசளித்தவள் டிகாஸனை பாலில் ஊற்ற ஆதியோ என் மனசில் இருக்குற புழுக்கத்த பத்தி தெரியாம என்ன இப்படி இம்சை பண்ணுறாலே என புலம்பி கொண்டே பிஸ்கடை எடுத்து வந்தான்.
மதி “அதுக்குள வந்துட்டியா?”
ஆதி “ஏன் ஸ்டோர் ரூம் என்ன 10கிலோமீட்டர் தள்ளியா இருக்கு?”
மதி “இல்ல...மீரா சொல்லிருக்க உங்கிட்ட ஒரு வேலை சொன்ன அத முடிக்கர்த்துகுள்ள பொழுதே விடிஞ்சிடும்’னு”
ஆதி “எர்ர்ர்...இந்த மீராக்கு என்ன டேமேஜ் பண்ணுறதே வேலையா போச்சு”
மதி “ஹஹஹ விடுடா...”
ஆதி.“ம்ம்...என்ன திரும்பியும் சாரிக்கே மாறிட்ட?”
மதி “ஐயோ அந்த ஜீன்ஸ் எனக்கு எனமோ மாதிரி இருக்கு ஆதி”
ஆதி “ஓ சரி தான்”
மதி “ஏன்? எனக்கு சாரி நல்லா இல்லையா?”
ஆதி “ஒரு உண்மைய சொல்லவா? உனக்கு சாரி தான் ரும்ப ரும்ப நல்ல இருக்கு...மார்டன் டிரஸ்’அ விட”
என்று சொல்லிகொண்டே அவளின் கன்னத்தில் ஒரு விரலால் கோடுழுத்தான். அதனின் மென்மையில் தவித்தவன் எதுவும் கூறாமல் டிரேயை எடுத்துகொண்டு வேகமாக வெளியேறினான். அவன் சைகையில் விக்கித்து நின்றவள் தனக்குள் ஏற்படும் மாற்றத்தின் காரணம் புரியாமல் கன்னத்தின் சிவப்பை மறைத்துகொண்டு ஆதி விட்டு சென்ற பிஸ்கட்டுகளை எடுத்துகொண்டு வெளியே வந்தாள். அங்கு சித்துவும் வந்துவிட சிரித்து பேசிகொண்டே நேரம் கடந்த்து.
ஆதி “எரும...வரும்போது தான அத்தனி இடியாப்பதை முழுகின? இங்க வந்தும் ஒரு பாக்கட் பிஸ்கடையும் காலி பண்ணுற?”
மதி “போட உனக்கு பொறாமை”
ஆதி “ஐயோ உனோட இந்த புட் டாங்க்’அ பாத்து எனக்கு பொறாமை வேறையா? என்ன கொடுமை சித்து இது?”
ஆதி பிரபு பானியில் கூற அங்கே சிரிப்பலை பரவியது...அப்போது
ஆதி “ஆமா வந்தும் கேக்கனும்னு நினைசன் சித்து அப்பா அம்மா எதோடா?”
சித்து “ரம்யா இருக்க நிலைமைய பத்தி எந்த பிளாக் கேட்’ஓ போட்டு கொண்டுத்துடுச்சு மீரா”
சித்து வீராவை பார்த்துகொண்டே சொல்ல..அவன் திருதிருவென முழித்து மாட்டிகொண்டான்.
வீரா “இல்ல...அப்பா அம்மா கிட்ட எதுக்கு மறைக்கனும்னு தான் சொன்னேன்”
மீரா “அதுக்கு இல்ல வீரா அந்த பொண்ணே எப்படி இருக்கா பாத்திங்கல? இப்போ இவங்களாம் அவள பாக்கனும்னு சொல்லுவாங்க என்ன பண்ணுவ?”
மீரா அம்மா “கரெக்ட்...நாங்க அத தான் சொல்லாம்னு நினைச்சி வந்தோம்”
என கூறி கொண்டே உள்ளே நுழைந்த தத்தம் பெற்றோரை பார்த்தவர்கள் ஒரே நேரத்தில் வீராவை முறைத்தனர். அதை கண்ட அவன் அமைதியாக சென்று மீராவின் அன்னையின் பின்னால் ஒளிந்துகொண்டான்.
மீரா “ஆது என்ன எதாச்சு தப்பு பண்ணா எங்க அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிற?”
வீரா “ஆது...எல்லாரையும் சமாளிக்கலாம் உன்ன...ம்ம் என்னால முடியாது அதான் இவங்க உன்ன சமாளிப்பாங்க”
மீரா “உன்ன....”
மீரா அம்மா “இப்போ எதுக்குடி அவன அடிக்க வர? எங்க கிட்ட எதுக்கு மறைக்கறிங்க?”
மீரா “அது இல்லமா இப்போ அந்த பொண்ணு யாரையும் பாக்குற நிலைமைல இல்ல...அதான்”
என அவள் கூறி கொண்டு இருக்கும்போதே அங்கு ரிஷி புயல் போல் உள்ளே நுழைந்தான்...அவன் முகம் இருக்கிபோய் இருப்பதை பார்த்து அனைவரும் கலவரமாக...அவன் சொன்ன வாக்கியத்தில் அனைவரும் ஒரு நிமிடம் என்ன செய்வது என தெரியாமல் கலங்கி நின்றன...!!!
-
அத்யாயம் 22
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/11960023_572321852905924_6204555358409921114_n.jpg?oh=afa43d0f9ac89125e9b6d87bf6e91930&oe=567186AC&__gda__=1449647534_a981488917c2545fccdc8b81460fc792)
உள்ளே நுழைந்தவனை அனைவரும் கலகத்துடன் நோக்க அவனோ சில நேரம் அனைவர் முகத்திலும் இருக்கும் உணர்ச்சிகளை கவனித்தவன் மெதுவாக மிக மெதுவாக
ரிஷி “ரம்யா பைத்தியமில்லை...தெளிஞ்சிட்டா”
கூறிவிட்டு மீராவை ஆழ்ந்து பார்த்தவன் நிதானமாக சென்று ஜக்கில் இருந்து தண்ணிரை எடுத்து பருகினான். பெரியவர்கள் அனைவரும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள சிரியவர்களோ அவன் கூறியதை புரிந்துகொள்ளவே அவர்களுக்கு சில நேரம் பிடித்தது.
மீரா “ஹெ என்ன சொல்லுற நீ”
ரிஷி “ஆமாம் மீரு..ரா உண்மை தான்”
மீரா “அப்போ எப்படி? என்னாச்சு?”
சித்து“மீரா ஜஸ்ட் ரிலாக்ஸ்”
மீரா “என்னனு சீக்கிரம் சொல்லுங்க ரிஷி”
ரிஷி “அவங்க மனநிலை லாம் பாதிக்க படல அந்த அஜய் தான் அவங்களுக்கு சாக்க் டிரிட்மென்ட் கொடுத்து அவங்கள...”
அவன் சொல்லிகொண்டே போனவன் நிறுத்திவிட்டு மீராவின் முகம் பார்க்க அவள் முகம் கோவத்தில் சிவந்து இருப்பதை பார்த்தவன் மதிக்கு கண் ஜாடை காட்ட அவள் மீராவின் அருகில் சென்று அவள் தோளை பற்ற மீராவின் கண்களில் இருந்த தீயின் ஜுவாளையை கண்டு பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்தவள் ஆதியின் தோளில் சாய்ந்து நின்றுகொண்டாள்.
மீரா “நான் அந்த பொண்ண பாக்கனும்...இப்போவே”
ஆதி “ம்ம்....இப்போ நீ ரொம்ப டென்சன்’அ இருக்க மீரா இவனிங் போலாம்”
மீரா “நான் இப்போவே பாக்கனும் ஆதி பிளிஸ்”
“பரவால நாம தான் கூட இருக்கோமே பாக்கலாம் ஆதி”
வீரா “சரி அப்போ கிளம்பலாம்”
மீரா “இல்ல நானும் ரிஷியும் போதும் நிங்களாம் அப்புறம் வாங்க”
மதி “ஆங்...இல்ல மீரா நீ மட்டும் எப்படி”
மீரா “எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் மதி சோ ஹொப் யுவில் அண்டர்ஸ்டான்ட்”
மீரா ஆப்பா “பத்திரம்டா மீரா மா”
மீரா “சரிப்பா கண்டிப்பா”
இதை அனைத்தையும் ரிஷி அமைதியாக பார்த்துகொண்டு இருந்தான் அவனால் மீராவின் மனதில் என்ன இருகின்றது என கண்டு பிடிக்க முடியவில்லை. இருவரும் கிளம்பிவிட வீரா ரிஷிக்கு மீராவை பத்திரமாக பார்த்துகொள்ளும் படி ஒரு குறுஞ்செய்தி அனப்பினான்.
மருத்துவமனை செல்லும் வரை காரில் ஒரு விதமான அமைதியே நிலவியது. மீரா அந்த அஜயின் மேல் உள்ள கோபத்தில் இருக்க ரிஷி மீராவின் எண்ணவோட்டங்களை தெரிந்துகொள்ள முயற்சித்துகொண்டு இருந்தான்.
மருத்துவமனை வந்ததும் மீரா எதுவும் பேசாது ரிஷியை பின் தொடர்ந்து ரம்யா இருக்கும் அறைக்குள் நுழைந்தனர். அங்கே கண்ட ரம்யாவை பார்த்து குழைம்பி போய் ரிஷியை பார்த்தாள்.
ரிஷி “என்ன?”
மீரா “இல்ல...எதோ சேஞ்சஸ் அவகிட்ட...அதான்”
ரிஷி “ம்ம்...யு ஆர் கரக்ட்...அவளுக்கு சில விஷய்ம்லாம் நியாபகமில்லை..”
மீரா “யு மீன்?”
ரிஷி “அவள கடத்திட்டு போனது ரெண்டு நாள் அவள ரூம் உள்ளயே அடைச்சி வைச்சது மட்டும் தான் தெரியும்...அவளுக்கு நடந்த கொடுமைலாம் தெரியாது...”
மீரா “தாங்க் காட்”
ரிஷி “நொ...இது அவளுக்கு யாராச்சு சொல்லி தெரிய வந்தலோ இல்ல...அந்த நியாபகங்கள் நினைவுக்கு வந்தலோ இவ சுத்தமா நினைவிழந்துடுவா இல்ல கோமா ஸ்டேஜ்க்கு போக கூட வாய்ப்பிருக்குனு டாக்டர் சொல்லிட்டு போனாங்க”
ரிஷி சொன்னதை கேட்டு அவள் சிலையென நின்றுவிட உள்ளே இருந்து ரம்யா தங்களை கவனித்துகொண்டு இருப்பதை உணர்ந்தவன் மீராவிடம் தட்டி உள்ளே அழைத்து சென்றான்.
ரிஷி “ஹாய் ரம்யா”
ரம்யா “ஹெலோ சார்”
ரிஷி “ஹவ் ஆர் யு நவ்?”
ரம்யா “அம் பிலிங் குட்...இவங்க”
ரிஷி “ம்ம்...இவங்க உன் லைஃப்’அ காப்பாதி கொடுத்தவங்க”
அவன் புன்னகையோடு சொல்ல அவள் தாவி வந்து மீராவை அனைத்துகொண்டாள்
ரம்யா “ரும்ப ரும்ப தாங்க்ஸ்”
மீரா “ஹேய் அது என் கடமை மா”
ரம்யா “ம்ம்...நேத்து நைட் ஃபுல்லா...ரிஷி சார் உங்கள பத்தி தான் சொல்லிட்டு இருந்தாங்க..”
மீரா “ம்ம்...”
ரம்யா “நீங்க ஜர்னலிஸ்’அ இல்ல கடவுளா இருந்து என்னோட லைஃப்’அ காப்பாத்தி இருக்கிங்க ரும்ப ரும்ப தாங்க்ஸ்”
மீரா “இட் ஸ் ஒகே ரம்யா”
ரிஷி “ம்ம்...நிங்க பேசிட்டே இருங்க நான் போய் டாக்டர்’அ பாத்துட்டு வரேன்”
ரிஷி மீராவிற்க்கு கண் ஜாடை காண்பித்துவிட்டு சென்றான்.
ரம்யா “நீங்க ரும்ப கிரேட் இவ்ளோ தைரியம் யார்க்கும் வராது...அந்த அஜய் கிட்ட மாட்டி இருந்தா... நீங்க அவ்ளோ தான்”
மீரா “அப்படியெல்லாமில்ல மா”
ரம்யா “ரிஷி சார் சொன்னாங்க உங்களுக்கு ஜர்னலிஸம் உயிர்னு”
மீரா “ம்ம்...”
மீரா அமைதியாக இப்படி துறுதுறு என்று இருக்கும் பெண்ணை எந்த கதிக்கு ஆலாகிவிட்டான் அந்த படுபாவி என நினைத்துகொண்டே ரம்யா கூறி கொண்டு இருந்ததை கேட்காமல் விட...அவள் அவளை உள்ளுக்கி கொண்டு இருந்தான்.
ரம்யா “மீரா மேம்....”
மீரா “ஆங்....சொல்லும்மா”
ரம்யா “என்ன மேம் நான் சொன்னத கேட்டதும் டிரிம் லாண்ட் போய்டிங்களா?”
மீரா “சாரி...என்ன சொன்ன?”
ரம்யா “சரியா போச்சு....உங்கள பத்தி பேசும்போது ரிஷி சார் கண்ணுல அப்படியே ஒரு ஸ்பார்க் வருதுனு சொன்னேன்...இப்போ கூட உங்கள பாக்கும்....அச்சசோ வாங்க”
ரம்யா கதவருகில் நின்றுகொண்டு இருந்த ரிஷியை கவனித்து கூற அவனுக்கு முதுகாட்டி அமர்ந்து இருந்த மீரா அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.
மீரா ‘என் மானத்த வாங்கனும்னே கங்கனம் கட்டிட்டு அலையுறானா? எரும’
ரிஷி ‘ஐயோ இப்படியா என் முகத்துல எல்லாம் தெரியுர மாதிரி நடந்துக்குறேன்? இந்த மீரா’வால எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம்’
ரம்யா‘அச்சசோ இப்படி உளறிட்டோம்மே..என்ன ரெண்டு பேரும் இப்படி முறைக்கிறாங்க’
மூவரும் மூன்று விதமாக மனதில் நினைத்துகொண்டனர்.
-
அத்யாயம் 23
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/11987142_577426472395462_1008637276476758865_n.jpg?oh=5ef4b8d4d1ac2cf1341986a888529777&oe=56A69EDD)
மூவரும் மூன்று விதமாக முழித்துகொண்டு இருக்க அட்டகாசமாக உள்ளே நுழைந்தனர் நம் நட்பு குழு.
ஆதி “என்ன மூணு பேரும் பேய பாத்த மாறி முழிச்சிட்டு இருகிங்க?”
ரம்யா “மேம்...யாரு இந்த பேய்?”
ரம்யா சிரியஸாக முகத்தை வைத்துகொண்டு கண்களில் குறும்பு மின்ன கேட்க ஆதியின் முகம் அஸ்டகோணலாய் மாறியது. அனைவரும் கொல்லென சிரித்துவிட மேலும் சோகமானவனை பார்த்து மதியின் முகமும் கும்பிவிட்டது.
மதி “அவன் ஒன்னும் பேய் மாதிரில்லாம் இல்ல ரம்யா”
கோபமான குரலில் கூறியவளை அனைவரும் திகைப்பாய் பார்த்தனர். இதுவரை கோப பட கூடிய விஷயத்திற்க்கு கூட கோப படாதவள் கேலிக்காக சொல்ல பட்டதற்க்கு கூட கோப படவே என்ன என்று அனைவரும் மதியை பார்க்க அவளோ எதுவும் கூறாமல் வெளியே வந்துவிட்டால்.
ஆதி “சாரி ரம்யா அவ ஏதோ பாட் மூட்ல இருந்தா போல”
ரம்யா “பரவால என்னால புரிஞ்சிக்க முடியுது அண்ட் சாரி”
ஆதி “ம்ம்...இருமா வரேன்”
ஆதி மதியின் பின்னாலேயே ஓட மீரா மட்டும் ஒரு இளம்புன்னகையுடன் நின்றுகொண்டு இருந்தால். அவள் பக்கத்தில் சென்ற ரிஷி
ரிஷி “அதியும் மதியும் லவ் பண்ணுறாகளா”
மீரா “ம்ம்...அது...இல்லயே”
ரிஷி “அப்படியா? ம்ம்....”
மீரா “எப்படி...ம்..ஏன் அப்படி கேக்குற”
ரிஷி “ஒன்னுமில்ல...”
வீரா “என்ன நடக்குது இங்க?”
மீரா “என்னடா?”
சித்து “அவ என்னமோ கோச்சிட்டு போறா ஆதி அவ பின்னாடியே போறான் இங்க நிங்க முனுமுனுனு உங்களுக்குள்ளயே பேசிக்கிறிங்க?”
மீரா “ஹெஹெஹெ ஒண்ணுமில்லயே”
வீரா “நம்பிட்டோம்”
அவர்கள் பேசி கொண்டே ரம்யாவையும் அறிமுக படுத்திவிட அனைவரும் அரட்டையில் இறங்க அங்கே
ஆதி “ஹெ மதி என்னாச்சு உனக்கு”
மதி “என்ன?”
ஆதி “ஏன் திடிர்னு கோவ படுற?”
மதி “அவ யாரு உன்ன பேச?”
ஆதி “அவங்க ஏதோ கிண்டலுக்கு சொன்னாங்கமா”
மதி “அது என்ன? பாத்த முதலே அவளோ அட்வான்டேஜ் எடுத்துகுறது?”
ஆதி “அவ என்ன தான சொன்னா? உனக்கு என்ன?”
மதி.“என்னது எனக்கு என்னவா? என் பிரண்ட் நீ உன்ன சொன்ன எனக்கு கோவம் வராதா?”
ஆதி “அப்படியா? இதே போல வீரா’அ இல்ல சித்து’வ சொல்லிருந்த என்ன பண்ணிருப்ப?”
மதி “ஹான்...அவங்களையும்...இல்...ம்ம்..”
ஆதி “சரி வா போலாம்”
மதி “இல்ல நான் வரல”
ஆதி “ஏன்?”
மதி “எனக்கு அவள பாக்கவே பிடிக்கல”
ஆதி “மதி எப்பவும் மெச்சுயுர்டா நடந்துக்குற நீயா இது?”
மதி “அப்படில்லாமில்ல”
ஆதி “வா மா...அவங்க தப்பா நினைச்சுபாங்கல?”
மதி “ம்ம்..”
முகத்தை தூக்கி வைத்துகொண்டு வரும் அவளை பார்க்க சிரிப்பாக வந்தது..அவனுக்காக மட்டு எடுத்துகொள்ளும் பாசத்திலும் அக்கறையிலும் அவன் நெகிழ்ந்து போனான் கூடிய சீக்கிரம் அவளை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையும் வரவே எகிறி குதித்தவன் சீட்டி அடித்துகொண்டெ அவள் பின்னால் சென்றான். உள்ளே இவர்கள் வந்ததும் ரம்யா அமைதியாகி விட மதி அவளிடம் சென்றவள் கிழே குனிந்துகொண்டே சாரி உரைத்தவள் அமைதியாக சென்று மீராவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
ரிஷி “சரி அப்போ நான் கிளம்புறேன்”
சித்து“ஏன் இப்போவே?”
ரிஷி “இல்ல அதான் நிங்களாம் வந்தச்சே மீரா’அ நிங்க பாத்துபிங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு அதான் கிளம்புறேன்”
மதி “இல்ல...”
ரிஷி “சாரிமா பாய் எவிரிஓன்”
யாரையும் பேச விடாமல் கிளம்பிவிட்டான் அவன் மொபைலில் வந்த செய்தியை பார்த்ததும்.