-
என் விரல்கள் இப்போது
வண்டுகளின் ஆக்கிரமிப்பில் .
தேன் துளிகளை தேடும்
அவ்வண்டுகளிடம்
எப்படி அறிவிப்பேன்
"இது பூவல்ல ..
அவள் கூந்தலை கலைத்து
ஓடி வந்த காற்றின்
ஈரம் உரசியதால்
அவளின் பூவாசத்தை
சுமக்கும் என் விரல்கள் என்று "
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs29.postimg.org%2Fpowgylbsz%2FMalar_Premam_Actress_Sai_Pallavi_Photos.jpg&hash=a03b77057770921a8d3fdb23f4f2c08b766b839e) (http://postimg.org/image/powgylbsz/)
-
என் தோள்கள் இப்போது
ஆன்மாக்களின் ஆக்கிரமிப்பில்
சொர்க்க வாசலை தேடும்
அந்த ஆன்மாக்களிடம்
எப்படி அறிவிப்பேன்
"இது சொர்கமல்ல
அவள் முகம் சாய்த்து
கண் இமையின் ஒரு
சிறு முடியின்
முடிவிலிருந்து உதிர்ந்த
நீர்த்துளி பட்டு
புண்ணியம் பெற்ற
என் தோள்கள் என்று "
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs4.postimg.org%2Fvlizan46x%2Fsai_pallavi_latest_pics.jpg&hash=99b4053350dab753b5a90864fdbe789545a2e688) (http://postimg.org/image/vlizan46x/)
-
Kavithai puritho iliyo enaku :P :P
But intha ponna parthu naan mersalaayitten ??? ??? :P ;D ;D
She look so chweet ??? ??? :-* :-*
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fl1.alamy.com%2Fthumbs%2F4%2F0a94a193-f92a-4d32-b9dc-555ae2832716%2FCBRKPJ.jpg&hash=64f2e8aff30252257c561e447c6a664ca860c9fb)
-
Ofcourse she is sweet :D ;D
-
விரலில் நிறைந்தோடும்
குருதி ஆற்றின்
கரை உடைபட்டதாய்
சிறு துளி இரத்தம்
கரைபுரண்டு
விரல் வழியே வெளியே
எட்டிப் பார்த்தது .
முள்ளில்லா ரோசா மலரை ஒத்த
மெல்லிய அவள் கன்னங்களை
ஏந்தி பழகிய என் கைகள்
மெய்யான ரோசாக்களுக்கு
முள்ளுண்டு என்று
மறந்ததன் விளைவு தான்
மேற்கூறிய நிகழ்வு
அந்த நிகழ்வால்
கையிலிருந்த மெய்
ரோசாவின் முள்
இரத்த ஆற்றில்
குளியலை முடித்திருந்தது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs7.postimg.org%2Fhsst193jr%2Fimagesai.jpg&hash=c3a70468e28ac7c24fe9fd41574fa07abe1bff62) (http://postimg.org/image/hsst193jr/)
-
அழகான வரிகளைத் தேடியெடுத்து அருமையான அர்த்தங்கள் என்னும் நாரில் கோர்த்தெடுத்து அழகிய மாலையாக்கிச் சாத்தியுள்ளீர்கள்.
நண்பா உங்கள் கவிநடையில் நான் நடை பயில்கிறேன் அழகான மெல்லிய நீரோடைக்கவிதைமுறை பாராட்டுகள் நண்பா!.
தோழி கவிதாயினி MysteRy :P :) இக்கவிதையை எப்படி ரசித்து பாராட்ட வேண்டுமென்றால்...
இடைவேளைகளற்றது அக நினைவுத் தடங்கள்
படை எடுக்கும் அதிர்வு அனுபவங்கள்,
விடை புதிரான இருண்ட திகில் வடுக்கள்!
என்று ஆனாலும் உங்கள் ரசனையையும் நான் ரசிக்கிறேன் :) :)
சாய் பல்லவி கவிதை தொகுப்புக்கு வாழ்த்துக்கள் நண்பா Dong லீ.
-
நன்றிகள் நண்பா .ஏதோ என்னால் முயன்ற வகையில் தமிழுக்கும் கவிதைக்கும் துரோகம் செய்யாத வகையில் எழுத முயற்சித்து கொண்டிருக்கிறேன் .பிழைகள் நிறைய இருப்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை கொடுத்துள்ளது
உங்களை போன்றவர்களில் கவிதைகளை பார்த்து ரசித்துதான் இந்த முயற்சி .
மீண்டும் மிக்க நன்றிகள் நண்பா . உங்களின் தமிழ் நடைக்கு சிறு அருகிலாவது வரவேண்டும் என்ற முயற்சியின் முதல் படி இது.
-
WOW Chellam pathi super kavithai machi .....
-
தோழி கவிதாயினி MysteRy :P :) இக்கவிதையை எப்படி ரசித்து பாராட்ட வேண்டுமென்றால்...
இடைவேளைகளற்றது அக நினைவுத் தடங்கள்
படை எடுக்கும் அதிர்வு அனுபவங்கள்,
விடை புதிரான இருண்ட திகில் வடுக்கள்!
என்று ஆனாலும் உங்கள் ரசனையையும் நான் ரசிக்கிறேன் :) :)
(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/11750647_1592287257690305_36275408582403314_n.jpg?oh=1ff76cccf18a87d33c2cc4bb78492d02&oe=561E558A)
-
உங்கள் மனதின் ஓசை சாய் பல்லவியை சீக்கிரம் எட்ட என் வாழ்த்துக்கள் . உள்ளத்து உணர்வுகளை அருமையா வெளிப்படுத்தி இருக்கீங்க. கிளாப்ஸ்.
-
வரிகள் ஒன்றொன்றும் அழகா அருமையா செதுக்கி எழுதி இருக்க அண்ணா..வாழ்த்துக்கள் அண்ணா
-
பூக்கள் தேசமும்
பூக்கள் வாசமுமாய்
நேற்றிரவின் என் கனவுகள் .!
காரணம் ..
தூசி விழுந்த என் கண்ணில்
அவள் ஊதி சென்ற மூச்சுக்காற்று
பூவாசமாய் கண்ணில் கலந்து
கனவில் ஊடுருவியதால் .!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs16.postimg.org%2Fjg3gso6a9%2Fsai_pallavi_20150601094148_35130.jpg&hash=f26e26f99488a00913bef8bbfe593f0ecba2cf92) (http://postimg.org/image/jg3gso6a9/)
-
உங்கள் எண்ணங்களை ஆக்கிரமித்து இருக்கும் இம்மலர் என்றும் வாடாமல் இருக்க வாழ்த்துக்கள் .
-
Sai pallavi kavithaigal payanam melum melum thodara vazthukiren
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.ukmalayalee.com%2Fimages%2Fmovie-news%2F18202.jpg&hash=3f18afec4ca279caa47605b9ac0d59c88c3f60ae)
-
உங்கள் கவிதை மிக அருமை
-
அவள் வளர்க்கும் மீன்கள்
தங்கமீன்களாய் மாறிப்போனது !!
மீன்களை தொட்டியில் எட்டி பார்த்து
அவள் ரசித்த கணம்
மின்னும் அவள் நெற்றி உதிர்த்த
வியர்வை துளிகள் கலந்த நீரில்
அந்த மீன்கள் வாழ்வதினால் !!
-
உப்பு தண்ணீரில் வளரும் தங்க மீன்களுக்கு வாழ்த்துக்கள்
அந்த மீன்களை வளர்க்கும் சாய்பல்லவிக்கும் வாழ்த்துக்கள்
சாய் பல்லவியின் நினைவில் வாடும் டாங் லீ கும் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதைக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்
-
வார்த்தையில்லை தோழரே தங்கள் அன்பு தெரிகின்றது கவியில் நிச்சயம் இதயம் கனியும் என்று நினைக்கிறேன் சாய் பல்லவிக்கு .வந்தனனகள் தோழரே தங்கள் புலமைக்கு
-
மழலைக்கு அவளிட்ட முத்தம்
முத்தமிட
குவிந்த அவள் உதட்டின்
வரி பள்ளத்தில்
விழுந்தது என் இதயம்
செல்லமாய் அவள் புன்னகைக்க
விரிந்த அவள் உதட்டின்
வரி பள்ளங்கள்
இடம் மாறி
இரு கன்னங்களில்
குழியாக குடியேற
என் இதயமும்
தடம் மாறி சிக்கிக்கொண்டது
அவள் கன்னக்குழியில்
-
சிக்கிக்கொண்ட இதயம் சிக்கியதாகவே இருக்கட்டும்
மழலைக்கு இட்ட முத்தம் ஒரு நாள் உங்களுக்கும் வரலாம்
அல்லவா காத்திருங்கள்... வாழ்த்துகள் ..... :D :D
-
உங்களின் கவிதை பூக்கள் இன்னும் பூக்க வேண்டும் தோழரே.வாழ்துக்கள்
-
தொடர முயற்சிப்போம் :-\
-
Sprr brw sema linez onum onum sema.. :-[
-
So Paul na kavithai amarkalam;) semaya matikitinga pola:)
-
ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியில் பதிவிட்ட கவிதைகளை இங்கு என் வசதிக்காக ஒன்று சேர்க்க நினைக்கிறேன்
தொடரும் பதிவு அப்படி ஒரு ஓவியம் நிகழ்ச்சியில் பதிவிட்ட காதல் கவிதை (?)
-
காதலியின் கவிதை :
இணையாக இருந்தும்
இணையாமல் இருக்கும்
தண்டவாளங்களும்
பொறாமை கொள்ளும் !
தலைவா நம் காதலை வியந்து !!
அன்பே ! என் விரல் இடுக்கில்
காதலை நிரப்பும் உன் விரல்கள்!!
மேலும் நிரப்பிவிடு- உன்
மூச்சுக்காற்றால்
என் குளிர்காலங்களை !
புன்சிரிப்பால்
என் விடியல்களை !
கனவுகளால்
என் இரவுகளை!
உயிராய்
என் உலகங்களை !
காதலியின் மைண்ட் வாய்ஸ்
மேலும் நிரப்பிவிடு
உன் பணத்தால்
என் வங்கி கணக்கை !
கை விடமாட்டேன்
விட்டால் ஓடிவிடுவான் !!
காதலன் கவிதை :
அன்பே நீ ஒரு ரயில் !
உன்னை அனுதினமும் சுமக்கும்
தண்டவாளமாய் நான் இருந்தால் போதும் !
அன்பே நீ ஒரு குயில் !
உன் மூச்சை சுமக்கும்
இசையை நான் இருந்தால் போதும் !
அன்பே நீ ஒரு மயில் !
உன் தோகை உதிர்க்கும்
சிறு இதழாய் நான் இருந்தால் போதும் !
காதலன் மைண்ட் வாய்ஸ் :
நான் எழுதுவது கவிதை தானா?அல்லது
இது கவிதை என்று
என்னை நானே ஏமாற்றி கொண்டிருக்கிறேனா?
அன்பே உன் முகலச்சனதிற்க்கு இது
கவிதை 'மாதிரி' இருந்தாலே போதும் !!
ஆர் ஜே மைண்ட் வாய்ஸ் :
நீ கவிதை எழுதாமல் இருந்தால் போதும் !!
-
கல்யாணி !
உனக்கு ஒரு கவிதை -பை நெப்போலியன் ..
"உச்சந்தலையை உருக்கிடும்
உச்சி வெயிலில்
குச்சி ஐசும் நீர் மோருமாய்
உன்னை நான் கண்டேன் !
என்னுள் நீ
அணுக்கள் தோறும்
கலந்திட
கால்கள் தள்ளாடி
தடுமாறினேன் !
உன் இருப்பில்
எனையே மறக்கலானேன் !
உன் மயக்கத்தில்
நடுதெருவிலும் விழுந்து
சாலையை அனைக்கலானேன் !
உன் இன்மையில்
என் கண்கள் வியர்க்கலானேன்
கைகள் நடுங்கலானேன் !
நீ தரும் போதை
அனுதினமும் வேண்டும்
எனை என்றும்
பிரியாதே !! "
கடிதத்தை படித்து முடித்தவள்
சீறும் கோபமுமாய் சீறினாள்
"அட குடிகார நாயே
நான் கல்யாணியின் அம்மா "!!
அத முதல்லையே சொல்ல கூடாதாமா?
பின்னொரு நாளில்
மீண்டும் ஒரு கடிதம் டு கல்யாணி
பை நெப்போலியன்
"அன்பே கல்யாணி
நீயென நினைத்து
உன் அன்னை சுமதியிடம்
கடிதம் கொடுத்ததை எண்ணி
வருந்துகிறேன் "
கடிதத்தை படித்து முடித்தவள்
சீறும் கோபமுமாய்
சீறினாள்
"அட குடிகார கபோதி
நான் சுமதியின் அம்மா "!!
குடி குடியை கெடுக்கும் !
போதையில் கண் முன் தெரியாமல்
காதலியின் தாயிடமும் பாட்டியிடமும்
காதல் கடிதம் கொடுத்தால்
குடி போட்டியை கூட எடுக்கும் !
பொதுநலன் கருதி வெளியிடுவோர்
பூஸ்ட் குடிக்கும் புலவர் சங்கம்
-
Paul na ;D epdi na ipdi eluthuringa ;) super na :) ipdi kavithaigal na enaku rmba pudikum na:) so unga kavithaikaluku ennoda best wishes na:) thodarnthu amarkalama eluthungu;)
-
அண்ணா வணக்கம்.....
கவிதைக்கான கருத்துக்கள்
வாழ்த்துக்கள்.....
பாராட்டுக்கள்.....
அரும்பிக்கொண்டு உள்ளது.....
விரைவில் பிரசவமாகும்.....
இப்போது ஒரே ஒரு கருத்து மட்டும்
மலர் ஆசிரியையின் புகைப்படத்தெரிவு.....
போதுமான அழகு.....
பேரழகி இல்லை
அடக்கத்தின் விம்பம்.....
நம் இனத்தின் பெரும்தொகை
பெண்களின் சாயல்.....
அன்பானவற்றை.....
இயல்பானவற்றை.....
முழுமையானவற்றை.....
உண்மையானவற்றை.....
இரசிக்கும் உங்கள் இதயத்தை காண்கின்றேன்.....
அண்ணி.....
புண்ணியம் செய்திருக்காங்க.....
வாழ்த்துக்கள் அண்ணா.....
-
வணக்கம் அண்ணா,
என் விரல்கள் இப்போது
கூந்தலை கலைத்து ஓடிவந்த தென்றல்
பூ வாசத்தோடு தேனையும் அள்ளிவந்ததோ
வண்டுகள் மொய்த்திட
என்ன வர்ணணை அழகிய அழகு
கடுகில் செதுக்கிய சிற்பம் போன்ற வரி
-
என் தோள்கள் இப்போது
அன்பே உயிரான
கவிதையெனும் உயிர்
உயிரிலே கலவாவிடில்
இப்படி எல்லாம் கற்பனையும்
எழுவதில்லையே கற்பனையில்
எத்தனை மேன்மையான அன்பின்
புலர்ச்சி
ஆழமாய் இரசிக்க காலம்தேவை
சிலவரிகளென விரைவாய் கடந்திட
முடியவில்லை
-
விரலில் நிறைந்தோடும்
அழகான ஒப்பனையும்
நிதானத்தை நிலைக்க செய்யும்
கற்பித்தலும் கவிதையில்
விரலில் குத்தி உள்ளே நுழைந்த
முள் இரத்தத்தில் குழித்ததாய்
அழகை சொல்ல வார்த்தைகள் தட்டுப்பாடு
அவளின் கன்னங்கள் இல்லை இல்லை
அவள் எனும் சொல் வேண்டாம் அண்ணி
வந்தாச்சு.
உடலில் ஓடும் குருதிக்கு தோல்தான்
அணைகளோ அற்புதம்
மறுக்க முடியா ஒப்பனை
-
பூக்கள் தேசமும்
அன்பே வாழ்வான உயிர்
தூசு போக கண்ணில் ஊதுவதும்
பூ வாசம்
கனவிலும் ஆக்கிரமிப்பு
கவிதையில் மகிழ்வு
-
அவள் வளர்க்கும் மீன்கள்
அந்த அவள் மிகவும் பாதுகாக்க
படவேண்டியவள் இதயத்தில்
வியர்வைத் துளிகள் தொட்டியில்
விழ அங்கே வாழும் மீன்களே தங்கமானால்
வாழ்வின் எதிர்காலமென
எண்ணப்பட தாரகைமேல் கொண்ட
அன்பின் வெளிப்பாட்டு வரிகள்
-
மழலைக்கு அவளிட்ட முத்தம்
மழலைக்கு முத்தமிட குவிந்த
உதட்டில் விழுந்த இதயம்
அவள் சிரிக்கையில் குழிவிழும்
கன்னங்களில் சிக்கியதோ
அழகை இரசிக்கும் இதயம்
கவிதைக்கு
அனைத்து கவிதைகளுக்கும்
சிறப்புண்டு சீரோடு
பணிவான வாழ்த்துக்கள் அண்ணா.
-
Pw innum naraya kadhal kavidhai eludhunga :)
Sari than anna ningalu kadhal kavidhai elundhunga :)
-
Hi Paul na ;) asathuringa ponga ;) azhagana kathal kavithaigal ;) vazhthukkal anna ;)