(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Faval%2F2015%2F06%2Fmzniod%2Fimages%2Fp103b.jpg&hash=ee256865de6364ff2c571e726ad0fa7a70982e03)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-Fjn44nK4q04%2FVX_kGuk4SvI%2FAAAAAAAAPUA%2FH01nZFq96fE%2Fs1600%2F3333.jpg&hash=512258a205f325f234f869f451678891dcfa556b)
உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத சத்துக்களில் மிக முக்கியமானது புரோட்டீன் எனப்படும் புரதச்சத்து. புரதச்சத்தை வாரி வழங்கும் அட்சயப்பாத்திரமாக விளங்குபவை பருப்புகள். புரதச்சத்துடன் விட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து நிரம்பியிருக்கும் பாசிப்பருப்பை `ஆரோக்கியத்தின் தூதுவன்’ என்றே அழைக்கலாம். இது உஷ்ணக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிப்பதுடன், எடை அதிகரிக்காமல் இருக்கவும் உறுதுணை புரியும்.
அதேசமயம், வெறுமனே பருப்பு, கூட்டு என்று செய்து பரிமாறினால், அனைவரும் விரும்பி சாப்பிட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டு, பாசிப்பருப்பில் டோக்ளா, பர்ஃபி, சூப், புட்டு, இடியாப்பம், பிரதமன் என்று விதம்விதமாக தயாரித்து, `30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி’களை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பிருந்தா ரமணி, ``ஹேவ் எ ஹேப்பி அண்ட் ஹெல்த்தி ஃபேமிலி’’ என மனதார வாழ்த்துகிறார்.