FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 21, 2011, 05:38:49 PM
-
வண்ணத்துப் பூச்சி
வண்ணத்துப் பூச்சி
தட்டான்
பொன் வண்டு
எதுவும் பார்த்ததில்லை
என் குழந்தை
கொசுவைத் தவிர.
திருடன் போலிஸ்
அம்மா அப்பா
கண்ணா மூச்சு
எதுவும் விளையாடத் தெரியாத
என் குழந்தை
கம்ப்யூட்டரில்
கார் ரேஸிங்கில். . .
—
சுடும் மணல் நதி
மதிய நேரப்பாறை
எதிலும் பாதம் பட்டு
சூடுபடாத என் குழந்தை
கட்ஷுக்குள்
வெந்து போனது
—
முருங்கை மரம் ஏறி விழுந்து
கை ஒடிந்தவன்
மறுநாள்
மாவுக் கட்டுடன் பள்ளிக்கூடத்தில்
பாத் ரூமில்
வழுக்கி விழுந்த
என் குழந்தை
பெட்ரெஸ்டில் பத்து நாள்
—
நகரத்தில்
எல்லா வசதியுடன்
வாழ்கிறது என் குழந்தை
வாழ்க்கையைத் தவிர. . .
pdithu vethanaai patta kavithai
-
உண்மை தான் ஏஞ்சல் வருந்த வேண்டிய உண்மை
பெற்றோர்கள் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஒரு பொருளாக பார்கிறார்கள், அதுவும் நகரம் குழந்தைகளின் நரகம்