FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 21, 2011, 05:24:55 PM

Title: பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா
Post by: Global Angel on December 21, 2011, 05:24:55 PM
பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா?- மார்கண்டேய கட்ஜூ கடும் தாக்கு  



கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் பாரத் ரத்னா பட்டம் வழங்குவது, அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதியரசருமான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். அவர்கள் ஒன்றும் சமூக சேவகர்கள் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி வீரர் தயான் சந்த் ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்ற
கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரத ரத்னா விருது பற்றி முன்னாள் நீதியரசரும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு சிக்கலான தருணத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் நபர்கள் நமக்குத் தேவை என்று தெரிவித்தார். அதுபோன்ற நபர்கள் மறைந்து விட்டிருந்தாலும், அவர்களுக்குத் தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உண்மையான கதாநாயகர்களை மறந்துவிட்டு, மற்றவர்களை போற்றுவதாகவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா?

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று கூறிய அவர், அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு என்றும் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்
Title: Re: பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா
Post by: RemO on December 21, 2011, 06:09:37 PM
கொடுக்க தகுதி வாய்ந்த நல்லவர்கள் இந்தியாவில் குறைவு போல
Title: Re: பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா
Post by: Yousuf on December 21, 2011, 08:20:51 PM
மிகவும் உண்மையான செய்தியை நீதியரசர் மார்கண்டேய கட்ஜு கூறி இருக்கிறார்!

பாரத ரத்னா என்ற உயரிய விருதை பாபா சாஹிப் அண்ணல் அம்பேத்கர் போன்ற உண்மையான போராளிகள் வாங்கிய அந்த விருதை இன்று நாட்டில் உலாவிக்கொண்டிருக்கும் கோமாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டதை பார்த்து அவர் எவ்வளவு வருத்தப்பட்டுள்ளார் என்பது அவரது அறிக்கையில் நன்றாக தெரிகிறது!

நிச்சயாம இந்த கோமாளிகளுக்கு இந்த விருது கிடைத்தால் அதை விட இந்தியர்கள் செய்யும் முட்டாள் தனம் வேறு ஒன்றும் இல்லை!
Title: Re: பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா
Post by: Global Angel on December 22, 2011, 02:59:39 PM
எனக்கு கொடுத்தாலும் பரவாயில்லை சட்டுகாக எவ்ளோ சீவி செய்கின்றேன் ... :)
Title: Re: பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா
Post by: gab on December 22, 2011, 10:46:19 PM
Samooga sevagargaluku alikkapadum intha virudhu,,, Panam kozhitha vilaiyattu veerargal & cinema thuraiyinarku valangapada koodathu. Oru varudam Baratha ratnavirku poruthamanavargal ilavidinum  thaguthu ilatha nabargaluku athai valanga koodathu.
Title: Re: பாரதரத்னா விருது பெறுவதற்கு சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்கள் சமூக சேவகர்களா
Post by: Global Angel on December 23, 2011, 09:47:36 PM
எனக்கு வேணாம் நான் சும்மா சொன்னேன்  :)