FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dhurka on July 16, 2011, 02:36:07 PM
-
என் இதழ்வரை முட்டிய
உன் சுவாசக்காற்று, என்னிலும்
உள் வாங்கி சென்றது.!
உன் மூச்சுக்காற்று கூட இன்று
என் பார்வைக்கு தென்படுகிறது..!
காதல் காற்று கடவுள்
இவற்றையெல்லாம் பார்த்து ரசிக்க முடியாது,
உணரத்தான் முடியுமாம்-
பைத்தியகாரர்கள் சொல்லி விட்டார்கள்..
ஏன் முடியாது? இன்று நீ தந்த முத்தத்தில் நான்
இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டேனே..!
இடைவெளி என்ற வார்த்தை நீங்கி
இறுக்கம் என்பதன் அர்த்தத்தை நம்
இரு இதழ்களின் நெருக்கத்தில்
உணர்ந்து கொன்டேன்..!
இத்தனை வருடங்கள்
உன் முத்தத்துக்காக தானா
என் இதழ் காத்துக்கொன்டிருந்தது
என எண்ணத் தோன்றுகின்றது..!
என் இதழ் பெற்றுக்கொண்ட
முதல் முத்தஸ்பரிசம் இதுதான்..
ஒரு கணம்,
என் இதழ் இமயத்தை தொட்டு வந்த
பெருமிதம் எனக்குள்.!
இன்று இந்த உலகமே என் வசம்தான்...!! :) ;D
-
adiyei un body siz kellam ipde stronga muththam kodutha odanchudatha un body.... ::) ::) ::) ::) ::) ::) nice kavithi dukuuuuuuu :-*
-
adinggg..... >:( ;D nee ingeyum start pannitiya di intha dialogue eh.... vidamatiya ;D n body ithellam thaangum nu nenaikiren di hahahaha
-
ninaikureya:D sambilku onnu vaanki paardi enaaguthunu ::) ::) ::) :D :D :D ;) ;) ;) ;)