FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 30, 2015, 07:09:06 PM

Title: ~ மஞ்சளின் மருத்துவகுணம்! ~
Post by: MysteRy on January 30, 2015, 07:09:06 PM
மஞ்சளின் மருத்துவகுணம்!

பொங்கல் பண்டிகையில் முதன்மைப் பொருள், மஞ்சள். மங்களகரமான மஞ்சளில் மருத்துவ குணங்களும் அதிகம்.  சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான நோய்களில், 60க்கும் மேற்பட்ட நோய்கள் மஞ்சளால் குணப்படுத்தப்படுகின்றன. மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப் பொருள் என்பதால் விவசாயத்திலும் பயன்படுகிறது. கிடைக்க அரிதான கருமஞ்சள், காயகல்ப மருந்தாகப் பயன்படுகிறது.

 பசுஞ்சாண நீரில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள் சமையலுக்கும், நல்லெண்ணெயில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள், சருமத்துக்கும் பயன்படுகிறது.

 மெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.

 மஞ்சளைச் சுட்டு, புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோவை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு, தொண்டைப்புண் மற்றும் கிருமித்தொற்று போன்ற நோய்கள் குணமாகும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2015%2F02%2Fnjzlzm%2Fimages%2Fp42.jpg&hash=6b1de573e49306f0d96b4367f21cd50a69b2c637)

மர மஞ்சளின் சாறு 200 மி.லி அளவு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை என, ஒரு வாரம் தொடர்ந்து குடித்துவர, மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 

 அரை லிட்டர் நீரில் கைப்பிடியளவு மஞ்சளைச் சேர்த்து, 200 மி.லி அளவுக்குக் காய்ச்சி, தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து, 2 வேளை குடித்துவர வெள்ளைப்படுதல், பெரும்பாடு நோய் குணமாகும்.

 2 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் கலந்து, கொதிக்கவைத்து, அரை கப் அளவாகக் குறுக்கியதும், வடித்துக் குடித்தால், பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்பட்ட, நச்சு நீர்க்கட்டுக்களை வெளியேற்றும்.

 பசுமஞ்சள் சாறுடன், நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட, அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். இரண்டு பொடிகளையும் சமஅளவு கலந்து, அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டாலும் சரியாகும்.

 பூசு மஞ்சளை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தோல் நோய் அண்டாது.
 
கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.