FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on January 23, 2015, 09:50:21 PM
-
'கடவுளே!
கோடி வருடங்கள் உன் கணக்கில்
எத்தனை?'
ஒரு நொடி!
" கோடி ரூபா?"
ஒரு காசு!
" அப்படியென்றால்
ஒரு காசு கொடேன் "
ஒரு நொடி பொறு
என்றார் கடவுள்
-
அழகான சிந்தனைக்கவிதை.... வாழ்த்துக்கள்.
காசை, ஏன் நண்பரே ? கடவுளிடம் கேட்கிறீர்கள் !...
காசை அறிமுகப்படுத்தியவரும் அவரில்லை!
காசை மனிதர்களுக்கு கொடுத்தவரும் அவரில்லை !!
ஆனால் உங்கள் வரிகளில் ஒரு அழகிருக்கிறது...!!!
-
அவனின்றி ஓர் அணுவும் அசையாதது என்பது உண்மை தானே மாறன் நண்பரே