FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 20, 2015, 08:19:10 PM
-
மறந்துபோன மருத்துவ உணவுகள்! உணவே மருந்து!!
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10500472_762422020516847_8047686381136431328_n.jpg?oh=cb5b6ed4062d93c3cf15a6fff523590d&oe=556BF2C6&__gda__=1432739866_8b1b05bed4cdec30b8e671fd6889c168)
அமிர்தப் பொடி
(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)
தேவையானவை:
தனியா - ஒரு சிறிய கிண்ணம்,
ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம்,
மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம்,
சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம்,
நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.
செய்முறை:
கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும்.
வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு சேர்த்து பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.
மருத்துவப் பலன்கள்:
நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.