FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on December 19, 2011, 05:26:39 AM
-
கும்பாபிஷேகத்தின் மகத்துவம்
கும்பாபிஷேகத்தின் வகைகள்: கோயில்கள் நமது சொத்து. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதற்காக உருவாக்கப்பட்டதே கும்பாபிஷேக கிரியைகள். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என அவ்வையார் கூறியதன் காரணம், அவ்வூரில் தெய்வ அருள் இருக்க வேண்டும் என்பதால் தான். ஏழையோ, பணக்காரனோ இருவருக்குமே ஏதேதோ கோரிக்கைகள் உள்ளன. அதில் மற்றவர்களிடம் வெளிப்படுத்தக்கூடியவை சில இருக்கலாம். அந்தரங்க கோரிக்கைகளை ஆண்டவனிடம் மட்டுமே சொல்ல இயலும். அவ்வகையில் கோயில் வழிபாடு மனித வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.
சிலந்தி, யானை போன்ற பூச்சி, மிருக இனங்கள் கூட இறைவனை வழிபட்டு முக்தி பெற்றதாக அறிகிறோம். இப்படிப்பட்ட சிறப்பு மிக்க கோயில்களில் கருவறையில் உள்ள தெய்வத் திருவுருவங்கள் இறைவனுடைய உண்மையான திருமேனி (உடல்)களாகவே கருதப்படுகின்றன. இறைவன் தனக்கென ஒரு நாமமும்(பெயர்) வடிவமும் இல்லாதவன். என்றாலும் உருவமில்லாத ஒரு பொருளை நம் உள்ளத்தில் நிலைநிறுத்தி வழிபாடு செய்ய முடியாது. அதனால் உருவ வழிபாடு மிகவும் முக்கியமாகிறது. கல்லாலும், மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்ட உருவங்களில் இறைவனின் வடிவம் செதுக்கிய நாளைப்போலவே சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்படும் கிரியைகளே கும்பாபிஷேக விழாவாகும்.
திருவுருவ ஸ்தாபனம்: கருவறைகளில் கடவுள் திருமேனிகளை ஸ்தாபிக்கும் முறைகள் நான்கு விதங்களில் அமைந்துள்ளன. அவை :