FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on January 02, 2015, 11:01:12 PM

Title: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: MysteRy on January 02, 2015, 11:01:12 PM
பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  வெள்ளி கிழமைக்கு (09-01-2015) முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: SaHaNa on January 05, 2015, 11:13:49 AM
ஊர் எங்கிலும் கொண்டாட்டம்
என் மனதிலோ திண்டாட்டம்
மாவிலை தோரணை அலங்காரம்
வாசல் யாவிலும்
மணம் வீசும் பலகாரம்
தெருவின் மூலையிலும்

புத்தாடை உடுத்தி
யாவர் உள்ளத்திலும் மகிழ்ச்சி
கிழிந்த பாவாடைசட்டை
என் விதியின் சுழற்சி

பொங்கல் பானை பொங்க
காத்துகொண்டு இருக்கிறாள்  முதலாளி அம்மா
நானும் காத்துகொண்டு இருக்கிறேன்
பொங்கல் திகட்டியபின்
என் தட்டில் படைப்பார்கள் என்று!!!
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: thamilan on January 05, 2015, 01:47:03 PM
இயத்திரங்களோடு இயந்திரமாய்
தரையில் கால் படாமல்
தட்டில் கை படாமல்
இயந்திர வாழ்க்கை வாழும்
நாம் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒன்று
நம்மால் முடியாத ஒன்று
உழவன் சேற்றில் கால் பதிப்பதால் தான்
நாம் சோற்றில் கை பதிக்கிறோம் என்பது

நம் பசி தீர
இந்த வானத்து மழை
பூமியில் விதை
உழவனின் நெற்றி வியர்வை
இவை நிலத்தில் விழுந்தாலொழிய
உணவு என்று எழுதி அந்த
கடதாசியை உண்டால் மட்டுமே முடியும்

வெறும் பண்டிகை அல்ல பொங்கல்
மனிதனையும் இயற்கையும் இணைந்து
உறவாடும் நன்னாள்
இயற்கைக்கு மனிதன் நன்றி சொல்லும்
ஒரு பொன் நாள்
விஞ்ஞானமும் மெய்ஞானத்தில்
முழ்கும் நாள்

உலகிற்கே உணவு படைத்திடும்
பூமித் தாய்க்கும்
அதற்கு உறுதுணையாக இருக்கும்
ஆதவனுக்கும்
ஏர் இழுத்து உழவனுக்கு உதவிடும்
எருதுகளுக்கும்
நன்றி சொல்லும் நன்னாள் இது

இந்த பொங்கல் திருநாளில்
நாமும் இயற்கைக்கு நன்றி சொல்வோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நண்பர்களே
 
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: பவித்ரா on January 06, 2015, 07:53:41 PM
இன்று பொங்கல் திருநாளாம்
பொங்கல் வைக்கலாம் என்று பார்த்தால்
அரிசியில் இருந்த தரத்தில் கலப்படம்
வெள்ளத்தில் சுண்ணாம்பு கலந்து கலப்படம்
கரும்பு வாங்கினால் கசக்கிறது
 அதிகளவு மருந்து போலும் !

மஞ்சள் வாங்கினால் அது மணக்கவில்லை
அடடா அதிலும் கலப்படம்
குங்குமம் வாங்கி நெற்றியில்
 வைத்தால் அரிகிறது நெற்றி அதிலும் கலப்படம்
சந்தனம் வாங்கினால் மரதூலில்
வண்ணமும் வாசனையும் சேர்த்து
அதுவும் கலப்படம் போல !

விவசாயியே நீ இந்த நாட்டின் முதுகெலும்பு
அதனால் தான் உன்னை ஒடிக்க பார்கிறார்கள்.
அரசியல் வாதியும் தொழிலதிபரும்
 பணத்திற்கு துணை நிற்பவன்
நீ நேராக நிமிர்ந்து நில் !
சாதுர்யமாக எதிர்த்து போராடு
இயற்கை உனக்கு எல்லாம் கொடுத்து இருக்கிறாள் ...

ஊருக்கே சோறு போடுபவன் நீ
இயற்கை விவசாயத்தை மேற்கொள்!
உன் தலைமுறைக்கும் சொல்லி கொடு
நவீன தொழில் நுட்பத்திற்கு தடை சொல்!
 பாரம்பரிய  பயிர் சுழற்சி உழவு முறையை  மேற்கொள்
எவன் தடுப்பான் உன்னை!

இயற்கை விவசாயம் வாழ்வை மேம்படுத்தும்
சுற்று சுழலை பாதுகாக்கும் .
உன் வாழ்வை  செழிப்பாகும்
எதிர்கால சந்ததியின்  ஆயுளை  கூட்டும் .
அப்போது  கொண்டாடு ஆனந்தமாக  பொங்கலை ..!
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: CybeR on January 07, 2015, 01:57:44 AM
பொட்டிட்ட புதுப்பானையில்
பொங்குகின்ற பொங்கல்
போல் தங்க மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்விலும்
தமிழ் நகை பொங்கட்டும்..!
பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி தமிழர்களின்
வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!
சூரியனார்க்கு நன்றி சொல்லும்
சுந்தரமான பொங்கல் போல்
சூதில்லா மனம் கொண்ட
சுத்தமான தமிழர்களின் வாழ்வில்
சுகவாழ்வு பெருகட்டும்..!
தரணியை தழைக்கச் செய்யும்
தைமகள் பிறப்பிற்கும்
எருதின் உழைப்பிற்கும்
நன்றி சொல்லும் நல்மனம் கொண்ட
தமிழர்களின் வாழ்வில்
நலம் பல திரளட்டும்...
நன்மைகளே விளையட்டும்..!
புலம் பெயர்ந்த தமிழருக்கும்
புலம் பெயரா தமிழருக்கும்
பொங்கலோ பொங்கல்
பொங்குக தமிழ்ப் பொங்கல்..!
பொங்கட்டும் மகிழ்ச்சிப் பொங்கல்..!
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: Nick Siva on January 09, 2015, 01:08:19 AM
இமயமாக இருக்கும் வானுக்கு
நிகரான உயர்வு இல்லை
பூமி யின் உதயமாக இருக்கும் சூரியனுக்கு
நிகரான ஒளியும் இல்லை

வெண்மை நிறத்தை விட
தூய்மையாக இருக்கும் இயற்கைக்கு நிகரான
நிறமும் இல்லை
கரும்பை விட மிகவும் சுவையான
மனதினைக் கொண்ட உழவனுக்கு நிகரான
உழைப்பும் இல்லை

பெற்ற தாயின் பாசத்தை
மதிப்பதை போல
வெண்மை பொருந்திய பசுவின் ரத்தத்துக்கு
நிகராக ஏதும் இல்லை

இவை யாவும் ஒன்றாக சேர்ந்து வரும்
அற்புதமான நாள் தைதிருநாள்
இந்த திருநாளில்
தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து
இயற்கைக்கும் ஆதவனுக்கும்
உழவர்களுக்கும் அவர்களுக்கு உதவும்
எருதுகளுக்கும் சொல்லும் நன்றியை
விழாவாக  கொண்டாடும்
இனியநாள் தான் பொங்கல் திருநாள்,
இனிய பொங்கல் திருநாள் நண்பர்களே
Title: Re: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2015)
Post by: Dong லீ on January 10, 2015, 08:08:03 PM
தமிழன் பெருமை கொள்ள
ஆதவன் வாழ்த்து சொல்ல
மெல்ல மெல்ல உதித்து
வந்தாள் தை மகள்

உழவன் உளம் மகிழ
என்றுமே  அழியா
அவன் புகழை சொல்ல
துள்ளி துள்ளி குதித்து
வந்தாள் தை மகள்

ஆதவன் அயராது சிந்தும்
வெயில் துளிகளிலும்
சஹானா ராக இசையை
அனுபவிக்கும் ரசிகன் போல்
ஆனந்தமாய் உழைக்கும்
எருதுக்கு விருதுகளை
அள்ளி அள்ளி கொடுக்க
வந்தாள் தை மகள்

உழவனின் முகத்தில் மின்னும்
வியர்வை முத்துக்களுக்கு
ஒரு கிராம் தங்கமும் ஈடில்லை
என்றுரைக்க வந்தவள்
இந்த தை மகள்

நம் கண்மணி போன்ற நெல்மணியை
ஆண்டுகள் தோறும்
நம் தட்டிற்கு கொண்டு வரும்
உழவன் நமக்கு
சோறு போடும் அன்னை
என புத்தியில் உரைக்க
செய்கிறாள் தை மகள்

கேப்பை கூழ் உண்ணும்
தமிழனின் ஆதாரமாய் விளங்கும் 
உழவன் இருக்க
 பிற தெய்வங்களும் என்ன .
அழகாய் நம் மனதில்
குடிகொண்ட சுந்தர ஈசனும் அவனே
ஆணித்தரமாய் நிக்கும்(நிற்கும்)
சிவராசனும் அவனே
நம் வாழ்வை நடத்தி செல்லும்
கேப்டனும் அவனே 
அவன் இல்லாமல்
நாம் வெறும் சைபர் மட்டுமே
நன்றிகளுடன் ஸ்ரீ டாங் லீ