FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 30, 2014, 01:36:01 PM
-
பல நோய்களுக்கு ஒரு மருந்து – எளிய மருந்து – அரு மருந்து
பூண்டு, தேன் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்ந்த முக்கலவை ஒரு அரிய மருந்தாகும். கான்சர், ஆர்த்தரைட்டீஸ், இரத்தக்கொதிப்பு, குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, ஆஸ்த்துமா, அல்சர், ஜலதோஷம் மற்றும் பல தொற்று வியாதிகளுக்கு ஓரு மருந்தாக மருத்துவரீதியில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தக் கலவை கொலஸ்ட்ராலைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகின்றது.
சமீபத்திய ஆராய்சசிகள் பல விதமான கான்சர்களை தடுக்கின்ற சக்தி இந்த கலவைக்கு உள்ளதாக நிருபித்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வியக்கத்தகு முறையில் உயர் இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் இரண்டு வாரங்களில் குறைக்கின்றது
எவ்வாறு செய்வது:
1 கப் ஆப்பிள் சைடர் வினிகர்
1 கப் தேன்
8 பூண்டு பற்கள்
மூன்றையும் மிக்ஸியில் அடித்து நன்றாக கலக்கவும். இந்த கலவை பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். ஆனால் 5 நாட்களுக்கு மேல் வைக்க வேண்டாம். அதற்க்கு மேல் வைத்தால் கெட்டு விடும்.
எவ்வாறு சாப்பிடுவது:
இந்த கலவையில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து தண்ணீரில் அல்லது ஜூஸில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து முன்னேற்றம் காணும்வரை சாப்பிடவும்.