FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 22, 2014, 02:11:48 PM
-
மாதவிலக்கு சீராக வர!
தும்பைப் பூவை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சிறிய வெள்ளை நிறப் பூவான தும்பைக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. நம் தாத்தா பாட்டி காலத்தில் மிக எளிதாகக் கிடைக்கும் இந்தத் தும்பைப் பூவை பல விஷயங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர்.
சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியாக இருப்பதில்லை. மாதக்கணக்கில் தள்ளிப் போவதும், மாதவிலக்கு ஆனப் பிறகு பல நாட்களுக்குத் தொடர்ந்து ஆவதுமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்களுக்கு தும்பைப் பூவைக் கொண்டு ஒரு கை வைத்தியம் உள்ளது.
அதாவது தும்பைப் பூ, தும்பை இலை, உத்தாமணி இலை மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைக்கவும்.
இந்த விழுதை ஒரு சுண்டைக்காய் அளவிற்கு எடுத்து காலை, மாலை இருவேளையும் வாயில் போட்டு முழுங்கிப் பாலைக் குடிக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு நாள் தவறி வரும் மாதவிலக்கு சீராகி மாதம் தோறும் மாதவிலக்கு ஏற்படும்.