FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 19, 2014, 01:41:45 PM
-
இதய வலியை போக்கும் வால்நட் தோல் தேநீர்
இந்த தேநீர் இதய நோய்களையும், ஹார்ட் அட்டாக்கையும் வரவிடாமல் தடுக்கின்றது. வால்நட் எனப்படும் அக்ரூட்டின் தோலில் உள்ளேயுள்ள சவ்வு படலத்தை கொண்டு தேநீர் உண்டாக்கி குடித்தால் உடலின் மிகுந்த சூடும், இதய நோய்களும், இதய அடைப்புகளும் உண்டாகாது.
வால்நட் தேநீர் முக்கியமாக புகை பிடிப்பபவர்களுக்கு உண்டாகும் இதய நோயை குணப்படுத்தும். வால்நாட்டின் உள்ளே உள்ள பருப்புகளுக்கு இடையில் காணப்படும் சவ்வு மிகுந்த சக்தி வாய்ந்தது.
நான்கைந்து சவ்வுகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரில் தேநீர் வைத்து குடிக்க வேண்டும். இதற்க்கு முன்பு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. இந்த தேநீரை இடைவிடாது குடிக்கவேண்டும். இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து நெஞ்சுவலியை நீக்குகின்றது.
இந்த தேநீர் உடலில் உள்ள மிகுந்த சூட்டை குறைத்து இதய நோய்கள் இல்லாதவாறு காக்கின்றது. இதை முதலில் ஒரு கப் குடிக்கும்போதே உணரலாம்.
இது ஒரு தடுப்பு முறையே. உங்களக்கு இதய வலி பிரச்சனைகள் இருந்தால் முதலில் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்.