FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on December 09, 2014, 08:22:38 PM

Title: நிறைகுடம்
Post by: thamilan on December 09, 2014, 08:22:38 PM
அகன்ற உலகு நான் என்றது
அகல்
அழகிய உடல் நான் என்றது
திரி
அசையும் உயிர் நான்  என்றது
சுடர்
உழைத்து வடிந்த உதிரத் துளிகளாய்
தேங்கி நின்ற
எண்ணெய்
வாய் திறக்கவில்லை

குறைகுடங்கள் தான்
தளும்பும்
நிறைகுடங்கள் என்றும்
தழும்புவதில்லை
 
Title: Re: நிறைகுடம்
Post by: Maran on December 10, 2014, 01:45:23 PM


அழகான

அற்புதமான

ஆழமான


படைப்பு தோழரே...



சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

அருமை அருமை...முடித்த விதம் அருமை.



தேவை விளம்பரம்
பூக்கடைக்கும்
காகிதப்பூக்கள் !