FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on November 28, 2014, 04:47:26 PM
-
தண்ணீர் நமது உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நமது மூளையின் திசுக்களில் 80% தண்ணீர் தான் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நமது மூளை அந்தத் தண்ணீரின் அளவிற்கு ஏற்றவாறு வேலை செய்யும் என்பது தான். இங்கு தண்ணீரைச் சேமிக்க வழியில்லை என்பதால், எந்த அளவிற்கு இவை பயன் படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு நீரேற்றம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் மூளையின் செயல்பாடுகளில் பிரச்சனை வர ஆரம்பித்துவிடும்.
மற்ற உடலின் செல்களைக் காட்டிலும், மூளையின் செல்களுக்கு இரண்டு மடங்கு ஆற்றல் தேவை. ஒவ்வொரு நாளும் நீரேற்றம் ஏற்பட்டவுடன் அதற்கான ஆற்றல் அதிகமாகிவிடும். முழு ஆற்றலுடன் நீங்கள் செயல்படும்போது, அதற்கான வேகமும், விவேகமும் உங்கள் மூளையில் சேர்ந்துவிடும்.
இந்த நீரேற்றம் குறையும் போது மன அழுத்தம், ஆற்றலின்மை போன்றவை நிகழக்கூடும். இதனை வாய் வறண்டு போவது, தாகம், குழப்பங்கள் ஏற்படுதல் போன்றவற்றின் மூலம் கண்டறிந்து கொள்ளலாம். குறிப்பாக உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நமக்கு அதிகப்படியான தண்ணீர் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் நண்பர்களே!