FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on December 15, 2011, 10:41:35 PM

Title: யார் காரணம்
Post by: Global Angel on December 15, 2011, 10:41:35 PM
யார் காரணம்
 
விலைவாசிகள் ஏறினாலும் டீசல், பெட்ரோல், தங்கம் விலை ஏறுவது போல வீட்டிற்கு வீடு மகப்பேறும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. வருவாய்க்கு ஏற்றார் போல பிள்ளைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற திட்டம் இருப்பதில்லை, கூலித் தொழிலாளிக்கு நாளொன்றிற்கு 200 ரூபாய் வருமானம் என்றால் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு அவர்களையும் சேர்த்து நால்வருக்கு உணவு உடை இருப்பிடம் அமைத்துக் கொள்ள இயலுமா என்று யோசித்து குழந்தை பேற்றிற்கு தங்களை தயார் செய்துகொள்ளும் அமைப்பு சமூகத்தில் இல்லை.

மாறாக வருமானம் மிகக்குறைந்த வீடுகளில் குழந்தைகளை நிறைய பெற்றுக்கொண்டு பராமரிக்க இயலாமல் அவர்களை சமூகவிரோதிகள் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அளவிற்கு அதிகமான சொத்துக்கும் வருமானத்திற்கும் சொந்தக்காரர்களின் இல்லங்களில் ஒரு குழந்தையே போதும் என்று குழந்தை பேற்றை நிறுத்திக்கொள்கின்றனர். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சீன நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது போன்று இந்தியாவிலும் திட்டங்கள் நடைமுறைபடுத்தவேண்டும்.

உலகின் மக்கள்தொகையில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருவதை தவிர்க்க வேறு வழியே இல்லை. வறுமை ஒழிப்பிற்கும் தானிய உற்பத்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அடிப்படை காரணம் அதிக மக்கள் பெருக்கம். அடிப்படை சுகாதாரம் அடிப்படை கல்வி போன்றவற்றை கிராமப்புறம் மற்றும் நகரத்தை ஒட்டிய கிராமங்களில் கட்டாயம் ஆக்க அரசு முயன்றாலும் இடையே பல ஊழல்கள் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இல்லை.

மழைகாலத்திற்கு முன்னர் மழைநீர் தடங்கலின்றி போகும் வழித்தடங்களை ஆக்கிரமித்திருக்கும் கழிவுகள், அனுமதியின்றி கட்டப்படும் குடிசைகளை அகற்றினால் மழைநீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்திற்கு இடையுறு ஏற்ப்படுவதை தவிர்க்கலாம். ஏரி, குளங்களை தூர்வாரி தயாராக வைத்திருக்கும்போது அவற்றில் மழைநீர் சேமிக்கப்பட்டு சுற்றுப்புற ஊர்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய நீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். பெய்கின்ற மழைநீரெல்லாம் வீணாக ஓடி கடலில் கலந்துவிட்டால் வருடம் முழுவதிற்கும் கிணறுகளில் குடிநீர் எவ்வாறு சுரக்கும், விவசாயத்திற்கு நீர் வருடம் முழுவதற்கும் எப்படி போதுமானதாக இருக்கும்.

சாலைகளில் மழைநீர் ஓடும் கால்வாய்களில் ஏற்ப்படும் அடைப்புகள், பலவற்றில் மழைநீர் செல்வதற்கான வழிகளின்றி அமைக்கப்பட்டிருக்கின்ற சாலைகள் என மழை நீர் தேங்குவதற்க்கான காரணங்கள் பல, இதனால் மழைநீரும் கழிவுநீரும் இணைந்து ஓடாமல் சாலைகளில் தேங்கி நின்று அதில் நடக்கும் பாதசாரிகளுக்கு தொற்று நோய் பரப்பும் கிருமிகளை பரப்பி, காய்ச்சல், வாந்தி, பேதி போன்ற நோய்கள் ஏற்ப்பட காரணமாகிறது. எல்லாவற்றிற்கும் மிக முக்கிய காரணம் தேவையான பராமரிப்பின்றி கிடப்பில் கிடக்கும் சமுதாய முன்னேற்ற பணிகள். கேட்பாரற்று கிடக்கும் சமூகநலப்பணிகள். எந்த துறையை எடுத்தாலும் தேக்கம், தனியார் நிறுவனங்களில் நடக்கின்ற பணிகளைப்போன்று அரசு பணிகள் செயல்படுவதில்லை, இதற்க்கு காரணமாக கூறப்படுவது மெத்தனபோக்கு. வாங்குகின்ற சம்பளத்திற்கு ஏற்ற உழைப்பை கொடுக்க இயலாத சுயநலம் மிக்க கூட்டம்.