தேங்காய் மருத்துவம்;-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/1496732_822031081152542_7134688881830781524_n.jpg?oh=d4acbbd31c7a418c84a390b8d2f32740&oe=54E90849&__gda__=1424016409_9b0bd4c0b2c02034a6cd29bfcff675ee)
மூல நோய்க்குத் தேங்காயை அடிக்கடி சேர்த்தால் உக்கிரம் குறையும். வாய்ப்புண்ணுக்குத் தேங்காயை அடிக்கடி சேர்த்தால் உக்கிரம் குறையும். வாய்ப்புண்ணுக்குத் தேங்காய் துருவலை வாயில் போட்டுமென்று அதையே உதட்டிலும் தடவி வர புண் ஆறும். வயிற்றுக் கட்டி நீங்க சில தேங்காய் கீற்றுகளை உப்புக்குள் அமிழ்த்தி வைத்திருந்து மறுநாள் ஒரு கீற்று சாப்பிடவும். உடல் நிலைக்கேற்ப 3 நாள் சாப்பிட கட்டி நீங்கும். கீரைப்பூச்சி வயிற்றிலிருந்து வெளியேற, அரை மூடி தேங்காயைத் துருவி பால் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். தேங்காய் பருப்பு இரத்தத்தைச் சுத்தி செய்யும். கீல் வாதம், பாரிச வாதம் போக்கும். தாதுவை உண்டாக்கும். இடுப்பு வலியைப் போக்கவும், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றல் உடையது. தேங்காயில் நீர் 36.3, புரதம் 4.5, கொழுப்பு 41.6, கார்போஹைட்ரேட் 13.0, பிற 4.6, 100 கிராம் தேங்காயில் 1.7 கி. இரும்பு, 0.01 கி.கால்சியம் 0.24 கி. பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் உண்டு. தேங்காய் சிறந்த கொழுப்பு பொருளாயினும் எளிதில் ஜீரணமாகும் சிறப்புடையது. மற்ற எண்ணெயைவிட தேங்காய் எண்ணெய் சுலபமாக ஜீரணமாகும்.