FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: Yousuf on December 14, 2011, 10:18:04 PM

Title: ஒரு குரல்!
Post by: Yousuf on December 14, 2011, 10:18:04 PM
"இப்ப ஒன்னய என்ன செய்றதுன்னே தெரியல? எவ்வளவு சொல்லிருப்பேன் உங்கிட்ட? ஹ்ம்...கேட்டியா நீ? நீ நெனச்சதுதான் சரின்னு நெனச்சு பண்ணிக்கிட்டேயிருந்த இப்ப...?"இடி இடியெனச் சிரித்தான் அவன்.

"இங்க பாரு நான் செஞ்சது என்னவோ எல்லாம் எனக்கு சரிதான், உனக்கு தப்பா தெரியுதுங்கறதுக்காக என்ன நான் மாத்திக்க முடியுமா?, இப்டீ மாத்திக்கிட்டே போனா, நான் எப்டி நானாவே இருக்குறது? ஹ்ம்..சொல்றா .."

"எப்பவுமே நீ நீயா இருக்குறதப்பத்தி தான் நெனப்பா? .ம்..சுத்தி இருக்குறவங்களப்பத்தியும் நெனக்கணும், எப்பவுமே ஒலகம் ஒனக்காக மட்டும் சுத்திக்கிட்டு இருக்கல ...எல்லாரோடயும் சேந்து வாழ்ந்து தான் ஆகணும், ஒனக்குப்புடிச்சத செய்றதுங்கறது அடுத்தவங்கள பாதிக்காம இருக்கணும், ஒருத்தனோட மூக்கு வரைக்கும் ஒன்னோட கையக்கொண்டு போறதுக்கு உனக்கு சுதந்திரம் இருக்கு, ஆனா அவன் மூக்குல குத்துறதுக்கு இல்ல, புரிஞ்சுக்க."

"இப்டீ எல்லாப்பயலும் கையக்கொண்டுக்கிட்டு தான் வாராங்ய, அதுதான் எரிச்சலா இருக்கு மவனே திருப்பி அடிக்கணும்டா, அதுல தான் என்னோட உரிமை இருக்கு, அன்னிக்கு பாத்தேல்ல வீண் சண்டக்கி இழுக்கிறாங்ய, போக வேணாம்னு பாத்து, ஒதுங்கிப்போனா,என்னென்ன பேசுனாங்யன்னு ஒனக்கு தெரியாதா?, இங்க பாரு ஒன்னய மாதிரி நியாயம் தர்மம்னு இப்பவும் பேசிக்கிட்டுருந்தன்னு வெச்சுக்க, மவனே ஒன்ன பொலி போட்ருவாங்யடி, அடக்கி வாசிக்கணுமாம்ல அடக்கி, அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது மாப்ள, போட்டமா போனமான்னு இருக்கணும்."

"இதாண்டா, ஒங்கிட்ட புடிக்காத கொணம் எனக்கு, எவ்ளவ் சொல்லியும் திருந்த மாட்டேங்குற, என்னிக்காவது அடி பொளக்கப்போறாங்ய, அப்பத்தெரியும்டி சேதி"

"ஹ்ம்..ஒனக்குச் சொல்லி மாளாது என்னென்ன பேச்சு ஏச்சு வாங்க வேண்டிருக்கு? இதெல்லாம் எனக்கு தேவயா? ஒன்ன மாதிரி பூன மாதிரில்லாம் எனக்கு இருக்க முடியாதுடி.திருப்பிக்குடுக்கணும்டா, அப்பத்தான் நெருங்கவும் பயப்படுவாங்ய, ஒன்ன மாதிரி ஒதுங்கி ஒதுங்கி போயிக்கிட்டிருதேன்னு வெச்சுக்க, இன்னேரம் புல்லு மொளச்சுப்போயிருக்கும்டி...ச்ச, அதெல்லாம் ஒரு பொழப்பா ..?ஹ்ம்..?"

"வேண்டாம் மாப்ஸு, நிறுத்திக்க, போதும், எப்பவும் அடுத்தவன நோகடிக்கிறதும், கெட்ட வார்த்தைல திட்டி அசிங்கப்பட வைக்கிறதும், ஒன்னய நெருங்கவிடாமப் பாத்துக்குறதும் எத்தன நாளைக்கி தான் நடக்கும், ஒரு மிருகத்த பாக்றமாதிரில்ல ஒன்னப்பாக்றாங்ய இப்பவே, தொடர்ந்து இதே மாதிரி பண்ணிக்கிட்டேயிருந்தேன்னு வெச்சுக்க, சமயம் பாத்து போட்டுத்தள்ளத்தான் நெனெப்பாய்ங்க, அவ்ளவ் தான் சொல்லிட்டேன், ஓயாம இதயே சொல்லி சொல்லி எனக்கும் அலுத்துப்போச்சுடா, திருந்துற வழியப்பாரு, ஆமா."

"ஹ்ம்,,ஒன்னயும் பெத்தான் பாரு அவனச்சொல்லணும், பயந்தாங்கொள்ளி மாதிரி, ஓடி ஒளியாதடா, திருப்பி அட்றா, அப்பத்தான் ஒரு பயமிருக்கும் நம்ம மேல.சும்மா ஓடி ஒளிஞ்ச்சிக்கிட்டிருந்தன்னு வெச்சுக்க, மவனே தேடித்தேடி வந்து அடிப்பாங்ய, அடி வாங்கியே சாக வேண்டியதுதான்"

"நீ சொல்ற மாதிரி, இந்த காந்தி, புத்தன் மாதிரில்லாம் எனக்கு வாழத்தெரியாது, என்னய நோகடிக்காம என்னப்பாத்துக்கிர்றதுக்கு இதத்தவிர வேற வழியேயில்ல எனக்கு,அதான் எனக்கு சரின்னு பட்டத நான் செய்றேன், இதுல என்ன தப்பு இருக்கு?..ஹ்ம்..ஒரு கன்னத்துல அடி வாங்கிட்டு இன்னோரு கன்னத்த திருப்பிக்காட்றது இதெல்லாம் ஒனக்கு சரிவரும் எனக்கில்ல ..ஆமா மொதல்ல அடி வாங்குவானேன், அப்புறம் இன்னொரு கன்னத்தயும் காமிப்பானேன்,, மொதல்லயே தடுத்துட்டா இவ்ளவும் நடக்குமா?"

"ஓனக்கு நானக்கப்பாத்து இவ்ளவ் பேசிக்கிட்டு இருக்கேன் இன்னமும், வேறொருத்தனா இருந்தான்னு வெச்சுக்க, கையில அருவாளோடதான் பாத்திருப்ப நீ",

"ஹ்ம்,,அதத்தான மாமு நான் வெச்சிக்கிட்டிருக்கேன்  புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே?"

"வேணாம்டா, கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதாண்டா சாவு, நிறுத்திரு போதும், வேணாம்"

"ஐயையே, சின்னபபுள்ள மாதிரி பேசுனதயே பேசிக்கிட்டிருக்கியே மாமு, போ, ஏதாவது வேற சோலிகீலி இருக்கான்னு பாரு அத விட்டுப்புட்டு எங்கிட்டயே எப்பப்பாரு சிலுகிழுத்துக்கிட்டு?"

"சொல்றதெல்லாம் வேம்பாக்கசக்கத்தாண்டி செய்யும் இப்ப, பின்னால அனுபவிப்பேல்ல, அப்பத்தெரியும்டி சேதி,அவன் சொன்னானே, காது குடுக்கலியேன்னு "

"ஹ்ம்...பாப்பம் பாப்பம், அதயும் பாக்கத்தான போறேன்..இப்டி நீ சொல்ற மாதிரி பயந்தாங்கொள்ளியா இருந்து தெனம் சாகறத விட, ஒரேயடியா செத்துப்போகலாம்டி,போடா ஒன் வேலயப்பாத்துக்கிட்டு, பெருசா சொல்ல வந்துட்டான், நீ வந்தாலே எனக்கு என்னவோ பூச்சி ஊர்ற மாரதிரி இருக்குடா, நீ வராத, தொலஞ்சு போ மொதல்ல "

"வெரட்டாத, என்னை வெரட்டிட்டு நீ நிம்மதியா இருந்துரலாம்னு மட்டும் நெனக்காத, ஒன் பலமே நாந்தாண்டி, ஏதோ நான் இருக்கக்கண்டு இது வர தன்னக்கட்டிக்கிட்டு இருக்க, இல்லன்னு வெச்சுக்க, எப்பவோ நடந்துருக்கும்டி நடக்கவேண்டியது.. "

"போடா போ, போயிரு, வராத, நீ வரவே வராத, நீ வந்தாலே எனக்கு என்னமோ ஆகுதுடா, களைச்சுப்போகுதுடா, வேணாண்டா, போயிரு நீ போயிரு, போ போ ஒழிஞ்சு போ"

அந்த "ஒழிஞ்சு போ"வ ரொம்பவே கத்தி சொல்லிட்டேன் போல, பஸ்ஸில எல்லாரும் என்னயே திரும்பிப்பார்த்தனர். அவங்க ஏன் என்னயே பாக்றாங்கன்னு முதல்ல புரியவேயில்லை, பிறகு நானாகவே வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டேன்.
Title: Re: ஒரு குரல்!
Post by: RemO on December 15, 2011, 01:46:32 PM
namma kural soluratha ketkurathu rompa mukkiyam athu than epavum unmaiya pesum
Title: Re: ஒரு குரல்!
Post by: Yousuf on December 15, 2011, 08:41:52 PM
உண்மைதான் ரெமோ மாம்ஸ்!