காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள் :-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p370x247/10454453_702085686555560_8228745314286685371_n.jpg?oh=e0f91013621953524b793ba1caf62d28&oe=54EC5A3B&__gda__=1423673611_92158867e1cb90af8fba9083bcae3ceb)
* இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் கடவுளின் திருவடியை மறப்பது கூடாது.
* கோபத்தால் பிறருக்கு ஏற்படுவதை விட நமக்கே அதிக தீமை உண்டாகிறது.
* போட்டி பொறாமை இருக்கும் உள்ளத்தில் மனநிறைவு இல்லாமல் போய் விடும்.
* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே செல்லக் கூடாது. இருப்பதில் திருப்தி கொள்வதே சிறந்தது.
* நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம்.