FTC Forum
Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: thamilan on October 25, 2014, 04:15:56 PM
-
காதல்
ஆதி முதல் அந்தம் வரை மனிதனை ஆட்டிப்படைப்பது காதல். ஆதம் ஈவாள் முதல் அம்பிகா அமராவதி வரை காவியம் படைத்த காதல்கள் பல. காதலுக்காக உயிரே பிரிந்தாலும் அந்த காதல் அழியாமல் சரித்திரம் படைத்தவர்கள் பலர். ஆனால் இன்று?
காதல் ஒரு பொழுதுபோக்கு. பார்த்ததும் காதல், பார்க்காமலும் காதல். SMSஇல் காதல், இன்டர்நெட்டில் காதல். இப்படி பலவிதமான காதல்கள். இவை அனைத்துமே வானவில் காதல் என்றும் சொல்லாம்.
அழகுக்காக, பெருமைக்காக, பொழுதுபோக்குக்காக காதல் செய்யும் ஆண்கள் பல பலர்.
தங்கள் தேவைகளுக்காக. கிரெடிட் கார்டு ஆகா பசங்களை காதலிக்கும் பெண்களும் பலர்.
உண்மையான காதலர்களும் உலகில் இருக்கிறார்கள். அதையும் நாம் மறுப்பதற்கில்லை.
இதுவல்ல எனது கரு. இத்தகைய காதல்கள் தோல்வியில் முடியும் போது இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா இல்லை பெண்களா? யார் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்?
அதிகம் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் பெண்களே. இதுவே எனது வாதம்.
இல்லை aangal தான் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வாதங்களை இங்கே வைக்கலாம்.
நண்பர்களே இது ஒரு கருத்தைப் பதியும் களம். இதில் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பதியலாம். ஆனால் யாரது மனதையும் பாதிக்காத படி பார்த்துக் கொள்வது நமது கடமை. இது ஒரு ஆரோக்கிரமான அறிவுபூர்வமான அமைய வேண்டும் என்பதே எனது அவா. நன்றி.
-
gals guruji
cz to boys it may b a chapter
but to gals its the entire book
-
காதல்ல உறுதியா இல்லைன்னா தான் காதல் தோல்வி, அது அந்த இருவருக்குமே பொறுந்தும். ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அந்த பெண் வேறு ஒருத்தரை திருமணம் செய்து கொண்டு அவரும் அவளை ஏற்றுக்கொண்டு சந்தோஷமா வாழனும்னு நினைச்சாலும் இந்த சமுதாயம் அவளோட காதலை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்…!
வாழ்க்கை கிண்ணத்தில் இருக்கும் பனிக்குழ் போன்றது, அதை ரசித்து ருசிக்க வேண்டுமே தவிற அதை உருக்க விட்டு விட கூடாது.
-
மாறன் நீங்கள் சொல்வதை நானும் அமோதிக்கிறேன். காதல் தோல்வி இன்று இரண்டு பக்கமும் சரி சமமாக நடக்கிறது, இதில் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் இந்த காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அவர்கள் தான் உடலாலும் உள்ளத்தாலும், சமூகத்தாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
சிலர் கேட்கிறார்கள் ஏன் பெண்கள் ஆண்களுக்கு இடம் கொடுக்கிறார்கள் என, பெண்கள் எதையும் இலகுவில் நம்பக் கூடியவர்கள். அத்துடன் உடலாலும் மனதாலும் மென்மையானவர்கள். ஆண்கள் வன்மையானவர்கள். வன்மைக்கு முன்னே மென்மை அடங்கிப் போவது இயல்பு தானே.
-
வாழ்க்கை என்றால் என்ன? என்பதை உணரும் முன்னரே, வாழ்க்கைக்கான துணையை தேர்ந்தெடுத்திருந்தால், அது எப்படி சரியானதாக அமைய முடியும்?
பல இளைஞர்கள் காதல் என்கிற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு “சினிமா” பெரும் பங்கு வகிக்கிறது.
பாலினக் கவர்ச்சி இல்லாத காதல் என்பதெல்லாம் வெறும் மாயை. பாலினக்கவர்ச்சியும் கலந்த மனங்களும் இணைந்த உறவே நல்ல காதல். பலர் வெறும் பாலினக் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி பின்னர் ஏமாறுகிறார்கள் அல்லது ஏமாற்றுகிறார்கள். அதற்குக் காரணம் பாலியல் கல்வி இன்னும் நம் கல்விக் கூடங்க்ளில் எட்டிப்பார்க்காததும், சமுதாயத்தில் அதைப் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடல்கள் இல்லாததும்தான். அவற்றைத் தொடங்குவோம்.
காதலைப்பற்றி வைரமுத்துவின் வரிகள்;
அன்புமட்டுமே காதல் என்றால் அதை நீரூபிக்க ஒரு நாய்குட்டிபோதும்
பாலுணர்வு மட்டுமே காதல் என்றால் அதை நீரூபிக்க ஒரு விலைமகள் போதும்
காதல் என்பது இரண்டும் பின்னி ஜடை போட்டுக்கொள்ளும் சம்பவம்
பாலூணர்வும் அன்பும் சந்தித்து கொள்ளும் புள்ளியே காதல்
-
Kadhaal thozhiyaal adhigama paathikka paduvathu avanga kuda irukka frnds and avanga family dhaan ivanga love pannitu adhu ok aagala ku kadaisiya ivanga pora mudivaa mathurathuku avanga padura kastam irukee apppaaaaa
-
kathal??? apadina inna??? epo paru kathal kathal ne :| kadupetatinga ..neingala love panuvinga neingala miss panuvinga aprom KATHAL mela blame poduirnga ..neingalam nalal varuvinga :| ...naanum than love panen 2-3 yearsa ana eniya yarum kathal panale coz naan kathal mattum than kathal senjen ^_^ ..puriyale thaney ..enakum than nga puriyale :( ...seri ithuku mela pesina eniya tovachi pilinjiruvinga ..naa poren (alea sis ..love u sista u my jujubi sista ..pls tapap irunta manichirunga)
-
kaathal tholvi aanuku mattume periya ilappu,.. pennuku kaalam marundagividum,..aanuku kaalame gnabagathai thoondum..oru varudathil oru kaneer thuliyavathu sindhamal iruka mudiyathu
-
:) இருவருக்குமே பாதிப்பு அதிகம் !!!
காதலினால் ஏற்படும்
வலி அனைவருக்குமே சமம்மானது !!!!