எதற்கு இந்த தீபாவளி
எங்கே இறந்தான் நரகாசூரன்
சாகவில்லை நரகாசூரர்கள்...
பெண் கொடுத்தால் போதும்
என்று அவன் அவசரத்துக்கு திருமணம்
முடித்து பிறகு அவன் வசதிக்காக பொன் பொருள்
கேட்டு பெண்ணை சித்திரவதை செய்யும்
இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள்..
பள்ளி படிப்பு என்பதே விளங்காது
பள்ளிகே பயந்து செல்லும்
குழந்தைகளிடம் வக்கிரத்தை
நடத்தி பிஞ்சிகளின்
வாழ்க்கையில்நஞ்சை தெளிக்கும்
இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள் ...
பெண்கள் துணிந்து வந்து சாதிக்க
துடிக்கும் போதுஅவளை சகதியில்
தள்ளி எள்ளி நகையாடும் அந்த
இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள் ...
பெற்ற மகள் என்று தெரிந்தும்
காதலித்தது ஒரு குற்றம் என்று
ஜாதி மதம் காரணம் காட்டி
கௌரவகொலை செய்யும்
இடத்தில வாழ்கிறார்கள் நரகாசூரர்கள் ...
பெண்ணை ஆணின் தேவைக்காக
படைக்க பட்ட ஒரு பொருளாய் பார்க்காமல்
பெண்ணை பெண்ணாக நடத்தாத வரை
பெண்ணியம் பேனாதவரை
இப்படி பட்ட நரகாசூரர்கள் அழியாதவரை
தீபாவளி ஒரு தெண்ட செலவு தான் ...