FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on September 25, 2014, 07:39:22 PM

Title: ~ முத்தான சிந்தனைகள்... ~
Post by: MysteRy on September 25, 2014, 07:39:22 PM
முத்தான சிந்தனைகள்...

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/q82/p526x296/10698574_682603291837133_6605549193670863933_n.jpg?oh=80b41c5a1da81b50c86856ee245c3eff&oe=54C6AECE&__gda__=1418116552_c0fc0dc537fc1b58360a667b94e9f230)


01. உண்மையிலேயே சந்தோஷமானவன் எப்போதும் போராடும் நம்பிக்கையிலேயே இருக்கிறான். பெறுவதிலோ வைத்திருப்பதிலோ அல்ல தருவதில்தான் சந்தோஷம் இருக்கிறது.

02. சந்தோஷம் என்பது நறுமணத் திரவியம் போன்றது. உங்கள் மீது சில துளிகளாவது படாமல் உங்களால் அடுத்தவர் மீது அதைத் தெளிக்க முடியாது.

03. தனக்குத்தானே திருப்தியடையாத ஒருவனால் உண்மையாகவே சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலும் உங்களுக்கு தர முடியாது, அதை உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டும்.

04. ஒரு மனிதனுக்கு என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

05. பணத்தையோ, வெற்றியையோ பேராசையுடன் தேடாதீர்கள் அப்படிச் செய்தால் துன்பமே ஏற்படும். ஏனென்றால் இவை இரண்டும் உங்களுக்கு வெளியே இருக்கின்றவை.

06. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே சந்தோஷமான மனிதனாகும்.

07. சந்தோத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்தில் இருந்துதான் உதயமாகின்றன.

08. எல்லோரும் சந்தோமாக இருங்கள் நீங்கள் நினைப்பதைப்போல காலம் இன்னமும் அதிகமாக இருக்காமல் போகலாம்.