FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 10, 2011, 04:40:54 AM
-
புகழ்
அந்தரத்தில் தொங்கும் கயிற்றேணி;
மேலேறிய பின்
வானத்திலுள்ள நட்சத்திரங்களின்
நுனியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு
பொன் கயிற்றின் தோற்றம்
கீழே தெரிவதெல்லாம்
அதல பாதாளம்
கயிற்றிலே தொங்கி கொண்டிருக்கவும்
இயலாமல், கீழே வரவும் விரும்பாமல்
முடிந்தவரை தொங்கி கொண்டே இருப்போமே
என்று நினைக்கும்போது
இத்தனை நேரம் தொங்கியது
மாய கயிற்று ஏணி தானா
மனம் கிடந்தது தவிக்கும்
இல்லை இல்லை நான் பிடித்திருந்தது
நிச்சயம் பொன் கயிறு தான்
அது கனவே இல்லை என
நம்பவைக்கும் மாய கயிற்றேணி.
-
puagal maaya kayiru than