FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 09, 2011, 04:03:58 AM

Title: நிலவில்......
Post by: Global Angel on December 09, 2011, 04:03:58 AM
நிலவில்......  
[ முழுக்க முழுக்க கற்ப்பனையே ]

அழகிய நிலவும்
அருகே பூத்து
குலுங்கும்
மல்லிகை பந்தலும்
மோகம் கொண்ட
நீயும்
உன்மார்பின் மீது
நானும்.....

உன் அகன்ற
கருத்த கண்களில்
காமத்தின் உச்சம்
சிவந்த அழகிய
இதழ்களில் கொட்டி
கிடக்கும் கவர்ச்சி
எடுப்பான நாசி
காண்போரை கவரும்
உன் தோற்றம்

மந்த மாருதம்
தழுவி சூடேறிய
நம் மூச்சுக்
காற்றை
குளிர செய்து
தோற்றுப் போனது

உன் இறுக்கம்
தளராமல்
நான் சொக்கி
கிடக்க

வானில் நிலவை
மேகங்கள் சூழ
காற்றும் குளிர்ந்து
வீச லேசாக
மழை துளிகள்
நம் மீது
தெளிக்க

உன் அணைப்பிலிருந்து
விலக முடியாமல்
நாழிகை செல்வதை
மறந்தேன் ....

இப்படியே வாழ்ந்து
ஆயுட் காலம்
தீர்ந்து விடாதா
பேராசை எனக்கு

இறுகிய உனது
கைகள் உடல்
முழுதும் தழுவ......
ம்ம் .....

உன் கைகளில்
எனது மேனி
முழுதும்
வீணையானது

என்னை
கட்டித் தழுவியது
உன் கரங்கள்
உன் இதழோடு
இதழ் இணைத்தாய்

என் இடையை
கொடிபோல
வளைத்து
என்னுள் நீயும்
உன்னுள் நானும்....
சொர்க்கம்
இது தானோ....

உன் காம
பிடியில்
என்னை மறக்கச்
செய்தாய்
உலகை மறக்கச்
செய்தாய்

காணாத சொர்க்கம்
கண்டேன்
நீ என்னருகில்
இருந்த போது

இன்றும் அதே
நிலவு வானில்
மல்லிகையின் மணம்
இனிய மந்த
மாருதம்
என் அருகினில்
நீ இல்லை

நாம் வாழ்ந்த
நினைவுகள் நெஞ்சில்
நினைவுகளில் மட்டும்
நீயும் நானும்.......
Title: Re: நிலவில்......
Post by: RemO on December 11, 2011, 07:28:31 PM
// [ முழுக்க முழுக்க கற்ப்பனையே ]//

karpanaiyil vantha kalvan yaaro :D:D