தாழம்பூ மணப்பாகு - மருத்துவ பயன்பாடு:-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/p526x296/10614319_781745785181072_2029055955655121270_n.jpg)
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதுவே தாழம்பு மணப்பாகு. இதனை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
இப்படி செய்தால் பித்த நோய்களும் தீரும். அதிகளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்.
தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
இதேப் போன்ற மணப்பாகை தாழம்பூ வேரினைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொண்டு உட்கொண்டு வர சொறி, சிரங்கு, தினவு, தோல் நோய்கள் குணமாகும்.