பப்பாளிப்பழ மருத்துவம் :-(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10351461_769550186400632_6803532518704367173_n.jpg)
பப்பாளி ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அஜீரணம் நீங்கும். பப்பாளி பால் புரதத்தையே செரிக்கும் ஆற்றல் உடையது. கடைகளில் விற்கும் செரிமான மாத்திரைகள் இப்பாலிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். பப்பாளியை இரவு சாப்பிட்டுப் படுத்தால் மலச்சிக்கல் நீங்கும். சில துண்டு பப்பாளிப் பழத்தில் ஒரு நாள் தேவையைவிட இரண்டு மடங்கு வைட்டமின் சி இருக்கிறது. விட்டமின் ஏ யும் இருக்கிறது. கல்லீரல் வீக்கம் நீங்கும். நீரழிவு நோய் வந்தால் பப்பாளியையும், நாவற்பழத்தையும் காலை ஒன்றும் மாலை ஒன்றுமாகச் சில நாட்கள் உண்டால் நீரழிவு நோய் குணமாகும். நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி ஆகியவை பப்பாளியினால் நன்கு குணமாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் இதனை உண்டால் தடையின்றி பால் சுரக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பப்பாளியை உண்டால் கர்ப்பம் கலையும் அபாயம் உண்டு.