FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 12:44:17 AM
-
நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக
யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே
நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக
நீ கொடுத்த
பூச்செடிதான்
என்னை
மலரவைத்துக்
கொண்டிருக்கிறது
எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்
உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது
முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்
நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்
உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்
என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்.....
piditha kavithai :'( :'(
-
nice one