குருப் பெயர்ச்சி பொதுபலன் (13.6.2014 முதல் 04.07.2015)
நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி வெள்ளிக் கிழமை (13.6.2014) கிருஷ்ணபட்சத்து, பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூலம் நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த அமிர்தயோகத்தில் பஞ்ச பட்சியில் கோழி பலவீனமாக உள்ள நேரத்தில் உத்ராயணப் புண்ணிய காலம் வசந்த ருதுவில் வியாழன் எனும் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகம் ராசிக்கு மாலை மணி 6.04க்கு பெயர்ச்சி ஆகிறார். 13.6.2014 முதல் 04.07.2015 வரை இங்கமர்ந்து தன் அதிகாரத்தை செலுத்துவார். பனிரெண்டாண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் போல் பனிரெண்டாண்டுகளுக்குப் பிறகு தன் உச்ச வீட்டில் குரு அமர்கிறார்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmedia.webdunia.com%2F_media%2Fta%2Fimg%2Farticle%2F2014-06%2F13%2Ffull%2F1402645494-7147.jpg&hash=13c2823d660cb48de7d648c4bc4a8d2a3adf8625)
தனக்காரகனான குருபகவான் உச்சமடைவதால் உலககெங்கும் நிலவும் பணத்தட்டுப்பாடு நீங்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் குரு தன் பகைக் கோளான புதனின் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்திலேயே ஏறக்குறைய பத்து மாதங்கள் பயணிக்க இருப்பதால் நாடாளுபவர்கள் பணத்தட்டுப்பாடு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கு தொலை நோக்குச் சிந்தனையுடன் தீர்வு காண முடியாமல் திணறுவார்கள்.
அரசு கஜானாக்கள் நிரம்புவதற்கு பதிலாக அதிக அளவு துண்டு விழும் பட்ஜெட்டுகளை நாடாளுபவர்கள் தாக்கல் செய்வார்கள். மக்களிடையே ஆண் குழந்தை மோகம் மீண்டும் அதிகரிக்கும். வங்கிகளில் வசூலாகாதக் கடன்கள் கடந்தாண்டை விட இந்தாண்டு ஓரளவு வசூலாகும். கலப்புத் திருமணம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பரஸ்பரம் தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் வாரிசுகளை காப்பாற்றிக் கொள்ளவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இறங்கிப் போவார்கள். கடந்த மூன்றாண்டு காலமாக பரவலாக பல மாவட்டங்களில் நிலவிய கடுமையான வறட்சி நீங்கும். மழையளவு உயரும். உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும். காடு, மலை செழிக்கும். பாரம்பரிய கல்வி முறைகள் மீண்டும் உயிர் பெறும்.
செல்வம், நிதி, தனம், தங்கம், ராஜூ இவற்றை தங்களின் பெயர்களில் உடையவர்கள் பண விஷயத்திலும், குடும்ப விஷயத்திலும் பிரச்னைகள் வராமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த ஓராண்டு காலத்திற்கு மூன்றாம் எண் அனைத்து வகையிலும் ஆதிக்கம் செலுத்தும். சந்திரனின் பெயர் உடையவர்கள் புகழடைவார்கள். 2-ம் எண்ணின் ஆதிக்கமும் அதிகரிக்கும். கோவில் சொத்துக்களை பராமரிக்க புது சட்டம் வரும். தமிழ் மொழிக்கு கூடுதல் அந்தஸ்து கிடைக்கும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmedia.webdunia.com%2F_media%2Fta%2Fimg%2Fhp%2Freligion%2F2014-03%2F26%2Ffull%2F1395833143-4998.jpg&hash=ce607beb9bf7e49581f94f187fcad18077ab34b8)
குரு விருச்சிக ராசியைப் பார்ப்பதால் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மருந்து விலைக் குறையும். உளவாளிகள் பிடிப்படுவார்கள். ராணுவத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும். ராணுவ ஊழல்கள் பெரியளவில் பிடிபடும். தரம் வாய்ந்த தளவாடங்கள் வாங்கப்படும். அதிநவீன மற்றும் அதிதூரம் சென்று இலக்கை தாக்கக்கூடிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும். செவ்வாய் கிரகம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் இந்திய விஞ்ஞானிகளால் கண்டறியப்படும்.
அதிவேகமாகப் பரவி வரும் புற்று நோய்க்கு புதிய மருந்துகள் உருவாக்கப்படும். பிரிந்த கூட்டுக்குடும்பங்கள் ஒன்று சேரும். குறுகிய மனப்பான்மையிலிருந்து பரந்த மனப்பான்மைக்கு மக்கள் திரும்புவார்கள். கோதாவரி, காவேரி படுகைகள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். நாடெங்கும் நிலவும் மின் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு புதுத் திட்டம் கொண்டு வரும். காவல் துறையினருக்கு சலுகைகள் கூடும்.
குரு மகர ராசியைப் பார்ப்பதால் தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டிற்குள் வரும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க அரசு முயலும். நதிகளை இணைப்பதற்கு முதல்கட்ட முயற்சி வெற்றியடையும். தொழிலதிபர்கள் செழிப்பார்கள். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான வகையில் நிகழும் பணப்பரிமாற்றங்கள், பட்டுவாடாக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும். சிறு தொழில்கள் நவீனமாகும். ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிக்கும். அண்டை நாடுகளுடன் மோதல்கள் வரும். மான் இனம் பெருகும். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த புதுத் திட்டங்கள் அமலாகும். விழுந்த கணிணித் துறை எழும். புதுத் தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். நகரங்களை விட புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சியடையும். புதிய மாதிரி நகரங்கள் உருவாகும். புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விலை உயரும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmedia.webdunia.com%2F_media%2Fta%2Fimg%2Fhp%2Freligion%2F2014-03%2F26%2Ffull%2F1395833243-4191.jpg&hash=091abb6390bb0a3f83d42f7178acd68ad64f656c)
குரு மீன ராசியைப் பார்ப்பதால் கல்வித் துறை நவீனமாகும். தேர்வு முறை மாற்றப்படும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். ஆன்மிகம் தழைக்கும். சித்தா, ஆயுர்வேதம், ஜோதிடம், தியானம், வர்மம் உள்ளிட்ட புராதன கலைகளும் வளரும். நீர்வழி மின் உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க புது சட்டம் வரும். பதிப்புத் துறை வளர்ச்சியடையும். புத்தகம் படிப்போர் எண்ணிக்கை கூடும். கேட்டரிங், சட்டம், சி.ஏ., சிவில், ஆர்க்கிடெக்ட் துறைகள் வளர்ச்சியடையும். வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் வரையறுக்கப்படும்.
இந்த குரு மாற்றத்தை நட்சத்திர வாரியாக அலசி ஆராய்ந்துப் பார்க்கும் போது,
மேஷ ராசி-அசுவணி நட்சத்திரம்
ரிஷப ராசி-ரோகிணி நட்சத்திரம்
மிதுன ராசி-திருவாதிரை நட்சத்திரம்
கடக ராசி-பூசம் நட்சத்திரம்
சிம்ம ராசி-மகம், பூரம் நட்சத்திரம்
கன்னி ராசி-அஸ்தம் நட்சத்திரம்
துலாம் ராசி-சுவாதி நட்சத்திரம்
விருச்சிக ராசி-அனுஷம் நட்சத்திரம்
தனுசு ராசி-மூலம் நட்சத்திரம்
மகர ராசி-திருவோணம் நட்சத்திரம்
கும்ப ராசி-சதயம் நட்சத்திரம்
மீனம் ராசி-உத்திரட்டாதி நட்சத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர பயணங்கள்
13.6.2014-28.6.2014 வரை புனர்பூசம் 4-ல்
29.6.2014-13.07.2014 வரை பூசம் 1-ல்
14.07.2014-28.07.2014 வரை பூசம் 2-ல்
29.07.2014-11.08.2014 வரை பூசம் 3-ல்
12.08.2014-27.08.2014 வரை பூசம் 4-ல்
28.08.2014-13.09.2014 வரை ஆயில்யம் 1-ல்
14.09.2014-02.10.2014 வரை ஆயில்யம் 2-ல்
03.10.2014-23.10.2014 வரை ஆயில்யம் 3-ல்
24.10.2014-02.12.2014 வரை ஆயில்யம் 4-ல்
03.12.2014-21.12.2014 வரை மகம் 1-ல்
17.12.2014-21.12.2014 வரை மகம் 1-ல் வக்ர நிலை
22.12.2014-31.01.2015 வரை ஆயில்யம் 4-ல் வக்ர நிலை
01.02.2015-24.02.2015 வரை ஆயில்யம் 3-ல் வக்ர நிலை
25.02.2015-16.04.2015 வரை ஆயில்யம் 2-ல் வக்ர நிலை
17.04.2015-22.05.2015 வரை ஆயில்யம் 2-ல் இயல்பு நிலை
23.05.2015-15.06.2015 வரை ஆயில்யம் 3-ல் இயல்பு நிலை
16.06.2015-04.07.2015 வரை ஆயில்யம் 4-ல் இயல்பு நிலை
குரு மேற்கே அஸ்தமனக் காலம்
5.07.2014 முதல் 3.8.2014 வரை
4.08.2014 முதல் கிழக்கே உதயம்.
பரிகாரம்
பக்தி, பணம், பதவி, குழந்தை பாக்யம், கௌரவம், பட்டறிவுடன் படிப்பறிவு, வேத, இதிகாச ஞானம், நேர்மை மற்றும் தூய்மை இவற்றிற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கும் பிரகஸ்பதி எனும் குருபகவான் நீர் நிலை, மனம், தாய் மற்றும் தாய்மொழிக்குரிய கிரகமான சந்திரனின் வீட்டில் அமர்வதால் சொல்லாலும், செயலாலும் பிறர் மனம் புண்படாதபடி நடந்துக் கொள்ளுங்கள். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள். குருபகவானின் அருள் பூரணமாய் கிட்டும்.