FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 10, 2014, 02:21:17 PM

Title: ~ சளி இருமல் ஆஸ்துமா குணமாக ~
Post by: MysteRy on May 10, 2014, 02:21:17 PM
சளி இருமல் ஆஸ்துமா குணமாக

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-6g_eZ0Phk3I%2FUj3VyvKCXWI%2FAAAAAAAAAI0%2FuLRl3Qo4Ut4%2Fs1600%2Fsitha%2Bmaruthuvam.jpg&hash=9fcd197b8479f9d475c26c0b82aec4364db1c3e9)


கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.

எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்

கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்

கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்

கபம் குணமாக:- கருந்துளசி இல்லை சாறு பிழிந்து இரண்டு வேலை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும்
கபம் நீங்க:- சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும்.

கபம் வெளியாக: சிறுகுறிஞ்சா வேர் போடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்

சகல பிணி, சகோரமும் தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.

ஜலதோஷம் நீங்க:- துளசி ரசம், இஞ்சி ரசம் பருகலாம்.
ஆஸ்துமா தீர:- நொச்சி இல்லை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்

சளி தீர:- நத்தை சூரி இலை சாறை 15 மி.லி காலை மாலை சாப்பிடலாம்

சளியை அகற்ற:- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்

மார்பு சளியை நீங்க:- பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை துவையல் சுடுசோறு நெய்யில் உண்ணலாம்.

சளி சுரம் நீங்க:- முசுமுசுக்கு இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.

இருமல் நிற்க:- ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்

காசம் :- ஆடாதொடா இலை கஷாயம் செய்து தேன் கலந்து பருகலாம்

இளைப்பு, இருமல், குமமாக:- விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

காசம் இறைப்பு நீங்க:- கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.