FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on May 02, 2014, 11:03:28 AM

Title: ~ தலை முடி வளர..! ~
Post by: MysteRy on May 02, 2014, 11:03:28 AM
தலை முடி வளர..!

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1461718_293717390786316_4912993362881194021_n.jpg)


அறிகுறிகள்:

முடி உதிர்தல்.

தேவையான பொருட்கள்:

சோற்றுக்கற்றாழை.
படிகாரம்
நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.  -