FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 24, 2014, 07:37:12 PM

Title: ~ பித்தம் நீங்க பாட்டி வைத்தியம்:- ~
Post by: MysteRy on April 24, 2014, 07:37:12 PM
பித்தம் நீங்க பாட்டி வைத்தியம்:-

(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-prn2/t1.0-9/10154107_720416714647313_8611181554141880069_n.jpg)


முளைக்கீரைச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், இரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.

சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் அனைத்து விதமான பித்த நோய்களும் குணமாகும்.

பசலைக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றல், சோம்பு இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். பித்தம் தணியும்.

அகத்திக்கீரை சாற்றில் சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும். இதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.

கொத்தமல்லியுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.

பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்த மயக்கம், உடல் எரிச்சல் போன்றவை விலகும்.

கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு விட்டு அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தம், பித்த மயக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.

துத்திக் கீரையை சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், பித்த மயக்கம், வாந்தி போன்றவை குணமாகும்.

முசுமுசுக்கைக் கீரையுடன் ஒரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் தணியும்.

ஆரைக் கீரைச் சாறில் இஞ்சியை (ஒரு துண்டு) சேர்த்து அரைத்துக் குடித்தால் பித்த நோய்கள் விலகும்.

புளியாரைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

பாலக் கீரை சாறு எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தை (பாதி அளவு) பிழிந்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான நோய்கள் விலகும்.

முக்குளிக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றலை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவு சாப்பிட்டால் பித்த நோய்கள் தீரும்.