அதிமதுர வேர்ப் பொடி-அம்மை நம்மை அணுகாது!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-iGhIw0zO_gk%2FU1i2WjlntRI%2FAAAAAAAAOYA%2F-aA-bnb6Dus%2Fs1600%2F5555.JPG&hash=ab41eb656dc474186e45906d6a5e4d911ea842cc) (http://www.friendstamilchat.com)
இனிப்புச் சுவையுடன் இருக்கும் அதிமதுர வேர், இந்தியாவில் மட்டுமல்ல சீனா, ஜப்பானிலும் வெகு பிரபலம். இனிப்பாக இருந்தாலும் சர்க்கரைச் சத்து இதில் கிடையாது. டயாபடீஸ் நோயாளிகளும் பரவசமாகச் சாப்பிடலாம். வீட்டில் ஒருவருக்கு அம்மை தொற்றிக்கொண்டால், அடுத்தவர் தம்மைக் காத்துக்கொள்ள இந்த வேர்ப் பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு காலையும் மாலையும் சாப்பிடலாம். சாதாரணமான தொண்டைப்புண், வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகப் பயன்படும் இந்தப் பொடி, உடலின் அதிகச் சூட்டைக் குறைத்து, பித்தம் தணித்து, நோய் எதிர்ப்பு கொடுத்து அம்மையைத் தவிர்க்க உதவும்.