FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 27, 2011, 04:26:04 AM

Title: கட்டுக்கடங்கா மனக்குதிரை
Post by: Global Angel on November 27, 2011, 04:26:04 AM
கட்டுக்கடங்கா மனக்குதிரை  
மனக்குதிரை ஒரு மார்கண்டேயன்
எத்தனை ஆண்டு கடந்தாலும்
அதன் ஓட்டத்திலும் ஏற்றத்திலும்
மாற்றம் என்பதே இல்லை

கட்டுக்கடங்கா மனக்குதிரை
ஒரு காட்டுக்குதிரை அதன்
மீதேறி பயணம் சென்றால்
புரட்டித்தள்ளி கீழே வீழ்த்தி
எல்லுடைத்து நோய்வருத்தும்

பண்பறியா முரட்டுக் குதிரை
கடிவாளம் அதன் மூக்கிலிட்டு
காலில் இரும்படித்து பட்டினியாய்
காவலில் போட்டுவைத்தேன்

நாள்தோறும் என்வயப்பட
முயன்றும் வந்தேன்
பசியின் கொடுமை தாங்கா
குதிரை என்வசம் படியலாயிற்று

கொள்ளும் நீரும் பசும்புல்லும்
அள்ளிக் கொடுத்தே உறவை
வளர்த்தேன் மீண்டும் அதன்
மீதேறி வெள்ளோட்டம் போனேன்

குதிரையின் கடிவாளம் என்கையில்
சற்றும் தளராமல் விரட்டிச்சென்றேன்
குதிரை மீண்டும் முருகேறிப்போனது
வழிதடம் மாற்றி என்னை
புரட்டித்தள்ளி காயப்படுத்தித்
தன்னை தேற்றிகொண்டது

இன்றுனக்கு புல்லும் நீரும்
கிடையாதென்றேன் ஏளனமாய்
என்னை பார்த்துக் கனைத்தது குதிரை
இரண்டு நாள் புல்லும் நீரும்
அதன் கண்ணில் காட்டவில்லை

மூன்றாம் நாள் நீரும் புல்லும்
எடுத்துச் சென்றேன் குதிரை
என்னைபார்த்து மீண்டும் கனைத்தது
அதன் அர்த்தம் எனக்கு
அப்போது புரியவில்லை ஆனாலும்
குதிரை நீரும் புல்லும்
தொடவேயில்லை அதன்
மருத்துவரை அழைத்துவந்தேன்

இரண்டுநாளாய் குதிரை தீனி
தின்னவேயில்லை என்றேன்
மருத்துவரும் குதிரையை
சோதித்தார் பின்னர் குதிரைக்குத்
தேவை தீனியல்ல தோழிஎன்றார்

தோழிக்கு நான் எங்கு
போவேன் என்றேன் மருத்துவரோ
இல்லையென்றால் ஒரு ஊசி
போதும் என்றார் போடுங்கள்
ஊசிஎன்றேன் மாதம் ஒரு
ஊசிவீதம் சில மாதம்
போடச்சொன்னார்

சில மாதம் ஊசிப்போட்டேன்
குதிரைக்கு 'தோழி' ஆசை
விட்டொழிந்து போனது

எந்தோழன் ஒரு நாள் வந்து
குதிரைமீதேறி பார்க்க
குதிரையும் ஏற்றிக்கொள்ள
வேகமாய் சீறிப்பாய்ந்த குதிரை
மீதிருந்து வீழ்ந்தான் தோழன்

குதிரையின் முன்னங்கால்
தோழனின் படாத இடத்தில்
பட்டு வலியால் அவன்
துடித்துப்போனான்
பழிக்குப்பழி வாங்கி குதிரை
பாங்காய் ஓடித்திரிந்தது
 

padithathil pidithathu  ;)