FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 27, 2011, 04:24:40 AM

Title: எனது ஹைக்கூ
Post by: Global Angel on November 27, 2011, 04:24:40 AM
எனது ஹைக்கூ  


கடற்கரையோர பாறைகளை
நகரச்சொல்லி அலைகள்
ஓயாமல் அடித்துகொண்டிருக்கிறது.

கடல் நீரில்
நீதிக்கொண்டிருப்பவனுக்கு
தாகம்.

முத்துக்குளிப்பவனுக்கு
தேவையில்லை
சவுக்காரம்.

பிரிந்து செல்லும்
பாதைகள்
ஒன்று சேர்வதேயில்லை.

ஒற்றையடிப் பாதையில்
கூட்டம் கூட்டமாய்
பாதசாரிகள்.

பழுது பார்க்கும் நிறுவனத்தில்
பழுதில்லா
உபகரணங்கள்.

பாதையோர
மையில்கல்
கடந்த தூரம் காட்டாது.

ஒரே பாறையில்
வெட்டிய இருகல்
ஒன்று வீட்டின் படிக்கல்
மற்றது கோவில் சிலைகல்.

காதுள்ளதெல்லாம்
இசை
கேட்பதில்லை.

நாக்குள்ளதெல்லாம்
சுவை
அறிவதில்லை.

பல்லுள்ளதெல்லாம்
கடிப்பது
இல்லை.


padithathil pidithathu  ;)
Title: Re: எனது ஹைக்கூ
Post by: RemO on November 27, 2011, 03:01:37 PM
ஹைக்கூ-அருமை