FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 27, 2011, 04:19:23 AM

Title: முட்டாள்கள் தினம்
Post by: Global Angel on November 27, 2011, 04:19:23 AM
முட்டாள்கள் தினம்  

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முட்டாள்கள் தினம், ஏனைய பல புதிய 'தின' வரவுகளில் மிகவும் பழமை வாய்ந்தது இந்த முட்டாள்கள் தினம். இதற்க்கு காரணம் என்ன, நாம் முட்டாள்களை கண்டு ஆனந்தம் அடைவதாலேயா அல்லது மற்றவர்களை முட்டாள்களாக்கி பார்க்க நமக்குள் இருக்கும் மிருகம் நம்மை தூண்டுவதாலேயா. முட்டாள்கள் தினம் எனக்கு கருத்து தெரிந்த வயதிலிருந்தே மிகவும் பிரசித்தமடைந்திருந்தது, முட்டாள்கள் தினம் என்றொரு தினம் தனியாக நமக்கு தேவை இருப்பதில்லை, தற்போதெல்லாம் பலவகைகளில் மக்களை முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கும் கூட்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருகி வருகிறது. இதன் வளர்ச்சியும் நவீனமடைந்து வருவது இதன் சிறப்பு.

அரசியல்வாதிகள் ஒருபுறம் மக்களை முட்டாள்களாக்கி வருகின்றனர், ஒரு புறம் கல்வி என்ற பெயரில் மாணவர் சேர்க்கை மூலம் பணத்தை கொள்ளையடித்து முட்டாளாக்கும் கூட்டம், காலாவதியான மருந்துகளை நாடு முழுவதும் விற்பனை செய்து முட்டாளாக்கிய கூட்டம், திரைப்படங்களில் பல பாவனைகளை செய்து 'பன்ச்' டைலாக் பேசி முட்டாள்களாக்கும் கூட்டம், வறுமையை பல விதத்தில் பயன்படுத்தி மக்களை மோசம்போக்கி முட்டாள்களாக்கும் கூட்டம். சாமியார் வேடமிட்டு மக்களை முட்டாள்களாக்கும் கும்பல், சீட்டு கம்பனிகள் மூலம் முட்டாளாக்கும் கும்பல், இரவு பகல் பாராமல் கொள்ளை கொலை என்று கும்மாளமடிக்கும் திருட்டு கும்பல், எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி, வாங்கும் சம்பளத்திற்கு உழைக்காத கும்பல், இப்படி தினம் தினம் ஏதோ ஒரு வகையில் மக்கள் முட்டாள்களாகி ஏமாந்து கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்றாகி போனது.

இதில் ஒரு சொற்றொடர் 'ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்'. நமது நாட்டில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில் நாடகம் திரைப்படம் என்று இருந்த மக்கள் கூட்டம் இன்று சின்னத்திரையில் வரும் தொடர்களில் ஒன்றி போவதே வாழ்க்கையின் மிக முக்கிய நிகழ்வு என்று வாழ்ந்து வருவதால் அன்றாட செய்திகள் ஒளிபரப்பாகும் சமயங்களில் சமயலறையில் மீதமிருக்கும் வேலைகளை மும்முரமாக கவனிக்கச் சென்றுவிடும் புத்திசாலிகள் நிறைந்திருக்கும் நமது ஊரில் தகவல்களை அறிந்து கொள்ளவதில் ஆர்வமில்லாத மக்கள், தகவல் என்றாலே வீட்டு வேலைக்காரி கொண்டுவரும் அடுத்த வீட்டு விவகாரம் என்ற அளவில் தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தி கொண்டு இருக்கும் பெண்களுக்கு கொளையடிப்பவன், கொலைகாரன், சீட்டு கம்பெனிகாரன், மோசடி சாமியார், காலாவதியான மருந்து வியாபாரி, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் அபகரித்த மோசடி, இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எப்படி முடியும்?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பதும் எது நடக்ககூடாது என்பதற்கும் தன் முழு கவனத்தை செலுத்தும் முட்டாள்களின் ஒட்டு மொத்த ஏமாற்றமும் போலி சாமியார்களிடமும், சீட்டு கம்பனிகளில் பணத்தை அதிக வட்டிக்கும் குறைவான விலையில் மனை வாங்குவதற்கும் செலுத்திவிட்டு ஏமாந்து போலீசாரிடமும் மற்றவர்களிடமும் முறையிட்டுக் கொண்டிருப்பதில் என்ன லாபம்? நம் நாட்டில் முட்டாள்கள் இல்லையென்றால் சின்னத்திரையில் இத்தனை வெற்றிவிழாக்களை தொடர்கதைகள் கண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே.

நம் ஊரில் முட்டாள்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அறிந்துதானோ என்னவோ முட்டாள்கள் தினம் மற்ற எல்லாவகையான தினங்களைவிட மிகவும் பழமையானதும் பாரம்பரியம் உடையதுமாக கருதப்படுகிறது. காதல் முட்டாள்கள் இணையதள முட்டாள்கள் என்று முட்டாள்களின் வட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருப்பது இதன் வளர்ச்சியை காட்டுவதாவே உள்ளது.
 
Title: Re: முட்டாள்கள் தினம்
Post by: RemO on November 27, 2011, 04:56:38 PM
உண்மை தான் ஏஞ்செல்
தினம் தினம் அனைவரும் முட்டாள்களாக தான் இருக்கிறோம் , அப்படி இருக்கையில் தனியாக முட்டாள்கள் தினம் தேவையா என இனி சிந்திக்கவேண்டும்