FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 26, 2011, 03:47:38 AM
-
மாதத்தின் 32-ஆவது நாள்
பள்ளிக்கூடத்துக்கு போன பையன்
திரும்பிடுவானா? - இல்லை
பழம் பொறுக்கினான்னு
சுட்டுடுவாங்களா? - அம்மா
எம்புள்ளைய எப்புடியாவது
ஒரு லட்சம் செலவு பண்ணி
எல்கேஜி சேத்துடணும் - அப்பா
இருக்கிற பணத்துல இன்னும்
ஒரு வாரத்த ஓட்டணும் - பேச்சுலர்
எப்புடியாவது அந்த பஸ்ஸ்டாண்ட்
பொண்ண நாளைக்கு மடக்கிடனும்- ரோமியோ
இந்த ஆடித்தள்ளுபடில நாலு
புடவை எடுக்கணும் -பெண்கள்
இந்த பெட்ரோல், டீசலுக்கு எல்லாம்
தள்ளுபடி இல்லையா? - ஆண்கள்
இந்த டிகிரி படிச்சதுக்கு பேசாம
_______ மேச்சுருக்கலாம் - பட்டதாரி
எப்புடியாவது இதவிட அதிக
சம்பளத்துக்கு மாறிடனும் - ஐடி பணியாளன்
கடவுளே அடுத்த சிடியோ, புதையலோ
வெளிவராம பாத்துக்கோ - மாடர்ன் சாமியார்
அம்மா, தாயே வாழ்க்கைல
திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி
.
.
.
.
.
.
.
ஆக மொத்ததில் எல்லா மனிதர்களும்
கவலையின்றி இருப்பது
மாதத்தின் 32-ஆவது நாள் மட்டுமே !!!
;D ;D ;D ;D padichathil sirithathu
-
// எப்புடியாவது அந்த பஸ்ஸ்டாண்ட்
பொண்ண நாளைக்கு மடக்கிடனும்- ரோமியோ //
nalla velai remo nu podama pona palakkathosathula
// கடவுளே அடுத்த சிடியோ, புதையலோ
வெளிவராம பாத்துக்கோ - மாடர்ன் சாமியார் //
// அம்மா, தாயே வாழ்க்கைல
திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி//
super
-
நா வாய் விட்டு சிரிச்சேன் ..
-
நானும் :D :D :D