FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 23, 2011, 09:48:49 PM

Title: எனது ஹைக்கூ
Post by: Global Angel on November 23, 2011, 09:48:49 PM
எனது ஹைக்கூ  


தலை சுற்றினாலும்
கண்ணொளி மங்கவில்லை
கலங்கரை விளக்கில்.

ஓயாமல் பெருக்கினாலும்
முற்றத்தில் குப்பை
தென்னங்கீற்றின் நிழல்.

தினம் கடலில் மூழ்கி
எழுந்தாலும்
சூரியனில் வெப்பம்.

கருமி வீட்டின்
மர நிழலில்
வழி போக்கன்.

தீயில் காகிதம்
கருகவேயில்லை
ஓவியனின் திறமை.

குப்பை கூளத்தில்
கோழி இரை
தேடியது.

செத்துக் கிடந்தவனின்
மீது எறும்பும் ஈயும்
இரை தேடியது.

பிச்சைக்காரனின்
பந்திக்கு
நாய்களும் விருந்தினர்கள்.

நீண்ட தன் நிழல்
கண்டு குதூகலித்தான்
குள்ளன்.

சுண்டல் விற்கும்
சிறுவன் உண்டு
இரண்டு நாளாம்.

பூ விற்கும்
சிறுமி பெயர்
ரோஜா என்றாள்.

திருடன் வீட்டு
பூட்டிற்கு
சாவி கிடையாதாம்.

பள்ளியறைகுள்ளே
மணமகன்
வாத்தியாராம்.

வீட்டிலிருந்த
காற்றாடி
காற்றடித்தும் ஆடவில்லை.

பிச்சி பூ
வைத்திருந்தாள்

padithathil rasiththathu
இதழேதும் பிய்யாமல்.
 
Title: Re: எனது ஹைக்கூ
Post by: RemO on November 23, 2011, 10:20:52 PM
very nice

nanum rasiththen