FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 13, 2014, 04:26:51 PM

Title: ~ இளமையாக இருக்க...! ~
Post by: MysteRy on January 13, 2014, 04:26:51 PM
இளமையாக இருக்க...!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1389504540.jpeg&hash=179d4d09e6f70c761b93efbf7f091db28f756ac2)


* முகத்துக்கு ஆவி பிடித்தால், எந்த வகை சருமத்தினருக்கும் நல்லது. ஆவி பிடிப்பதால், முகத்திலுள்ள, கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் திறக்கப்பட்டு, அதில், அடைந்து கிடக்கும் அழுக்குகள் வெளியேறி, முகம் மற்றும் கழுத்துப் பகுதி, புத்துணர்வு பெறுகிறது. பத்து நாட்களுக்கு, ஒரு முறை, இப்படி ஆவி பிடிக்கலாம். அதே போல், ஆவி பிடித்ததும், குளிர்ந்த நீரால், முகத்தை கழுவி விட வேண்டும். திறந்த துவாரங்கள் மூடிக் கொள்ள, இது உதவுகிறது.

* அழுக்கு நீங்கி தோள் பளபளக்க, கடலைமாவை, ஸ்கரப்பாக பயன்படுத்தலாம். முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கும் திறன் இதற்கு உண்டு. முகத்தின் தசைகளை இறுக்கமாக்குவதோடு, இளமையை தக்க வைக்கும் குணமும், இதற்கு உண்டு.