FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 11, 2014, 12:38:30 PM
-
ஒரே வார்த்தையில்
அழகிய கவிதை..
நீ...
இரண்டு வார்த்தையில்
வாசிக்க விரும்பினால்
நாம்...
மூன்று வார்த்தையில்
மனம் நிறைத்திட , நம்
காதல்..
வார்த்தைகளே இல்லா வசீகர கவிதைவேண்டினால்...
உன் கொஞ்சும் நினைவு ...
உயிர்சான்றாய் உயர்வான
என் உயிர் கவிதை ..
நீ .. இருக்க..
வெறும் வார்த்தை கவிதைகளை
குறிப்பெடுத்து நான்
எதை வெல்வேன்???
-
கவிதை அருமை..,
உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் முடிந்த போது வந்து பெற்றுக் கொள்ளுங்கள் :) :)
-
என் பதிப்பிற்கும்
அருமை என்று கருத்திட நீங்கள் இருப்பதே பெரும் விருது
இதில் தனியாக எதற்கு விருதும் பட்டமும் ..
நன்றி !!
-
உயிர்சான்றாய் உயர்வான
என் உயிர் கவிதை ..
நீ .. இருக்க..
வெறும் வார்த்தை கவிதைகளை
குறிப்பெடுத்து நான்
எதை வெல்வேன்???
Super lines..
-
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றி !!
-
super...arumaiyaana sinthanai! thodarnthu ezhutha vaazhthukkal :)
-
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
நன்றி !!