FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 06, 2014, 01:43:42 PM

Title: சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்--காய்கறிகளின் மருத்துவ குணங்களும்
Post by: MysteRy on January 06, 2014, 01:43:42 PM
சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்--காய்கறிகளின் மருத்துவ குணங்களும் :-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/1525692_665924283429890_1407395942_n.jpg) (http://www.friendstamilchat.com)


கோவைக்காய்

என்ன இருக்கு :-
விட்டமின் ஏ

யாருக்கு நல்லது :-
நீரிழிவு நோயாளிகளுக்கு

பலன்கள் :- வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.

புடலங்காய்

என்ன இருக்கு :-
உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது :-
மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் :-
ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.


பாகற்காய்

என்ன இருக்கு:-
பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது

யாருக்கு நல்லது:-
சர்க்கரை நோயாளிகளுக்கு

யாருக்கு வேண்டாம்:-
வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்:-
தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.

சுரைக்காய்

என்ன இருக்கு:-
நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது:-
எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்

யாருக்கு வேண்டாம்:-
சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு

பலன்கள்:-
இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.


பூசணிக்காய்

என்ன இருக்கு:-
புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்:-
ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது

யாருக்கு நல்லது:-
குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது

பலன்கள்:-
நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.


கொத்தவரைக்காய்

என்ன இருக்கு :-
நார்ச்சத்து

யாருக்கு நல்லது :-
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்:-
சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.

பலன்கள்:- ருசி மட்டுமே