FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 03, 2014, 10:52:40 AM

Title: ~ எளிய பாட்டி வைத்தியம்:- ~
Post by: MysteRy on January 03, 2014, 10:52:40 AM
எளிய பாட்டி வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/1530531_663130437042608_1951595914_n.jpg)


உடல் மினுமினுக்க

அகத்திக்கீரை, ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து, அடை தட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நெல்லெண்ணெயில் வடை சுடுவது போல் சுட்டு எடுத்துவிட்டு, எண்ணெயைப் பத்திரப்படுத்தி வைத்து, தினமும் அதை உடலில் தடவிக் குளித்தால் உடல் மினுமினுக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.

உடல் வனப்பு

சிறுகீரையை குடை மிளகாய், சிறு பருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச் சமைத்து, தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையை நெய்யில் வதக்கி, அத்துடன் சிறிது மிளகு, உப்பு சேர்த்துக் கடைந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால் உடலுக்கு அழகும், பொன்னிறமும் ஒரு சேர உண்டாகும். நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்க்கையும் பெறலாம்.

உடல் வலி

துத்திக் கீரையை தண்ணீரில் போட்டு வேக வைத்து பிறகு, தண்ணீரில் போட்டு குளித்தால், உடல் வலிகள் சரியாகும்.
Title: Re: ~ எளிய பாட்டி வைத்தியம்:- ~
Post by: MysteRy on March 04, 2014, 01:49:28 PM
எளிய பாட்டி வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1/1959971_697028383652813_1030081875_n.jpg)


பித்தப் பை கல்

கரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும்.

பித்த வெடிப்பு

அகத்திக்கீரை, மருதாணி இலை, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால், கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கள் குணமாகும்.

புற்றுநோய்

கரிசலாங்கண்ணி கீரைச் சாறு (30 மிலி), பருப்புக் கீரை சாறு (30மிலி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.

புண்

பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால், அவை பழுத்து உடைந்து குணமாகும். மேலும் புண், அக்கிப்புண், நெறிக்கட்டி போன்றவற்றின் மீது பூசினால் குணம் பெறலாம்.
Title: Re: ~ எளிய பாட்டி வைத்தியம்:- ~
Post by: MysteRy on March 27, 2014, 07:18:52 PM
எளிய பாட்டி வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/t1.0-9/10153689_707612435927741_237598187_n.jpg)


நுரையீரல் நோய்

பொடுதலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சள, கபம், நுரையீரல் நோய்கள் குணமாகும்.

துயிலிக் கீரைச் சாறில் நல்லெண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி, மார்பில் தேய்த்துக்கொண்டால், நுரையீரல் கோளாறுகள் தீரும்.

நெஞ்சு எரிச்சல்

குப்பைக் கீரையுடன் ஓமம், மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

முக்குளிக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஓமம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

பருமன்

சிறுகீரை (2 கை அளவு), பார்லி (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.

மணத்தக்காளிக் கீரையை (100 கிராம்) சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் எலுமிச்சம் பழத்தை (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை (2) அரிந்து போட்டு அரைத்துச் சாறு எடுக்கவும். இதைக் காலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டால், உடல் எடை, பெருவயிறு போன்றவை குறையும்.

பால்வினை நோய்

பசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், ஆண்குறியில் உள்ள புண், சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்கள் முழுமையாக குணமாகும்.