FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 30, 2013, 08:05:44 PM

Title: ~ முடியை பாதுகாக்க...இய‌ற்கை வைத்தியம்! ~
Post by: MysteRy on December 30, 2013, 08:05:44 PM
முடியை பாதுகாக்க...இய‌ற்கை வைத்தியம்!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1382247359.jpeg&hash=b0fe73e4f4f0b8cb4814103b07c3f023eab445ba)


* உளுத்தம் பருப்பை வேக வைத்து, பசையாக்கி, தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து பின், குளிக்கவும். பொடுகு, பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
* எலுமிச்சை சாறை, தேங்காய் எண்ணெய் அல்லது பாலில் கலந்து தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கி, முடி மிருது வாக இருக்கும்.
* வெற்றிலையை அம்மியில் அரைத்து விழுதாக்கி, தலையில் பூசி, அரைமணி நேரம் ஊறிய பின், குளித்தால், உடல் சூடு தணிவதுடன், நரை நீங்கி, முடி மிருதுவாக இருக்கும். மேலும், தலையில் புண் இருந்தாலும் குணப்படுத்தும்; பொடுகு நீங்கும்.
* கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி, தலையில் தேய்த்து வர, நரைமுடி குறையும்.