FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 27, 2013, 10:56:48 AM

Title: நல்லவளே நல்ல வேலை ...
Post by: aasaiajiith on December 27, 2013, 10:56:48 AM

 
நல்லவளே !

நல்ல வேலை ,

நடைபோடும் நந்தவனம் நீ
நான்கு பேர் குழுமும் இடங்களில்
நைட்டி அணிந்தவளாய் நடந்திடவில்லை
நடந்திருந்தால் .......

கொள்ளை எழில் கொண்டவர்களாய்
வெள்ளை உடை அணிந்த தேவதைகளாய்
உலவிடும் வெள்ளை தேவதைகள்
தம் சீருடையினை,வேருடையாய் மாற்றிட
நச்சரித்து தொல்லை புரிந்திருப்பர் நல்லவர் இயேசுவை .

சேலை, சுடி, சல்வார் அணிவோரெல்லாம்
நாணத்தில் நானியிருப்பர், நாணத்தினால்
தம் முகமும் மனமும் கோனியிருப்பர்
..

நாணி நாணியே நாளைடைவினில்
சேலை , சுடி, சல்வார் அணிந்திடும் நாகரீகமே
நலிந்து நலிந்து நைந்தே போயிருக்கும் ...

நைட்டி அணிந்தவளாய் நடந்திடவில்லை
நடந்திருந்தால் .......
Title: Re: நல்லவளே நல்ல வேலை ...
Post by: sasikumarkpm on December 31, 2013, 11:20:26 AM
super'nga....
Title: Re: நல்லவளே நல்ல வேலை ...
Post by: aasaiajiith on January 01, 2014, 02:41:14 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
 நன்றி !!!