FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 08, 2013, 06:57:15 PM

Title: ~ புல்லாமணக்கு மூலிகை வசியம் ( Pullamanakku herbal Vasiyam )..! ~
Post by: MysteRy on December 08, 2013, 06:57:15 PM
புல்லாமணக்கு மூலிகை வசியம் ( Pullamanakku herbal Vasiyam )..!

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/q71/528247_530703800356277_1117042129_n.jpg)


சித்தர்கள் கண்டறிந்த அபூர்வ வகை மூலிகைகளில் ஒன்றுதான் "புல்லாமணக்கு"எனும் மூலிகையாகும். இது பல்வேறு வகையான வசியம் செய்ய உதவுகின்றது.

இம் மூலிகையினைக் கொண்டு ஆண் வசியம், பெண் வசியம், தூப (புகை)வசியம், வசிய மை, வசிய ஈடு,-ஈடு மருந்து முறிவு,போன்ற ஏராளமான வசிய வேலைகளுக்கு மாந்திரீகவாதிகள் காலம் காலமாக "பரம ரகசியமாக"கையாண்டு வருகின்றனர்.

இன்றும் கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் இதனைப் பயன்படுத்துபவர்கள் பரவலாக உள்ளனர்.

இம்மூலிகையின் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம், மாயாஜால வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது. என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.

இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் ஒரு அரிய தகவலாகவே பதிவு செய்கின்றோம். மேலும் இம்முறைகளை கையாள விரும்புபவர்கள் சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.

வசிய தூபம் முறை

1-நிலம்புரண்டி வேர்
2-புல்லாமணக்கு கிழங்கு
3-தொட்டால் வாடி வேர்
4-தொட்டால் சுருங்கி வேர்

இவைகளை அம்மியில் இட்டு "பேய் கரும்பு"சாறு விட்டு 5-மணி நேரம் அரைத்து கடலை பிரமாணம் அளவு உருட்டி காய வைத்து பாட்டலில் பதனம் செய்யவும். இதை வேண்டும் போது ஒரு உருண்டை எடுத்து சாம்பிராணி கொஞ்சம் சேர்த்து தூபமாக (புகையாக)போட்டால் புகை பட்டவர்கள் எல்லாம் வசியமாவர்கள்.

ஆண் பெண் வசிய ஈடு

1-சுழல் வண்டு -4
2 -குளியானை -3
3 -இந்திரகோபம் -10
4 -புல்லாமணக்கு கிழங்கு -5
5 -கோவை விதை -10
6 -பொன்னூமத்தை விதை -30
7 -தகரை விதை -10
8 -தொட்டால் வாடி வேர் -3
9 -மருளூமத்தை விதை -5

இவைகளை அம்மியில் இட்டு பேய்க் கரும்புச் சாறு விட்டு 10-மணி நேரம் அரைத்து குன்றிமணி பிரமாணம் குளிகை செய்து உலர்த்தி ஒரு பாட்டலில் பதனம் செய்யவும். வேண்டும் போது ஒரு குளிகை எடுத்து தனது ரத்தம் சேர்த்து தின் பண்டங்களில் கலந்து கொடுக்க வசியம் ஆவர். இணை பிரியாத தம்பதிகளாவார்கள்.

வசிய ஈடு மருந்து முறிவு

சுயநலத்தின் காரணமாக ஒருவரின் பிடியில் வசிய மருந்தினால் உள்ளஒருவரை அதன் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டுவரவும் இம் மூலிகை "புல்லாமணக்கு" உதவுகின்றது.

புல்லாமணக்கு கிழங்கு மூன்று எடுத்து நெய் விட்டு வறுத்து உண்ணவும். இது போல் மூன்று நாள் காலை மாலை ஆறு வேளை சாப்பிட ஈடு மருந்தின் வேகம் முறிந்து தனது சுயநிலையை அடைவார்கள்.